search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடவடிக்கை எடுக்கப்படும்"

    • நிறுவனங்களில் ஆய்வு செய்து 20 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டது.
    • குழந்தை தொழிலாளர் பணிபுரிவது கண்டறிந்தால், 1098 மற்றும் 155214 என்ற இலவச தொலைபேசிக்கு தகவல் தெரிவிக்கலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில், துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கடந்த ஜூன் மாதம் ஆய்வு மேற்கொண்டனர்.

    சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ், மருத்துவமனைகள், கிளினிக், நர்சிங் ேஹாம், மருத்துவ பரிசோதனை கூடங்கள் என 103 நிறுவனங்களில் ஆய்வு செய்து 20 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டது.

    பொட்டல பொருட்கள் விதிப்படி நோட்டு புத்தகம், எழுது பொருட்கள், காலணிகள், சிகரெட், லைட்டர்கள் விற்பனை செய்யும் கடைகள், சினிமா தியேட்டர்கள், மால்கள் என 66 நிறுவன ங்களில் ஆய்வு செய்ததில் 2 நிறுவன ங்களில் முரண்பாடு அறியப்பட்டது.

    குறைந்த பட்ச ஊதிய சட்டத்தில் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தொடர்பாக 25 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் குறைந்த பட்ச ஊதியம் தொழிலாளர்களுக்கு வழங்காத 1 நிறுவனம் மீது நடவடிக்கைக்கு ஈரோடு தொழிலாளர் இணை ஆணையருக்கு படிவம் தாக்கல் செய்துள்ளனர்.

    குழந்தை தொழிலாளர்கள், வளரிளம் பருவ தொழிலாளர்கள் பணியில் உள்ளார்களா என்பது குறித்து 415 நிறுவனங்களில் நடந்த கூட்டாய்வில் குறைபாடு கண்டறியப்படவில்லை. அந்நிறுவனத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ஆய்வு குறித்து தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    எடையளவு, மின்னணு தராசுகள் முத்திரையின்றி பயன்படுத்துவது, பொட்டல பொருட்கள் அதிக பட்ச சில்லரை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு கண்டறியப்பட்டால் உரிய அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும். 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்தக்கூடாது. அவ்வாறு பணி அமர்த்தினால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் மீது ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் அல்லது கைது செய்யப்பட்டு 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது 2-ம் சேர்த்து விதிக்க நேரிடும்.

    குழந்தை தொழிலாளர் பணிபுரிவது கண்டறிந்தால், 1098 மற்றும் 155214 என்ற இலவச தொலைபேசிக்கு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • வனவிலங்குகள் குறித்த தவறான வீடியோ பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
    • தவறான வீடியோக்கள் பதிவிட்டாலோ அல்லது பகிர்ந்தாலோ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடம்பூர் வனப்பகுதியில் ஏராளமான யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    கடம்பூர் மலைக்கிரா மங்களில் பல சிற்றூர், கிராமங்களும் உள்ள நிலையில் பஸ் போக்கு வரத்து வசதிகளும் உள்ளன. இங்கு வாழும் மலைக்கிராம மக்கள் வெளியூருக்கு வேலை சம்பந்தமாகவும்,

    அத்தியாவசிய தேவைக ளுக்கும் மலைக்கிராமங்களில் இருந்து நகர பகுதிகளுக்கு பஸ், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக வனச்சாலை வழியாக பயணம் செய்கின்றனர்.

    அவ்வாறு வனச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வனப்பகுதியில் இருந்து உணவு, தண்ணீரு க்காக வெளியேறி சாலை யில் தென்படும் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவி லங்குகளை பாதுகாப்பற்ற முறையில் செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப், பேஸ்புக், யுடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றனர்.

    மேலும் கடந்த சில மாதங்கள் மற்றும் சில வருடங்களுக்கு முன்பு வனவிலங்குகள் சாலையை கடந்து செல்லுவது போலவும், யானை மின் வேலை பட்டு இறந்தது போன்று வேறு எங்கோ எடுத்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை கடம்பூர் வனச்சரக பகுதிகளில் நடந்ததாக வாட்ஸ்அப், பேஸ்புக், யுடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தவறாக பதிவேற்றி வரும் நிகழ்வுகள் தற்போது அதிகமாகி வருகிறது.

    கடம்பூர் மலைக்கிராம பகுதிகளை ஆபத்து நிறைந்த பகுதிகளாகவும், அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மலைக்கிராம மக்கள் மற்றும் வனத்துறையினருக்கு பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும், வனவிலங்குகள் குறித்த தவறான வீடியோ பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

    சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் காட்டுக்குள் இருந்து மக்கள் பயணிக்கும் சாலையில் இரவு நேரங்களில் நடமாடுவதாகவும். வேறு மாவட்டங்களில் உள்ள வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தின் மின் வேலியில் பட்டு யானை இறந்தது போன்ற நிகழ்வு கடம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடந்தது போன்ற பதிவு செய்த வீடியோக்கள் மற்றும் படங்களை ஆன்லைனில் பதிவேற்றுவது, உள்ளூர் பகுதிகளில் உள்ள வாட்ஸ்அப் குரூப்புகளில் பகிர்வது போன்ற வனவிலங்குகள் குறித்து தவறான வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது.

    இதுபோன்ற வனவிலங்குகள் குறித்து தவறான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டாலோ அல்லது பகிர்ந்தாலோ வனத்துறை சார்பில் வனச்சட்டத்தின் கீழ் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000, பிரிவு 66A-ன் வழக்கு பதிவு செய்து கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

    • தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு பட்டாசுகள் விற்பனை செய்ய தற்காலிக உரிமம் மற்றும் நிரந்தர உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
    • இதில் ரசாயன பட்டாசுகள் விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டால் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ஈரோடு, அக். 19-

    தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு பட்டாசுகள் விற்பனை செய்ய தற்காலிக உரிமம் மற்றும் நிரந்தர உரிமம் கூடுதல் மாவட்ட நிர்வாக நடுவர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

    பட்டாசு உரிமம் பெறப்பட்ட இடங்களில் மட்டுமே பட்டாசுகள் விற்பனை செய்யப்பட வேண்டும். பட்டாசு உரிமம் பெறப்படாமலும், தடை செய்யப்பட்ட குடிமக்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பச்சை பட்டாசுகள் (பேரியம் கலந்த) ரசாயன பட்டாசுகள் விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டால் வெடிபொருள் சட்டம் மற்றும் விதிகளின்படி தீவிர நடவடிக்கை மேற்கொள்ள ப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.  

    ×