search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகலாபுரம் வேதநாராயண பெருமாள்"

    • நாகலாபுரம் வேதநாராயணசுவாமி ஆலயம் சில யுகங்களுக்கு முற்பட்டதாக வரலாற்று குறிப்புகள் உள்ளன.
    • அந்த 14 சிலைகளும் மிகவும் கலை நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்தது.

    நாகலாபுரம் வேதநாராயணசுவாமி ஆலயம் சில யுகங்களுக்கு முற்பட்டதாக வரலாற்று குறிப்புகள் உள்ளன.

    அந்த வகையில் திருப்பதி கோவிலுக்கும் முன்பே இந்த ஆலயம் அமைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இந்த ஆலயம் அமைந்துள்ள பகுதியில் மிகப்பெரிய கோட்டை கட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் ஆலயத்துக்குள் பல தடவை பல அரிய பொருட்கள் கிடைத்துள்ளன.

    கடந்த 2003ம் ஆண்டு மின்சார வயர்களை புதைப்பதற்காக ஆலயத்தின் ஒரு பகுதியில் பள்ளம் தோண்டினார்கள்.

    அப்போது அங்கு பஞ்சலோக சிலை ஒன்று புதைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த இடத்தில் மேலும் தோண்டிய போது அடுத்தடுத்து சிலைகள் வந்து கொண்டே இருந்தன.

    மொத்தம் 14 சிலைகள் அந்த பகுதியில் புதைந்து கிடைத்திருந்தன.

    அந்த 14 சிலைகளும் மிகவும் கலை நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருந்தது.

    பஞ்சலோகத்தால் தயாரிக்கப்பட்ட அந்த 14 சிலைகளும் எந்தெந்த கடவுள்கள் என்பது முதலில் அந்த ஊர் மக்களுக்கு தெரியாமல் இருந்தது.

    இதையடுத்து தொல்லியல் துறை அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வு செய்தனர்.

    அந்த 14 பஞ்சலோக சிலைகளையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்ல முயற்சி செய்தனர்.

    ஆனால் நாகலாபுரம் கிராம மக்கள் அதை ஏற்கவில்லை.

    14 பஞ்சலோக சிலைகளையும் ஆலயத்துக்குள்ளேயே வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    இதையடுத்து அந்த 14 சிலைகளும் தற்போது நாகலாபுரம் ஆலயத்தின் கருவறை அருகே மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய சோதனையில் அந்த 14 சிலைகளில் ஒன்று அர்ஜூனனின் உருவ சிலை என்று தெரிய வந்துள்ளது.

    எனவே மற்ற சிலைகள் அனைத்தும் பஞ்ச பாண்டவர்களாக இருக்கலாம். அல்லது மகாபாரத கதையுடன் தொடர் புடையவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இதுவரை அந்த பஞ்ச லோக சிலைகளின் ரகசியங்களை யாரும் கண்டுபிடிக்க இயலவில்லை.

    அந்த சிலைகளை புகைப்படம் எடுக்ககூட அர்ச்சகர் அனுமதி வழங்கவில்லை.

    சுமார் 2 அடி உயரம் உள்ள அந்த சிலைகள் அனைத்தும் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை.

    என்றாலும் இப்போதும் புத்தம் புதிது போல காட்சி அளிக்கின்றன.

    இதேபோன்று அந்த ஆலயத்தில் மேலும் சில இடங்களிலும் சிலைகள் புதைந்து கிடக்கலாம் என்று தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

    உரிய முறையில் ஆய்வு செய்தால் பல சரித்திர உண்மைகளை இந்த ஆலயத்தின் மூலம் கண்டு பிடிக்க முடியும் என்பது நாகலாபுர மக்களின் நம்பிக்கையாகும்.

    • நாகலாபுரம் வேதநாராயண சுவாமிக்கு 3 வகையான உணவுகள் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.
    • மாலையில் மிளகு சாதம் நைவேத்தியம் படைத்து பூஜைகள் நடத்தப்படுகிறது.

    நாகலாபுரம் வேதநாராயண சுவாமிக்கு 3 வகையான உணவுகள் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

    காலையில் தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள்.

    மதியம் புளியோதரை வழங்குகிறார்கள்.

    மாலையில் மிளகு சாதம் நைவேத்தியம் படைத்து பூஜைகள் நடத்தப்படுகிறது.

    • குடந்தையில் கோவில் கொண்டுள்ள சக்ரபாணி சுதர்சனரின் வடிவமே.
    • காஞ்சியில் அஷ்டபுஜர் எண் கரங்கள் கொண்ட பெருமாள் திருமாலின் சக்கர சக்தி எனப்படுகிறார்.

    நாகலாபுரம் வேதநாராயண பெருமாள் ஆலயத்தில் மச்ச அவதாரத்தில் இருக்கும் பெருமாளின் கையில் இருந்து சக்கரத்தாழ்வார் புறப்படும் நிலையில் உள்ளார்.

    எனவே இந்த தலம் சுதர்சனர் மகிமை நிறைந்த தலமாகவும் கருதப்படுகிறது.

    மகாவிஷ்ணுவின் திருக்கரங்கள் ஒன்றில் காணப்படும் சங்கர ஆயுதத்தில் உறையும் தேவனே சுதர்சனர் எனப்படுகிறார். அந்தச் சக்கரம்தான் சுதர்சன சக்கரம் எனப்படுகிறது.

    திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கரத்திற்கு உரிய தெய்வம் என்பதால் சுதர்சனர் உக்கிர வடிவினர். இவர் சக்கரத்தாழ்வார் என்றும் வணங்கப்படுகிறார்.

    கும்பகோணமும் காஞ்சீபுரமும் திருமாலின் சக்கர அம்சத்துக்கு சிறப்பாக உரிய தலங்கள்.

    காஞ்சியில் அஷ்டபுஜர் எண் கரங்கள் கொண்ட பெருமாள் திருமாலின் சக்கர சக்தி எனப்படுகிறார்.

    இவருக்குச் சக்கரராயர் என்றும் ஒரு பெயர் வழங்குகிறது.

    குடந்தையில் கோவில் கொண்டுள்ள சக்ரபாணி சுதர்சனரின் வடிவமே.

    சுதர்சன வழிபாட்டின் முக்கிய நோக்கம், பரம்பொருளை சக்கர யந்திர வடிவிலே அமர்த்தி வழிபடுவதே ஆகும்.

    ஸ்ரீ நிகமாந்த மகா தேசிகர் காலத்தில் சுதர்சன வழிபாடு பிரபலமடைந்தது.

    அவர் இயற்றிய ஸ்ரீ சுதர்சனாஷ்டகம் இணையற்ற படைப்பாகும்.

    காஞ்சி, கண்டியூர், தாடிக் கொம்பு, திருமோகூர், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீரங்கம், திருமயம் ஆகிய தலங்களில் சிறப்பான சுதர்சன வடிவங்கள் உள்ளன.

    ஸ்ரீ சுதர்சனர் பிரார்த்தனை தெய்வமாக விளங்குகிறார்.

    முக்கோணம், ஷட்கோணம் ஆகியவற்றுக்குள் சுதர்சனரை அமர்த்தி வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது.

    பேராபத்துக்களிலும், தீரா நோயில் வாடும்போதும், எடுத்த காரியங்களில் இடையூறு ஏற்படும்போதும் நாகலாபுரம் வந்து ஸ்ரீ சுதர்சன மூல மந்திரம், வழிபாடு பூஜை ஆகியவை செய்து அநேகர் பலன் அடைகின்றனர்.

    ×