search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாராயணா"

    • சென்னை மீஞ்சூர் அருகே தேவதானம் என்ற கிராமத்தில் வடஸ்ரீரங்கம் என்று ஒரு ஆலயம் உள்ளது.
    • இங்கும் ரங்கநாத பெருமாள் சயன கோலத்தில் காட்சியளிக்கிறார்.

    பஞ்சரங்கம் என்று கூட 5 தலங்களை நமது முன்னோர்கள் வரையறை செய்துள்ளனர்.

    ஸ்ரீரங்க பட்டினத்தில் உள்ள ஆலயம் ஆதிரங்கம் என்றும், திருப்பேர் நகரில் உள்ள ஆலயம் அப்பால ரங்கம் என்றும்

    ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆலயம் மத்திய ரங்கம் என்றும், கும்பகோணத்தில் உள்ள ஆலயம் சதுர்த்த ரங்கம் என்றும்,

    மயிலாடுதுறையில் உள்ள ஆலயம் பஞ்ச ரங்கம் என்றும் வகைப்படுத்தப்பட்டு உள்ளது.

    ஆனால் இந்த பஞ்சரங்க ஆலயங்களை தவிர மேலும் சில ரங்க ஆலயங்கள் ரங்கநாதருடன் தொடர்புடையதாக கூறப்படுகின்றன.

    சீர்காழி தாலுகாவில் மாதானைக்கு அருகே வடரங்கம் ஸ்ரீரங்கநாதர் பெருமாள் ஆலயம் உள்ளது.

    நாகை மாவட்டம் கீழையூரில் கீழரங்கம் ஸ்ரீரங்கநாதர் ஆலயம் உள்ளது.

    இந்த ஆலயம் ஸ்ரீரங்கத்துக்கு அபிமான தலமாக விளங்கும் தலமாகும்.

    திருத்துறைப்பூண்டி அருகேயும் ஆதிரங்கம் என்று ஒரு ஆலயம் உள்ளது.

    சென்னை மீஞ்சூர் அருகே தேவதானம் என்ற கிராமத்தில் வடஸ்ரீரங்கம் என்று ஒரு ஆலயம் உள்ளது.

    இங்கும் ரங்கநாத பெருமாள் சயன கோலத்தில் காட்சியளிக்கிறார்.

    • சயன கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கும் தலங்களில் ஸ்ரீரங்கம் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது.
    • இந்த ஆலயத்தை வைணவத்தின் முதல் கோவில் என்று சொல்வார்கள்.

    பொதுவாக திருமால் தமிழகம் முழுவதும் மூன்று விதமான கோலங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    ஒன்று நின்ற கோலம், 2வது சயன கோலம், 3வது அமர்ந்த கோலம்.

    அவர் எடுத்த அவதாரங்கள் கணக்கிட இயலாதவை.

    அதனால் 25வது அவதாரங்கள் முக்கியமானவை என்று நமது முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.

    அதிலும் தசாவதாரம் மட்டுமே தற்போது நடைமுறையில் பேசப்படுவதாக உள்ளது.

    அதிகம் தேடிச்சென்று வழிபடக் கூடியவையாகவும் அவை இருக்கின்றன.

    மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி என்று 10 அவதாரங்களை பெருமாளின் தசாவதாரமாக சொல்கிறார்கள்.

    இந்த 10 அவதாரங்களும் நிகழ்ந்த தலங்கள் தமிழகம் முழுவதும் உள்ளன.

    இந்த அவதாரங்களுடன் தொடர்புடைய தலங்களும் நாடு முழுவதும் பரவி கிடக்கின்றன.

    இந்த தலங்களில் ஆழ்வார்களால் பாடல் பெற்று மங்களாசாசனம் செய்யப்பட்ட தலங்கள் மிக சிறப்பானதாக கருத்து உண்டு.

    அப்படி மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 தலங்கள் திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

    இந்த 108 திவ்யதேசங்களில் திருமால் 67 ஆலயங்களில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

    சயன கோலத்தில் 24 தலங்களிலும், அமர்ந்த கோலத்தில் 17 தலங்களிலும் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.

    சயன கோலத்தில் காட்சி அளிக்கும் 24 தலங்களில் அவர் கிழக்கு முகமாக 18 தலங்களில் உள்ளார்.

    மேற்கு முகமாக 3 தலங்களிலும், வடக்கு முகமாக 3 தலங்களிலும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

    இப்படி சயன கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கும் தலங்களில் ஸ்ரீரங்கம் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது.

    இந்த ஆலயத்தை வைணவத்தின் முதல் கோவில் என்று சொல்வார்கள்.

    இங்கு ரங்கநாதர் சயன கோலத்தில் இருக்கிறார்.

    இதே போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரங்கநாதர் சயன கோலத்தில் இருக்கிறார்.

    • நாராயணா என்றால் மங்களம் தருபவர், சுபம் செய்பவர் என்று பொருள்.
    • ஓம் நமே நாராயணா என்று சொல்லிக் கொண்டே இருங்கள். நல்லது நடக்கும்.

    விஷ்ணு பிரபுவே, என் அகந்தை அழிந்து மனதில் உள்ள தீய அழுக்குகளை விரட்டுங்கள்.

    என் மீது கருணை காட்டுங்கள்.

    எப்போதும் உமையே சரண் அடையும் பாக்கியத்தை தாருங்கள் என்று தினந்தோறும் திருமாலை நினைத்து மனம் உருக வழிபட வேண்டும்.

    இந்த புத்தாண்டு, பொங்கல் திருநாளில் மகாவிஷ்ணுவை நெருங்குவதற்கான சபதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

    விஷ்ணு என்றால் "எங்கும் நிறைந்தவர்" என்று பொருள். எனவே விஷ்ணுவை வழிபட எல்லா இடத்திலும் வாய்ப்புகள் உண்டு.

    நாம்தான் அதை பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறோம்.

    நாராயணா என்றால் மங்களம் தருபவர், சுபம் செய்பவர் என்று பொருள்.

    ஓம் நமே நாராயணா என்று சொல்லிக் கொண்டே இருங்கள். நல்லது நடக்கும்.

    கேசவா, மாதவா, கோவிந்தா, மதுசூதனா, பத்மநாபா, தாமோதரா என்று திருமாலின் திருநாமங்களை சொல்லிக் கொண்டே போகலாம். 

    ×