search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதி ஆயோக்"

    • மத்திய அரசு அறிவிக்கும் பட்ஜெட்டில் தில்லுமுல்லு இருப்பதாக தகவல்.
    • நிதியமைச்சகம், பிரதமர் அலுவலகம் இதுவரை பதில் அளிக்கவில்லை.

    மத்திய அரசு சார்பில் வரும் பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024- 25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

    இந்நிலையில், மத்திய அரசு அறிவிக்கும் பட்ஜெட்டில் தில்லுமுல்லு இருப்பதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்," பல்வேறு உண்மைகளை பல கட்டங்களாக மூடி மறைத்த பிறகே பட்ஜெட் வெளியிடப்படுகிறது. அரசின் வரவு, செலவு கணக்கு வெளியிப்படையாக இருந்தால் உண்மையான நிதி நிலைமை தெரிந்துவிடும்" என்றார்.

    சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, நிதியமைச்சகம், பிரதமர் அலுவலகம் இதுவரை பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • குஜராத் மாநிலத்தில் 100 பேரில் மூன்று பேர் வீதம் ஊட்டச்சத்து குறைபாடு மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பு கொண்ட குழந்தைகள் அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் குஜராத் நான்காவது இடம்.

    நிதி ஆயோக் வெளியிட்டு இருக்கும் சமீபத்திய அறிக்கையின் படி, குஜராத் மாநிலத்தை சேர்ந்த சுமார் 38.09 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடு மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் கிராமபுறங்களை சேர்ந்த பாதிக்கும் மேற்பட்டோர் (44.45 சதவீதம்), நகர்ப்புறங்களில் சுமார் 28.97 சதவீதம் பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கிறது.

    பின்தங்கிய மாநிலங்களாக இருக்கும் சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்திர பிரதேசம் உள்ளிட்டவை ஊட்டச்சத்து குறைபாடு அளவில் குஜராத் மாநிலத்தை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன. தேசிய குடும்பநல கணக்கெடுப்பின் படி தேசிய அளவில் ஊட்டச்சத்து குறைபாடு மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் குஜராத் நான்காவது இடம்பிடித்துள்ளது. இந்த மாநில குழந்தைகளில் சுமார் 39 சதவீதம் பேர் தங்களது வயதிற்கு ஏற்ற எடையை விட குறைந்த எடை கொண்டிருக்கின்றனர்.

     

    கோப்புப் படம் 

    கோப்புப் படம் 

    "ஊட்டச்சத்து மிகுந்த கவனமுடன் கையாளப்பட வேண்டிய ஒன்று. 2016-ம் ஆண்டு மேற்கு வங்காள குடும்பங்களை சேர்ந்த சுமார் 33.6 சதவீதம் பேர், குஜராத் மாநிலத்தில் 41.37 சதவீதம் பேரும் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டுள்ளனர். 2021-ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் 27.3 சதவீதம் பேரும், குஜராத் மாநிலத்தில் 38.9 சதவீதம் பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது," என பொருளாதார பேராசிரியர் அட்மன் ஷா தெரிவித்தார்.

    இந்த தகவல்களின் படி குஜராத் மாநிலத்தில் ஒவ்வொரு 100 பேரில் மூன்று பேர் வீதம் ஊட்டச்சத்து குறைபாடு மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே காலக்கட்டத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் 100 பேரில் ஆறு பேர் வீதம் ஊட்டச்சத்து குறைபாடு மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நிதி ஆயோக் தகவல்களின் படி, குஜராத் மாநிலத்தின் 23.30 சதவீதம் பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு இருக்கிறது. கேரளா, பஞ்சாப மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் குஜராத்தை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன.

    நாடு முழுக்க குஜராத் மாடல் மற்றும் வளர்ச்சி என பல்வேறு தகவல்கள், கருத்துக்கள் வெளியாகி வந்துள்ளன. இந்த நிலையில், அம்மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைபாடு விவரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

    • மாநிலங்கள் நிதி ரீதியாக விவேகமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
    • தமிழகம், மேற்கு வங்காளம், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட 11 மாநில முதல் மந்திரிகள் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.

    புதுடெல்லி:

    நிதி ஆயோக் அமைப்பின் எட்டாவது ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், சுகாதாரம், திறன் மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கான பொதுவான பார்வையை உருவாக்க வேண்டியது அவசியம் என்றார். மாநிலங்கள் நிதி ரீதியாக பலமானதாகவும், மக்கள் நலத் திட்டங்களை மேற்கொள்ளும் திறன் கொண்டதாகவும் இருக்கும் வகையில் நிதி ரீதியாக விவேகமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். 

    நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள்
    நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள்

    கூட்டத்தில் மத்திய மந்திரிகள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் மற்றும் உத்தரபிரதேசம், அசாம், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர். தமிழகம், மேற்கு வங்காளம், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட 11 மாநில முதல் மந்திரிகள் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லியில் நாளை நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது.
    • இதில் அனைத்து மாநில முதல் மந்திரிகள் பங்கேற்கிறார்கள்.

    புதுடெல்லி:

    மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக நிதி ஆயோக் என்ற அமைப்பினை மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு கொண்டு வந்துள்ளது. இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். துணைத்தலைவராக சுமன் பெரி இருக்கிறார். இதன் ஆட்சிமன்ற குழுவில் அனைத்து மாநிலங்களின் முதல் மந்திரிகளும், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்களும் இடம் பெற்றுள்ளனர்.

    இதன் ஆட்சிமன்ற குழு கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு, இது பிரதமர் மோடி தலைமையில் ஆகஸ்டு மாதம் 7-ம் தேதி நடைபெற்றது.

    இதற்கிடையே, இந்த ஆண்டு நிதி ஆயோக் ஆட்சிமன்ற குழு கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் முதல் மந்திரிகளும் கலந்து கொள்கிறார்கள். மாநிலங்கள் தங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், கூட்டுறவு கூட்டாட்சி என்பது கேலிக்கூத்தாக இருக்கையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில் என்ன பயன் என டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், பிரதமர் சுப்ரீம் கோர்ட்டுக்கு கீழ்ப்படியவில்லை என்றால் மக்கள் நீதிக்கு எங்கே போவார்கள் என கேள்வி எழுப்புகின்றனர்.

    கூட்டுறவு கூட்டாட்சி என்பது கேலிக்கூத்தாக இருக்கும்போது நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் என்ன பயன் என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் முதல்-மந்திரிகளும் கலந்து கொள்கிறார்கள்.
    • இதன் ஆட்சிமன்ற குழு கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

    புதுடெல்லி :

    மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக 'நிதி ஆயோக்' என்ற அமைப்பினை மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு கொண்டு வந்துள்ளது. இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். துணைத்தலைவராக சுமன் பெரி இருக்கிறார். இதன் ஆட்சிமன்ற குழுவில் அனைத்து மாநிலங்களின் முதல்-மந்திரிகளும், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களும் இடம் பெற்றுள்ளனர்.

    இதன் ஆட்சிமன்ற குழு கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு, இது பிரதமர் மோடி தலைமையில் ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி நடைபெற்றது.

    இந்த ஆண்டு நிதி ஆயோக் ஆட்சிமன்ற குழு கூட்டம், வரும் 27-ந் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார்.

    இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் முதல்-மந்திரிகளும் கலந்து கொள்கிறார்கள். மாநிலங்கள் தங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், மாநிலங்கள் வளர்ச்சி பெற கடுமையாக உழைக்க வேண்டும், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவை நிறைவேற்றுவதற்கு இலக்கு வைத்து பாடுபட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • கூட்டு நடவடிக்கை மூலம் வளரும் நாடுகளுக்கு இந்தியா ஒரு முன்னுதாரணமாக திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    • ஜி.எஸ்.டி. வசூலை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கை தேவை என பிரதமர் வலியுறுத்தல்

    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் கலாச்சார மையத்தில் இன்று நிதி ஆயோக்கின் 7-வது நிர்வாக கவுன்சில் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாய பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவடைதல், தேசிய கல்வி கொள்கை, நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் 23 மாநில முதல்-மந்திரிகள், 3 துணைநிலை கவர்னர்கள், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், நிதி ஆயோக்கின் துணைத்தலைவர், முழுநேர உறுப்பினர்கள், மத்திய மந்திரிகள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் அதன் வலிமைக்கு ஏற்ப முக்கிய பங்காற்றியது. இந்த கூட்டு நடவடிக்கையின் மூலம் வளரும் நாடுகளுக்கு இந்தியா ஒரு முன்னுதாரணமாக திகழ்வதற்கு வழி வகுத்தது. ஜி.எஸ்.டி. வசூலை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கை தேவை. நமது பொருளாதார நிலையை வலுப்படுத்தவும், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறவும் இது முக்கியமானது.

    மேலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத் துறையை நவீனமயமாக்க வேண்டும். அதன்மூலம் விவசாயத் துறையில் இந்தியா தன்னிறைவு அடைய முடியும், உலக அளவில் முன்னணியில் இருக்க முடியும். எளிதான வாழ்க்கை, வெளிப்படையான சேவை வழங்குதல் மற்றும் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் ஆகியவற்றை உறுதிசெய்வதற்கு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் விரைவான நகரமயமாக்கல் பலவீனத்திற்குப் பதிலாக இந்தியாவின் பலமாக மாறும். சமையல் எண்ணெய் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • மாநில முதல்-மந்திரிகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்.
    • இந்த திட்டங்களில் மாநில அரசுகளின் பங்களிப்பு குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

    டெல்லியில் இன்று நிதி ஆயோக்கின் ஆட்சி மன்றக்குழு கூட்டம் தொடங்கியது. பிரதமர், மாநில முதல்- மந்திரிகள், யூனியன் பிரதேச துணைநிலை கவர்னர்கள் மற்றும் பல்வேறு மந்திரிகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த கவுன்சிலின் 7-வது கூட்டம் நடைபெற்று வருகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குப்பின் முதல் முறையாக நேரடியாக நடைபெறும் இந்த கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இதில் மாநில முதல்-மந்திரிகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் பயிர் பல்வகைப்படுத்தல், பருப்பு மற்றும் எண்ணெய் வித்து உற்பத்தியில் தற்சார்பு, புதிய கல்விக்கொள்கை அமல்படுத்துதல் மற்றும் நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், 'ஒரு நிலையான மற்றும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கான உந்துதலில், மத்திய மற்றும் மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பின் புதிய சகாப்தத்தை நோக்கி ஒருங்கிணைக்க இந்த கூட்டம் வழி வகுக்கும்' என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    மேலும் அடுத்த ஆண்டு ஜி20 உச்சி மாநாடு நடத்தும் நாடாகவும், தலைவராகவும் இந்தியா இருக்கும் நிலையில், இந்த திட்டங்களில் மாநில அரசுகளின் பங்களிப்பு குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

    • நிதி ஆயோக்கின் அதிகாரம் மிகுந்த அமைப்பான ஆட்சி மன்றக்குழு ஆண்டுதோறும் கூடுகிறது.
    • தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    புதுடெல்லி :

    நிதி ஆயோக்கின் ஆட்சி மன்றக்குழு கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் அறிவித்து உள்ளார்.

    நிதி ஆயோக்கின் அதிகாரம் மிகுந்த அமைப்பான ஆட்சி மன்றக்குழு ஆண்டுதோறும் கூடுகிறது. பிரதமர், மாநில முதல்-மந்திரிகள், யூனியன் பிரதேச துணைநிலை கவர்னர்கள் மற்றும் பல்வேறு மந்திரிகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த கவுன்சிலின் 7-வது கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் நடக்கிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குப்பின் முதல் முறையாக நேரடியாக நடைபெறும் இந்த கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இதில் மாநில முதல்-மந்திரிகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் பயிர் பல்வகைப்படுத்தல், பருப்பு மற்றும் எண்ணெய் வித்து உற்பத்தியில் தற்சார்பு, புதிய கல்விக்கொள்கை அமல்படுத்துதல் மற்றும் நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், 'ஒரு நிலையான மற்றும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கான உந்துதலில், மத்திய மற்றும் மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பின் புதிய சகாப்தத்தை நோக்கி ஒருங்கிணைக்க இந்த கூட்டம் வழி வகுக்கும்' என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    மேலும் அடுத்த ஆண்டு ஜி20 உச்சி மாநாடு நடத்தும் நாடாகவும், தலைவராகவும் இந்தியா இருக்கும் நிலையில், இந்த திட்டங்களில் மாநில அரசுகளின் பங்களிப்பு குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

    கொரோனா தொற்று பின்னணியில் நாட்டு விடுதலை நூற்றாண்டுக்கு முந்தைய 25 ஆண்டுகளில் நுழையும் இந்த காலகட்டத்தில் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் அறிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மாநிலங்கள் மீதான மத்திய அரசின் தற்போதைய பாரபட்சமான போக்கை கண்டிக்கும் வகையில் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறியுள்ளார்.

    வலுவான மற்றும் பொருளாதார ரீதியில் துடிப்பான மாநிலங்கள் மட்டுமே இந்தியாவை வலுவான நாடாக மாற்ற முடியும் என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளார்.

    அதேநேரம் இந்த கூட்டத்தில் பங்கேற்பதை உறுதி செய்துள்ள பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் சிங் மான், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டபூர்வ உறுதி உள்பட பல்வேறு பிரச்சினைகளை இந்த கூட்டத்தில் எழுப்ப போவதாக தெரிவித்தார்.

    • தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம் குறித்து விவாதிக்கப்படுகிறது.
    • மத்திய மந்திரிகள், மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

    நிதி ஆயோகின் 7-வது நிர்வாக கவுன்சில் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார்.

    வேளாண் துறையில் தன்னிறைவை எட்டுதல், மாற்றுப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்புவகைகள் மற்றும் தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம், நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து நாளைய கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

    கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின் முதல் முறையாக தற்போது இந்த கூட்டம் நேரடியாக நடைபெறுகிறது.

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், நிதி ஆயோகின் துணைத்தலைவர், முழுநேர உறுப்பினர்கள், மத்திய மந்திரிகள், சிறப்பு அழைப்பாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    தினந்தோறும் புதிய உச்சத்தை தொடும் பெட்ரோல்-டீசல் விலை ஏற்றம் குறித்து அரசு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என நிதி ஆயோக் அமைப்பின் துணை தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். #NITIAayog #RajivKumar
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு தினந்தோறும் புதிய உச்சத்தை தொடும் வகையில் இதன் விலைகள் அமைகின்றன.


    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அவதியுற வைத்து உள்ளது. அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி ஓட்டல் சாப்பாடு, உணவு பண்டங்களின் விலையும் உயர்கிற நிலை ஏற்பட்டு உள்ளது.

    இப்போதே ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் ஆங்காங்கே உயர்த்தப்பட்டு உள்ளது. கால்டாக்சி கட்டணமும் உயர்கிறது. இது சாமானிய மக்களுக்கு மிகுந்த வேதனையை அளித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது குறித்து முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்து உள்ளார்.

    இதுபற்றி அவர் கூறுகையில் ’பெட்ரோல், டீசல் விலை இடைவிடாது உயர்ந்து வருகிறது. இது தவிர்க்க முடியாதது அல்ல. பெட்ரோல், டீசல் மீதான அதிகப்படியான வரி விதிப்பு, விலை நிர்ணயித்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. வரிகளைக் குறைத்தால், விலைகள் குறையும்’ என குறிப்பிட்டார்.

    ஆனால் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு கை விரித்து விட்டது.

    இந்நிலையில், பெட்ரோல்-டீசல் விலை ஏற்றம் குறித்து அரசு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் ஊடகங்களிடம் கூறுகையில், ’குறிப்பிட்ட காலங்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாறும், கடந்த ஜூன் மாதத்தில் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை, ஜூலை மாதத்தில் சரிவை கண்டது. எனவே சர்வதேச சந்தையை பொருத்து அத்தியாவசிய பொருட்களின் விலை மாறும். எனவே விலை குறையும் சூழ்நிலை விரைவில் வரலாம்.

    அதனால், இதற்கெல்லாம் அரசு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. சர்வதேச சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களுக்காக மத்திய அரசின் கொள்கைகளை மாற்றிக்கொள்ள முடியாது’ என அவர் தெரிவித்தார். #NITIAayog #RajivKumar
    ×