search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளியலறையுடன் கூடிய கழிவறைகள் திறப்பு
    X

    கழிவறை பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

    குளியலறையுடன் கூடிய கழிவறைகள் திறப்பு

    • 7 மாவட்டங்களில் 1,900 குளியலறைகளுடன் கூடிய கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • 2023-ம் ஆண்டுக்குள் 5 ஆயிரம் கழிவறைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நிம்மேலி கிராமத்தில் விவேகானந்தா கிராமப்புற மேம்பாடு அமைப்பின் சார்பாக ஓராசிரியர் பயிற்சி பள்ளி துவக்க விழா நடைபெற்றது.

    அதனை முன்னிட்டு நிம்மேலி கிராமத்தில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 60 வீடுகளுக்கு குளியல் அறையுடன் கூடிய கழி ப்பறை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு பணிகள் நிறைவடைந்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ஓராசிரியர் பள்ளிகளின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் விவேகானந்தா கிராமபுற மேம்பாடு திட்ட குழுவின் கவுரவத் தலைவர் கிருஷ்ணமாச்சாரி வரவேற்றார்.

    இந்த திட்ட த்தின் 7 மாவட்டங்களில் ஆயிரத்து 900 குளியல் அறைகளுடன் கூடிய கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    மேலும் வரும் 2023ம் ஆண்டுக்குள் 5 ஆயிரம் கழிவறைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஏ.வி.சி கல்லூரியின் முன்னாள் செயலர் செந்தில்குமார் இத்திட்டத்தின் நன்மைகள் பற்றியும் பயனாளிகள் எவ்வாறு அதனை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும்விளக்கினார்.

    தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு பணியாணை வழங்க ப்பட்டது.

    நிக ழ்ச்சியில் ஊராட்சி தலைவர் துரைராஜ், விவேகானந்தா கிராமப்புற மேம்பாட்டு அமைப்பின் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஓராசிரியர் பள்ளி செயற்குழு உறுப்பினர் டெக்கான் மூர்த்தி நன்றி கூறினார்.

    Next Story
    ×