search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாட்டுத் துப்பாக்கி"

    • சி.மெய்யூர் கிராமத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • அவர்களை பிடிக்க போலீசார் முயற்சித்தும் தப்பியோடிவிட்டனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள சி.மெய்யூர் கிராமத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே 2 வாலிபர்கள் நாட்டுத் துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் வந்தனர். போலீசாரை கண்ட வாலிபர்கள், மோட்டார் சைக்கிளையும், நாட்டு துப்பாக்கியையும் அங்கேயே போட்டு விட்டு ஓடி விட்டனர்.

    அவர்களை பிடிக்க போலீசார் முயற்சித்தும் தப்பியோடிவிட்டனர். உடனடியாக வழக்கு பதிவு செய்த திருவெண்ணைநல்லூர் போலீசார், மோட்டார் சைக்கிளையும், நாட்டு துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். அதனை சாலையில் போட்டுவிட்டு தப்பியோடிய வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×