search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நித்யானந்தா"

    • கைலாசா நாட்டுக்கு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்ததாக அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களில் புகைப்படம் வெளியிட்டு உள்ளனர்.
    • ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் கைலாசா சார்பில் பெண் சாமியார் விஜயபிரியா தலைமையிலான தூதுக்குழு பங்கேற்ற புகைப்படங்கள் இருந்தன.

    ஜெனீவா:

    சர்ச்சை சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற பெயரில் நாட்டை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கைலாசா நாட்டுக்கு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்ததாக அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களில் புகைப்படம் வெளியிட்டு உள்ளனர்.

    அதில் ஜெனீவாவில் கடந்த மாதம் (பிப்ரவரி) 24-ந்தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் கைலாசா சார்பில் பெண் சாமியார் விஜயபிரியா தலைமையிலான தூதுக்குழு பங்கேற்ற புகைப்படங்கள் இருந்தன. அவர் சில கருத்துகளையும் பதிவு செய்திருந்தார்.

    இதுகுறித்து ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்து உள்ளார்.

    அதில் அவர், 'கடந்த பிப்ரவரி 24-ந்தேதி நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் என யார் வேண்டுமானாலும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. அதில்தான் நித்யானந்தா தரப்பினர் பங்கேற்று உள்ளனர்.

    அவர்கள் கூறியதை நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

    • கைலாசா நாட்டுக்கு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்ததாக கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டனர்.
    • புகைப்படங்களில் கைலாசா பிரதநிதிகள் சிலர் அமெரிக்காவின் சில நகரங்களில் பிரதிநிதிகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்வது போன்று காட்சிகள் இருந்தன.

    ஜெனிவா:

    சர்ச்சை சாமியார் நித்யானந்தாவின் கைலாசா நாடு எங்கே இருக்கிறது என்பது பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

    அதே நேரம் தென் அமெரிக்க நாடான ஈக்வடார் மற்றும் டிரினிடாட் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அவர் கைலாசா என பெயர் சூட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே கைலாசா நாட்டுக்கு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்ததாக கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டனர்.

    அந்த புகைப்படங்களில் கைலாசா பிரதநிதிகள் சிலர் அமெரிக்காவின் சில நகரங்களில் பிரதிநிதிகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்வது போன்று காட்சிகள் இருந்தன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைலாசாவில் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் வெளியான சில புகைப்படங்கள் கைலாசா பற்றிய பரபரப்பை அதிகரித்து உள்ளது. அதில் ஜெனிவாவில் கடந்த பிப்ரவரி 24-ந்தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் பொருளாதார, சமூக பண்பாட்டு உரிமைகள் என்ற தலைப்பிலான கூட்டத்தில் கைலாசா சார்பில் பெண் சாமியார் விஜய பிரியா தலைமையிலான தூதுக்குழு பங்கேற்ற புகைப்படங்கள் இருந்தன.

    இந்த மாநாட்டில் விஜய பிரியா பேசும் போது, எங்களது பரமகுருவான நித்யானந்தா மற்றும் கைலாசாவில் வசிக்கும் 20 லட்சம் இந்து மக்கள் மீதான அடக்குமுறையை தடுக்க சர்வதேச நாடுகள் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்று பேசி உள்ளார்.

    விஜய பிரியாவுடன் கைலாசா லாஸ் ஏஞ்சல்ஸ் தலைவர் முக்திகா ஆனந்த், செயின்ட் லூயிஸ் தலைவர் சோனா காமத், இங்கிலாந்தின் கைலாசா சபை தலைவர் நித்யா ஆத்ம தாயி, பிரான்சின் தலைவர் நித்யா வெங்கடேசனந்தா ஆகிய 5 பெண் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

    இதற்கிடையே மாநாட்டில் பங்கேற்று பேசிய கைலாசா பிரதிநிதி விஜய பிரியா பற்றிய தகவல்களும் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டனில் அவருக்கு வீடு இருப்பதாக கைலாசாவில் இணைய தள பக்கங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    மேலும் விஜய பிரியா ஐ.நா.வுக்கான கைலாசா நாட்டின் நிரந்தர தூததராக நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதோடு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் பிரதிநிதிகளுடன் சில ஒப்பந்தங்களில் விஜய பிரியா கையெழுத்திடும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

    கைலாசா நாட்டில் தூதரகங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பல நாடுகளில் திறந்துள்ளதாக விஜய பிரியா கூறியுள்ளார்.

    • பல நாடுகளில் இருந்தும் வந்திருந்த பெண் பிரதிநிதிகளுடன் உரையாடிய கைலாசா பிரதிநிதிகள் அவர்களுக்கு நித்யானந்தாவின் புத்தகங்களை பரிசாக வழங்கி உள்ளனர்.
    • கூட்ட அரங்கில் நித்யானந்தாவின் புகைப்படத்தை வைத்து அதனை வழிபடுவது போன்ற ஒரு புகைப்படத்தை கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

    கர்நாடகா, குஜராத்தில் உள்ள வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடினார்.

    அவர் இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்ததோடு அந்த நாட்டுக்கான தனி கொடி, தனி பாஸ்போர்ட், ரூபாய் நாணயங்கள் உள்ளிட்டவற்றையும் அறிமுகப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    தொடர்ந்து சமூக வலைதளங்கள் வாயிலாக வீடியோக்கள் வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். மேலும் சமீபகாலமாக கைலாசா நாடு பல்வேறு வெளிநாடுகளில் உள்ள முக்கிய நகரங்களுடன் வர்த்தக ரீதியாக ஒப்பந்தம் செய்துள்ளதாக அவரது அதிகாரப்பூர்வ இணைதள பக்கங்களில் புகைப்படங்கள் வெளியாகின.

    அந்த வகையில் சமீபத்தில் கைலாசா நாட்டை அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்ததாக கூறி அதுதொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தனர்.

    இந்நிலையில் கடந்த 22-ந்தேதி ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டம் நடந்துள்ளது. பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை நீக்குவதற்கான குழுவின் கூட்டமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் கைலாசா சார்பில் ஐ.நா.வுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் மா விஜயபிரியா நித்யானந்தா, கைலாசா லாஸ்ஏஞ்சல்ஸ் தலைவர் மா முக்திகா ஆனந்தா, கைலாசா செயிண்ட் லூயிஸ் தலைவர் மா சோனா காமத், மா நித்யா ஆத்மநாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

    பல நாடுகளில் இருந்தும் வந்திருந்த பெண் பிரதிநிதிகளுடன் உரையாடிய கைலாசா பிரதிநிதிகள் அவர்களுக்கு நித்யானந்தாவின் புத்தகங்களை பரிசாக வழங்கி உள்ளனர். முன்னதாக கூட்ட அரங்கில் நித்யானந்தாவின் புகைப்படத்தை வைத்து அதனை வழிபடுவது போன்ற ஒரு புகைப்படத்தை கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

    இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சமீபத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் சில கோவில்களை நித்யானந்தா விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • வருகிற 18-ந் தேதி மகா சிவராத்திரி விழாவை கைலாசாவில் சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

    புதுடெல்லி:

    சாமியார் நித்யானந்தா சமூக வலைதளங்கள் மூலம் வீடியோக்களை வெளியிட்டு பக்தர்களிடம் சொற்பொழிவாற்றி வருகிறார்.

    இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி உள்ளதாக அறிவித்திருந்த அவர் அங்கிருந்தபடி பல்வேறு நாடுகளிலும் உள்ள அவரது சிஷ்யர்கள், பக்தர்களிடம் பேசி வருகிறார்.

    இதுவரை கைலாசா நாடு எங்கிருக்கிறது என்ற பல யூகத்தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இது தொடர்பாக புதிய தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதாவது, பசிபிக் பெருங்கடல் பகுதியில் கோஸ்டாரிகா தீவுகளில் ஒன்றில் தான் கைலாசா அமைந்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

    சமீபத்தில் கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில், கைலாசா நாட்டை அமெரிக்கா அங்கீகரித்தாக கூறப்பட்டு இருந்தது.

    இதுதொடர்பாக அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள நெவார்க் நகரம், கைலாசா இடையே ஒப்பந்தம் கையெழுத்திடுவது போன்ற புகைப்படங்களை அவரது சீடர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி இருந்தனர்.

    ஏற்கனவே இதுபோன்று ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள சில நகரங்கள் மற்றும் சில வெளிநாடுகளில் உள்ள நகரங்களுடன் வர்த்தக ரீதியான ஒப்பந்தங்களை செய்திருப்பதாக கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணைய தளங்களில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    அடுத்தடுத்து பல நாடுகளிலும் உள்ள பெரிய நகரங்களுடன் உறவை மேம்படுத்தி வரும் நித்யானந்தா அந்த நாடுகளில் இருந்து கைலாசாவுக்கு முதலீடுகளை ஈர்த்து வருமானத்தை பெருக்குவதற்காக திட்டங்களையும் தீட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சமீபத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் சில கோவில்களை நித்யானந்தா விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பல நாடுகளில் தனது ஆசிரமங்களை திறக்கவும் அவர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    முதலீடுகள் மூலம் கைலாசாவில் அனைவருக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக திட்டங்களையும் அவர் வகுத்து வருவதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே, வருகிற 18-ந் தேதி மகா சிவராத்திரி விழாவை கைலாசாவில் சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

    கடந்த 5-ந்தேதி தைப்பூசம் கைலாசாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. இந்நிலையில் நித்யானந்தா இருக்கும் மகா கைலாசாவில் மட்டுமின்றி பெங்களூரு, திருவண்ணாமாலை உள்பட பல இடங்களில் உள்ள அவரது ஆசிரமங்களிலும் மகா சிவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கைலாசா நாட்டுக்கு என தனி கொடி, பாஸ்போர்ட், ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவற்றை நித்யானந்தா அறிமுகப்படுத்தினார்.
    • நித்யானந்தா தொடர்ந்து ஆன்லைன் மூலம் பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வந்தார்.

    புதுடெல்லி:

    கர்நாடகா, குஜராத்தில் உள்ள வழக்குகள் காரணமாக வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய சாமியார் நித்யானந்தா அவ்வப்போது சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

    அவர் கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் கைலாசா நாட்டுக்கு என தனி கொடி, பாஸ்போர்ட், ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவற்றையும் அறிமுகப்படுத்தினார்.

    இதைத்தொடர்ந்து நித்யானந்தாவை பிடிப்பதற்காக குஜராத் போலீசார், சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) உதவியை நாடி உள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் இன்டர்போல் மூலமாக புளூகார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு நித்யானந்தாவை தேடும் பணி நடைபெற்று வருவதாக குஜராத் போலீசார் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் சமீபத்தில் நித்யானந்தாவின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. ஆனாலும் நித்யானந்தா தொடர்ந்து ஆன்லைன் மூலம் பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வந்தார். அவர் எங்கிருந்து இந்த வீடியோக்களை வெளியிடுகிறார் என்பது மர்மமாகவே இருந்து வருகிறது.

    இதற்கிடையே நித்யானந்தாவை கண்டு பிடிப்பதற்காக புளூகார்னர் நோட்டீஸ் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என இன்டர்போல் மறுத்துள்ளது. இதுதொடர்பாக இன்டர்போலின் தலைமை செயலகத்தில் இருந்து 2 கடிதங்கள் வெளியாகி உள்ளது. அதில் நித்யானந்தாவுக்கு எதிராக எந்த நோட்டீஸ் அல்லது பிடிவாரண்டு எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கவில்லை என கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது நித்யானந்தா வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நித்யானந்தா கைலாசா எனும் தனித்தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டார்.
    • நித்யானந்தாவின் கைலாசாவை நாடாக அமெரிக்க நகர நிர்வாகம் அங்கீகரித்து உள்ளது.

    வாஷிங்டன்:

    பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தலைமறைவானார். ஆனால் நித்யானந்தா கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக இணையதளத்தில் தோன்றி அறிவித்தார்.

    இந்நிலையில், நித்யானந்தாவின் கைலாசா நாட்டை இறையாண்மை பெற்ற நாடாக அங்கீகரித்து இருக்கிறது அமெரிக்க நெவார்க் நகர நிர்வாகம். இருதரப்பு மக்களின் மேம்பாட்டுக்குத் தேவையான வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக கையெழுத்தாகிறது.

    நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நிவார்க் நகரத்தின் சார்பில் அதன் மேயரும் கைலாசாவின் தூதர் விஜயப்பிரியா நித்யானந்தாவும் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவில் வழக்கில் தேடப்படும் ஒருவரை விருந்துக்கு அழைத்ததற்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் சில மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
    • இங்கிலாந்தை சேர்ந்த நித்யானந்தாவின் வழக்கறிஞர் ரிச்சர்ட் ரோஜர்ஸ் இந்த சம்பவத்தை மறுத்துள்ளார்.

    புதுடெல்லி:

    சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடிய நிலையில், கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வந்த அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை பாதிப்பு என்று தகவல்கள் வெளியானது.

    ஆனாலும் அவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

    இந்நிலையில் தீபாவளியின்போது லண்டனில் இங்கிலாந்து எம்.பி.க்கள் 2 பேர் நித்யானந்தாவை விருந்துக்கு அழைத்ததாக இங்கிலாந்து ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஹவுஸ் ஆப் லாட்சில் உள்ள சோல்மண்டேலியில் இந்து போரம் ஆப் பிரிட்டன் என்ற அமைப்பு சார்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

    இதில் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி. பாப் பிளாக்மேன் மற்றும் ஹவுஸ் ஆப் லார்ட்ஸ் உறுப்பினர் ராமி ரேஞ்சர் ஆகியோருடன் நித்யானந்தா சார்பில் அவரது பிரதிநிதியான நித்ய ஆத்மயானந்தா பங்கேற்றதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் வழக்கில் தேடப்படும் ஒருவரை விருந்துக்கு அழைத்ததற்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் சில மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், நித்யானந்தா மற்றும் அவரது அமைப்பை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இந்து போரம் ஆப் பிரிட்டன் அமைப்பு நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு மட்டும் உதவினேன் என ராமி ரேஞ்சர் கூறி உள்ளார்.

    இதற்கிடையே இங்கிலாந்தை சேர்ந்த நித்யானந்தாவின் வழக்கறிஞர் ரிச்சர்ட் ரோஜர்ஸ் இந்த சம்பவத்தை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆதாரமற்ற வகையில் நித்யானந்தா குறித்து இவ்வாறு செய்தி வெளியாகி உள்ளது. அவரை குறித்து இதுபோன்ற தகவல்கள் பரப்பப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

    • முதலில் பிடதி ஆசிரமத்தில் தகுதிக்கேற்ப வேலை அளிக்கப்படும்.
    • திறமையை பொறுத்து கைலாசாவிற்கே வரும் வாய்ப்பு உள்ளதாக தகவல்.

    சென்னை:

    பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த நித்யானந்தா, பெண் சீடர்களை கட்டாயப்படுத்தி அடைத்து வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்கில் கடந்த 2010-ஆண்டு இமாச்சல பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட நித்யானந்தா கர்நாடகா மாநிலம் ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு ஜாமீனில் வெளியே வந்த நித்யானந்தாவுக்கு தலைமறைவானார்.

    இந்த வழக்கின் விசாரணைக்காக பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் நித்யானந்தா நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து ராம்நநகர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவான நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவை வாங்கி அங்கே குடியேறி விட்டதாக இணையதளத்தில் தோன்றி அறிவித்தார். அவரது பக்தர்களுக்கு அடிக்கடி இணையதளத்தில் தோன்றி உரையாற்றினார்.


    கைலாசா நாட்டை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா.77-வது பொதுச்சபை கூட்டத்தில் கைலாசா சார்பில் ஐ.நாவுக்கான தூதராக நித்யானந்தாவின் சிஷ்யைகளில் ஒருவரான விஜயபிரியா பங்கேற்றதாகவும் தகவல்கள் வெளியாகின.

    கைலாசா எ​ங்கே இருக்கிறது என்ற கேள்விக்கே இதுவரை விடை கிடைக்காத நிலையில் இப்போது அங்கே வேலை வாய்ப்பு உள்ளதாக வெளி வந்துள்ள ஒரு விளம்பரம்  இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கைலாசாவில் பிளம்பிங் வேலை முதல் கணினி தொழில்நுட்ப பணிவரை தகுதிக்கேற்ப வேலை உள்ளது என்றும், தங்குமிடம், உணவு, மருத்துவ வசதி என அத்தனையும் இலவசம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடவே ஆன்மிக பயிற்சியும் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    மேலும் இது குறித்து இணையத்தில் நித்தியானந்தா சீடர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது. வேலை வேண்டுவோருக்கு முதலில் கர்நாடகா மாநிலம் பிடதி ஆசிரமத்தில் தகுதிக்கேற்ப வேலை அளிக்கப்படும் என்றும் அவர்களது திறமையை பொறுத்து கைலாசாவிற்கே வரும் வாய்ப்பு உள்ளதாகவும் அந்த நபர் தெரிவிக்கிறார். இந்த நிலையில் கைலாசா வேலை வாய்ப்பு விளம்பரம் தொடர்பாக சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கைலாசா நாட்டின் பேஸ்புக் பக்கத்தில் நித்யானந்தா 8 சாதனைகளை படைத்துள்ளதாகவும், அவை ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மூலம் ஏற்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
    • அதிகபட்ச பிரமோற்சவங்கள், அதிக நேரம் பொது சொற்பொழிவு வழங்கியது உள்ளிட்ட 8 சாதனைகளை நித்யானந்தா படைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    சாமியார் நித்யானந்தா சமூகவலைதளங்களில் தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

    இந்நிலையில் கைலாசா நாட்டின் பேஸ்புக் பக்கத்தில் நித்யானந்தா 8 சாதனைகளை படைத்துள்ளதாகவும், அவை ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மூலம் ஏற்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    அதாவது ஒரு மணி நேரத்தில் அதிக வசனங்களை உச்சரித்தது, ருத்ர மந்திரத்தை அதிக நேரம் வாசித்தது, உயிருடன் வாழும் ஒருவருக்கு அதிக பாடல்களை அர்ப்பணித்தது, தனி ஒருவரின் அதிகபட்ச புத்தகங்கள் (1,123 புத்தகங்கள்), அதிகபட்ச பாரம்பரிய ஆசனங்கள், அதிகபட்ச பிரமோற்சவங்கள், அதிக நேரம் பொது சொற்பொழிவு வழங்கியது (7,407 தலைப்புகளில் 289,928 மணி நேரம்) உள்ளிட்ட 8 சாதனைகளை நித்யானந்தா படைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    • நித்யானந்தா பலருக்கு தர்ம ரட்சகர் விருது அறிவித்துள்ளார்.
    • தற்போது இவர் இயக்குனர் பேரரசுக்கு இந்த விருதை அறிவித்துள்ளார்.

    சாமியார் நித்யானந்தாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையிலும் அவர் தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் பக்தர்கள் மத்தியில் சத்சங்க உரையாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் விஜயதசமியையொட்டி கைலாசாவில் நடந்த நிகழ்ச்சியில் ஏராளமானோருக்கு விருது அறிவித்திருந்தார்.


    பேரரசு

    இதில் பா.ஜனதாவின் ஓ.பி.சி. அணி மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா சிவாவுக்கு தர்ம ரட்சகர் விருதை நித்தியானந்தா அறிவித்தார். இந்து மதத்தின் புகழை ஊடகங்களில் தொடர்ந்து பரப்பி வருவதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக நித்யானந்தா தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அடுத்ததாக இந்த தர்ம ரட்சகர் விருது இயக்குனர் பேரரசிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நித்யானந்தா கூறுகையில், "உங்களுடைய இந்து மதப்பற்றும் இந்து மதத்திற்காக நீங்கள் தொடர்ந்து குரல் கொடுப்பதும் களம் காணுவதும் நீங்கள் செய்கின்ற மிகப்பெரும் பணிகளை நன்கு அறிவேன்.


    நித்யானந்தா

    உங்களுடைய எல்லா திரைப்படத்தின் தலைப்புகளுமே ஆன்மிக ஸ்தலங்களின் பெயர்களாக தான் இருக்கும். உங்களுடைய இந்து மதப்பணி மிகப்பெரிய பணி. அதற்காக தலைவணங்குகிறேன். உங்களோடு என்றும் தோல் கொடுத்து நிற்பேன். நானும் கைலாசமும் நீங்கள் செய்யும் இந்து மதப் பணிக்கு என்றும் உறுதுணையாக நிற்போம்." என்று கூறினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    • நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 77-வது பொதுச்சபை கூட்டத்தில் ஏராளமான சிறிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று பேசி உள்ளனர்.
    • கைலாசா சார்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதர் என்ற பெயரில் நித்யானந்தாவின் சிஷ்யைகளில் ஒருவரான விஜயபிரியா பங்கேற்றுள்ளார்.

    சாமியார் நித்யானந்தா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக இலங்கையிடம் தஞ்சம் கேட்டதாக தகவல்கள் வெளியானது.

    ஆனால் அதற்கு இலங்கை தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. இதற்கிடையே நித்யானந்தா, பல்வேறு சிறிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே கைலாசா நாட்டை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.

    இந்நிலையில், நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 77-வது பொதுச்சபை கூட்டத்தில் ஏராளமான சிறிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று பேசி உள்ளனர்.

    இந்த கூட்டத்தில் கைலாசா சார்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதர் என்ற பெயரில் நித்யானந்தாவின் சிஷ்யைகளில் ஒருவரான விஜயபிரியா பங்கேற்றுள்ளார்.

    ஐ.நா. பொதுச்சபை கூட்டம் உள்ளிட்ட சர்வதேச மாநாடுகள் நடைபெறும் போது அதையொட்டி கருத்தரங்குகள், கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் பங்கேற்ற விஜயபிரியா கழுத்தில் ருத்ராட்சம், நீண்ட ஜடாமுடியுடன் இருந்தார். கையில் நித்யானந்தாவின் படத்தை பச்சை குத்தியிருந்த அவர் ஆப்ரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளின் தலைவர்களை சந்தித்து நித்யானந்தா உருவப்படத்துடன் கூடிய பெரிய புத்தகத்தை வழங்கினர்.

    மேலும், அந்த நாடுகளின் தலைவர்களுடன் எடுத்த புகைப்படங்களை கைலாசா நாட்டின் அதிகாரப்பூர்வ சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

    • கைலாசாவில் வசிப்பதாக சொல்லிக் கொண்டிருக்கும் பிரபல சாமியார் நித்யானந்தா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
    • நித்யானந்தாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதற்கான காரணமாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    கைலாசாவில் வசிப்பதாக சொல்லிக் கொண்டிருக்கும் பிரபல சாமியார் நித்தியானந்தா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

    அவர் சிகிச்சை பெறுவதற்காக இலங்கை அரசின் உதவியை நாடி உள்ளார். சிகிச்சைக்கு தேவையான அனைத்து நவீன எந்திரங்களையும் தனது சொந்த செலவிேலயே வாங்கி கொள்வதாகவும் அவர் இலங்கை அரசிடம் பேச்சு நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் நித்தியானந்தாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதற்கான காரணமாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிக அளவு தியானம் செய்ததால் அவர் உடல் பாதிக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது.

    ஆனால் பின்னர் வந்த தகவல்கள் அவர் முறைகேடான செயல்களில் ஈடுபட்டதால் நோய்வாய் பட்டதாக கூறப்பட்டது. தற்போது நித்தியானந்தாவுக்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

    நித்தியானந்தாவுக்கு உலகம் முழுக்க சொத்துக்கள் இருக்கிறது. இந்தியாவில் மட்டும் சில ஆயிரம் கோடி சொத்துக்கள் அவரது மடங்களுக்கு சொந்தமாக உள்ளது. இந்த சொத்துக்களை கைப்பற்ற அவரது சிஷ்யைகளிடம் கடும் போட்டி ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    அந்த சிஷ்யைகளில் ஒருவர்தான் நித்தியானந்தாவுக்கு ரகசியமாக விஷம் கொடுத்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

    தற்போது நித்தியானந்தாவிடம் சீடர்களாக இருப்பவர்கள் 3 குழுக்களாக பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால்தான் நித்தியானந்தா உயிருக்கு ஆபத்து என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ×