search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடர் விசாரணை"

    • விழுப்புரத்தில் மோட்டார் சைக்கிள் கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டனர்.
    • சந்தேகிக்கப்படும் நபர்களை கண்காணிக்க அரகண்டநல்லூர் போலீசாருக்கு தனிப்படை போலீசார் அறிவுறுத்தினர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், முகையூர், திருக்கோவிலூர் போன்ற பகுதிகளில் அதிவேக மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருடு போய்கொண்டுள்ளது. இது தொடர்பாக 10-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன. இதையடுத்து விழுப்புரம் மாவட்ட சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் உதவி சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில் தனிப்படை அமை க்கப்பட்டது. இவர்கள் அதிவேக மோட்டார் சைக்கிள்கள் காணாமல் போன இடங்களை சுற்றியுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து எந்தெந்த செல்போன் எண்கள் அப்பகுதிகளில் வந்து சென்றன என்பதையும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் அரகண்டநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தனிப்படைக்கு தெரி யவந்தது. சந்தேகிக்கப்படும் நபர்களை கண்காணிக்க அரகண்டநல்லூர் போலீசாருக்கு தனிப்படை போலீசார் அறிவுறுத்தினர்.

    அதன்படி காணை அடுத்துள்ள சித்தாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 4 வாலிபர்களை ேபாலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இவர்கள் அதிவேக மோட்டார் சைக்கிள்களை திருடிச் சென்று சென்னையில் விற்பதாகவும், இது கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்தலுக்கு பயன்படுத்தபடும் என்று தெரியவந்தது. மேலும், பிடிபட்ட வாலிபர்கள் 20 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்களாவர். இவர்களும் போதைப் பொருட்களை உட்கொண்ட பிறகே அதிவேக மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளனர். இந்த 4 வாலிபர்களும் ஒன்றினைந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 11 ்அதிவேக மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த கொள்ளைக்கும்பலிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சரண் சாலையை கடக்க முயற்சித்துள்ளார்.
    • பலத்த காயமடைந்த சரண் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானர்.

    விழுப்புரம்:

    அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று கோட்ட க்குப்பம் பகுதிக்கு வருகிறார். கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்த உள்ளார். இற்காக அ.ம.மு.க. வினர் புதுச்சேரி -மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை யில் கொடி கட்டுவது, தோரணங்கள் மற்றும் வாழைமரங்கள் கட்டுவது போன்ற பணிகளில் கூலித் தொழிலாளர்களை ஈடுபடுத்தி வந்தனர்.

    அப்போது பிள்ளை ச்சாவடி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையின் ஒருபுறம் கொடி, வாழை மரங்களை கட்டிய ஒட்டை மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த சரண் (வயது 18) சாலையை கடக்க முயற்சித்துள்ளார். மரக்காணத்திலிருந்து புதுச்சேரி நோக்கி வந்த வேன் அப்போது சரண் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சரண் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானர். தகவலறிந்து விரைந்து வந்த கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி, புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசாரின் தொடர் விசாரணையில் விபத்து ஏற்படுத்திய வேன் புதுச்சேரி உப்பளம் பகுதியை சேர்ந்தது என்பதும், வேன் டிரைவர் தப்பி ஓடியதும் போலீசாருக்கு தெரியவந்தது. வேனை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்னறர்.

    ×