search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நன்மைகள்"

    • 7 மாவட்டங்களில் 1,900 குளியலறைகளுடன் கூடிய கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • 2023-ம் ஆண்டுக்குள் 5 ஆயிரம் கழிவறைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நிம்மேலி கிராமத்தில் விவேகானந்தா கிராமப்புற மேம்பாடு அமைப்பின் சார்பாக ஓராசிரியர் பயிற்சி பள்ளி துவக்க விழா நடைபெற்றது.

    அதனை முன்னிட்டு நிம்மேலி கிராமத்தில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 60 வீடுகளுக்கு குளியல் அறையுடன் கூடிய கழி ப்பறை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு பணிகள் நிறைவடைந்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ஓராசிரியர் பள்ளிகளின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் விவேகானந்தா கிராமபுற மேம்பாடு திட்ட குழுவின் கவுரவத் தலைவர் கிருஷ்ணமாச்சாரி வரவேற்றார்.

    இந்த திட்ட த்தின் 7 மாவட்டங்களில் ஆயிரத்து 900 குளியல் அறைகளுடன் கூடிய கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    மேலும் வரும் 2023ம் ஆண்டுக்குள் 5 ஆயிரம் கழிவறைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஏ.வி.சி கல்லூரியின் முன்னாள் செயலர் செந்தில்குமார் இத்திட்டத்தின் நன்மைகள் பற்றியும் பயனாளிகள் எவ்வாறு அதனை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும்விளக்கினார்.

    தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு பணியாணை வழங்க ப்பட்டது.

    நிக ழ்ச்சியில் ஊராட்சி தலைவர் துரைராஜ், விவேகானந்தா கிராமப்புற மேம்பாட்டு அமைப்பின் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஓராசிரியர் பள்ளி செயற்குழு உறுப்பினர் டெக்கான் மூர்த்தி நன்றி கூறினார்.

    சர்வதேச பீர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், உடல் ஆரோக்கியம் முதல் மனமகிழ்ச்சி வரை பீரால் கிடைக்கும் நன்மைகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள். #InternationalBeerDay

    கடந்த 2007-ம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி சர்வதேச பீர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை ஒட்டி உலகம் முழுவதும் உள்ள நட்சத்திர சொகுசு விடுதிகள் பீர் சார்ந்த பல்வேறு போட்டிகளை நடத்துகிறது. பீர் ஆல்கஹாலை சேர்ந்த ஒரு போதைப்பொருளாகவே இந்தியாவில் பார்க்கப்படும் நிலையில், ஆல்கஹால் கலப்பு இல்லாமலும் பீர் வகைகள் கிடைக்கின்றன.

    உடல் ஆரோக்கியம் முதல் மனமகிழ்ச்சி வரை பீரால் கிடைக்கும் நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

    பீர் குடிப்பது மன அழுத்தத்தை குறைக்கிறது. பொதுவாக அளவான ஆல்கஹாலில் இந்த குணம் இருப்பதால் பீர் குடிப்பது மனநிலையை இயல்பான, மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்கிறது.

    பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது.  சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில், ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில் பீர் அருந்தும் பழக்கமுள்ளவர்களுக்கு 20 - 50 சதவீதம் இதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவு.

    பீர் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. பீர் உடலுக்கு தேவையான கொழுப்பை Good Cholesterol (H D L - High Density Lipoprotein ) தருகிறது. எனவே, இது இரத்தம் தன பாதைகளில் கெட்டியாவதை தடுக்கிறது.

    பீரில் நிறைய நார் சத்து உள்ளது. இந்த நார் சத்தானது மால்டட் பார்லியில் இருந்து கிடைகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக நம் உடலுக்கு தேவையான நார் சத்தில் சுமார் 60% ஒரு லிட்டர் பீரில் இருந்து கிடைத்து விடுமாம். இப்படி எக்ஸ்ட்ராவாக நமக்கு கிடைக்கும் நார் சத்து இருதய நோயிலிருந்து நம்மை காக்கும்.

    பீர் விட்டமின் செறிந்தது. பீரிலிருந்து பல வகை விட்டமின்கள் கிடைகின்றன. மக்னீசியம், செலினியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், பயோட்டின், போலேட் மற்றும் விட்டமின் B6 , விட்டமின் B12 என பல விட்டமின்கள் பீரில் உள்ளன.



    பீர் உங்கள் மூளையை இளமையாக வைக்கிறது. 2001 டிசம்பரில் இத்தாலியில் நடைபெற்ற கணக்கெடுப்பு மற்றும் ஆராய்சிகளின் படி, அளவான மது பழக்கம் உள்ள ஆண் , பெண்கள் அனைவருக்கும் மூளை சிதைவு, மூளை தளர்வுறும் நிலை மது பழக்கம் இல்லாதவர்களை விட 40% குறைவாக உள்ளது .

    பீர் நமது கல்லீரலுக்கு நல்லது. மிதமான பீர் கல்லீரலில் உள்ள மிகசிறிய இரத்தக்குழாய்களைஅகலப்படுத்துவதால் அங்கு நடைபெறும் வளர் சிதை மாற்றம் காரணமாக உண்டாகும் கழிவுகள் இதனால் நீக்கப்படுகின்றன.

    பீர் தூக்கம் இன்மையை அகற்றும். லாக்டோப்லாவின் மற்றும் நிக்கோடினிக் அமிலங்கள் பீரில் இருப்பதால் அவைகள் தூக்கம் ஊக்கியாக செயல்படுவதால் நல்ல உறக்கம் கிடைகிறது. 

    பீர் கற்கள் உண்டாவதை தடுக்கிறது. நியூகாஸ்டில் பல்கலை பேராசிரியர் ஆலிவர் ஜேம்ஸ் கூற்றுப்படி பீர் பித்தப்பை கற்கள் மற்றும் சிறுநீரக கற்கள் உண்டாவதை தடுக்கிறது. பீர் அதிகமான சிலிக்கானை கொண்டுள்ளது, இது எலும்பை உருவாக்கும் செல்கள் ஊக்குவிப்பதன் மூலம் நல்ல எலும்பு ஊக்குவிப்பதில் உதவுகிறது. 

    மிதமான பீர் அருந்துதல் சிறுநீரக ஆரோக்கியத்தை நல்லபடியாக வைத்துகொள்ள உதவுகிறது. சிறுநீரக கற்களைக் கையாளுவதில் பெரும் பங்காற்றுகிற்றது. ஆனால், அருந்துவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது அவசியம் என்பதை மரத்து விட வேண்டாம்.

    மேற்கண்ட அனைத்து நன்மைகளும் அளவாக பீர் அருந்தும் நபர்களுக்கு மட்டுமே. என்நேரமும், மதுவில் மூழ்கிக்கிடப்பவர்களுக்கு மேற்கண்ட அனைத்தும் ரிவர்சில் நடக்கும் என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
    ×