search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகைக்கடை உரிமையாளர்"

    • கோபிசெட்டிபாளையம் டி.எஸ்.பி. தங்கவேல் தலைமையிலான போலீசார் சேகர் வீட்டுக்கு சென்று பார்வையிட்டனர்.
    • கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (63). இவர் கோபி-சக்தி மெயின் ரோடு, கச்சேரிமேடு பகுதியில் சொந்தமாக நகைக்கடை வைத்துள்ளார்.

    இந்நிலையில் இன்று காலை வீட்டிலிருந்த சேகர் தான் வைத்திருந்த உரிமம் பெற்ற பிஸ்டல் துப்பாக்கியால் நெற்றி மீது தனக்குத்தானே சுட்டு கொண்டார்.

    திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதால் வீட்டில் இருந்த அவரது மகன், மனைவி அருகில் இருந்தவர்கள் ஓடிவந்த பார்த்தபோது சேகர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக சேகரை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சேகர் எதற்காக துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார் என தெரியவில்லை.

    இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோபிசெட்டிபாளையம் டி.எஸ்.பி. தங்கவேல் தலைமையிலான போலீசார் சேகர் வீட்டுக்கு சென்று பார்வையிட்டனர்.

    இதுகுறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்கடை உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • நகைக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • நவீன் பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    பல்லடம்:

    பல்லடம் கடைவீதியில் நகைக் கடை நடத்தி வந்தவர் வெங்கடாசலம் (வயது49) .இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்தவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து மனைவி ஆனந்தி அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தார். அப்போது மனைவியிடம் கடன் தொல்லையால், தங்க நகைகளை உருக்க பயன்படும் சயனைடு குடித்து விட்டதாக கூறி உள்ளார். பல்லடம் மருத்துவமனையில் முதலுதவி பெற்று சூலூர் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட வெங்கடாசலம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி ஆனந்தி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடன் தொல்லையால் நகைக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்லடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பல்லடம் அருகே உள்ள சேகம்பாளையம் சாய் குரு கார்டன் நகரை சேர்ந்த கண்ணன் மகன் நவீன் (வயது20) .இவர் பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் உள்ள விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரது தந்தை கண்ணன் அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியோடு அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    ×