search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "body crushed to death"

    • நண்பரைப் பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது பரிதாபம்
    • தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்

    ஆற்காடு:

    ஆற்காடு குட்டைக்கரை தெருவை சேர்ந்தவர் முனுசாமி மகன் சதீஷ்(வயது37). இவர் அப்பகுதியில் உள்ள பைக் விற்பனை கடையில் வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு ராணிப்பேட்டையில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக பைக்கில் சென்றுள்ளார்.

    பின்னர் நண்பரைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அவர் ஆற்காடு பழைய மேம்பாலம் அருகே வந்தபோது சென்னையிலிருந்து-வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி சதீஷின் பைக்கின் மீது மோதியது.

    இதில் சதீஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    • சரண் சாலையை கடக்க முயற்சித்துள்ளார்.
    • பலத்த காயமடைந்த சரண் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானர்.

    விழுப்புரம்:

    அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று கோட்ட க்குப்பம் பகுதிக்கு வருகிறார். கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். திருவுருவச் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்த உள்ளார். இற்காக அ.ம.மு.க. வினர் புதுச்சேரி -மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை யில் கொடி கட்டுவது, தோரணங்கள் மற்றும் வாழைமரங்கள் கட்டுவது போன்ற பணிகளில் கூலித் தொழிலாளர்களை ஈடுபடுத்தி வந்தனர்.

    அப்போது பிள்ளை ச்சாவடி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையின் ஒருபுறம் கொடி, வாழை மரங்களை கட்டிய ஒட்டை மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த சரண் (வயது 18) சாலையை கடக்க முயற்சித்துள்ளார். மரக்காணத்திலிருந்து புதுச்சேரி நோக்கி வந்த வேன் அப்போது சரண் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சரண் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானர். தகவலறிந்து விரைந்து வந்த கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி, புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசாரின் தொடர் விசாரணையில் விபத்து ஏற்படுத்திய வேன் புதுச்சேரி உப்பளம் பகுதியை சேர்ந்தது என்பதும், வேன் டிரைவர் தப்பி ஓடியதும் போலீசாருக்கு தெரியவந்தது. வேனை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்னறர்.

    • வேணுகோபால் வடலூர் அருகேயுள்ள பெத்தணாங்குப்பத்தில் தற்போது விவசாயம் செய்து வருகிறார்.
    • தனியார் பஸ் இவர் மீது மோதியது. அப்போது பஸ்சின் முன்பக்க டயரில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    கடலூர்: 

    வடலூர் கோபியார் பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 70). இவர் தனியார் தொழிற்சாலையில் பணி செய்து ஓய்வு பெற்றவர். வடலூர் அருகேயுள்ள பெத்தணாங்குப்பத்தில் தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவரது இல்லத்திலிருந்து பெத்தணாங்குப்பம் செல்வதற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.


    அப்போது சாலையின் இடது புறத்திலிருந்து வலது புறம் செல்ல முயற்றி செய்த போது, பின்புறமிருந்து வந்த தனியார் பஸ் இவர் மீது மோதியது. அப்போது பஸ்சின் முன்பக்க டயரில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த வடலூர் போலீசார் உடலை கைப்பற்றி குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வேணுகோபாலின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×