search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாடார் மகாஜனசங்க மாநாடு"

    • திருமாவளவன், செங்கோட்டையன், பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    • நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் சிறப்புரையாற்றுகிறார்.

    மதுரை:

    நாடார் மகாஜன சங்கத்தின் 72-வது மாநாடு மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நேற்று காலை தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் சங்கத் தலைவர் குருசாமி வெள்ளையன் கொடியேற்றினார்.

    வடக்கன்பட்டி பட்டாசு ஆலை உரிமையாளர் துரை பாண்டியன் தலைமை தாங்கினார். என்.என்.ஜே. குரூப்ஸ் சேர்மன் எஸ்.என். ஜெயமுருகன் மாநாட்டினை தொடங்கி வைத்தார். மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் ராஜமோகன் வரவேற்று பேசினார்.

    அதனைத் தொடர்ந்து மாநாட்டில் மருத்துவ முகாம், சட்ட ஆலோசனை வழங்கும் முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாநாட்டில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்கள் பேசுகையில், நாடார் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு கல்விதான் முக்கிய காரணம் என்றும், நாடார் சமுதாயத்தினர் வியாபாரம் மட்டுமே செய்தார்கள். ஆனால் இன்று கல்லூரி தாளாளர், பத்திரிகை உரிமையாளர்கள், பெரிய நிறுவனங்களை வைத்திருப்பவர்களாக இருக்கிறார்கள்.


    இந்த சமூகம் இன்னும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் இன்னும் பெரும் வெற்றியை பெறமுடியும் என்றும், கடினமாக உழைப்பவர்கள் தான் நாடார்கள் என்றும் புகழாரம் சூட்டினர். முன்னதாக சிறப்பு விருந்தினர்களை நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் தலைமையில் குழுவினர் வரவேற்றனர்.

    இதைத்தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் மாநாட்டு நிகழ்ச்சிகள் காலை தொடங்கின. இதில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. தலைவர டாக்டர் அன்புமணி ராமதாஸ், பொருளாளர் திலக பாமா, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, காங்கிரஸ் கமிட்டி சார்பில் எம்.பி.க்கள் விஜய் வசந்த், மாணிக்கம் தாகூர், எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், ரூபி ஆர்.மனோகரன், அசோகன், பிரின்ஸ், ஊர்வசி அமிர்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    மாநாட்டின் முக்கிய நிகழ்வாக பிற்பகலில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அதனை வலியுறுத்தி நாடார் மகாஜன சங்கத்தின் பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் சிறப்புரையாற்றுகிறார்.

    ×