search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவையற்ற பொருட்கள்"

    • நல்ல தண்ணீர் பிடித்து வைக்கும் சிறு, சிறு பாத்திரங்களையும் மூடி வைக்க வேண்டும்.
    • குளிர்சாதனப் பெட்டிக ளின் பின்புறம் உள்ள டப்பாவில் தண்ணீர் சேர விடக்கூடாது.

    கடலூர்:

    டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொட ர்பாக கடலூர் மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறியிருப்பதா வது:- கடலூர் மாநகராட்சி நிர்வாகத்தால் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலை பரப்பும் ஈடிஸ் கொசுக்கள் மழை தண்ணீர், நல்ல தண்ணீரில் மட்டுமே முட்டை இடும். இந்த ஈடிஸ் கொசுக்கள் கருப்பு வெள்ளை கலரில் இருக்கும். பொதுமக்கள் வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டி களை மூடி வைக்க வேண்டும். நல்ல தண்ணீர் பிடித்து வைக்கும் சிறு, சிறு பாத்திரங்களையும் மூடி வைக்க வேண்டும். மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் டேங்கு களை மூடி வைக்க வேண்டும். வீட்டில் பூந்தொட்டிகள் வைத்திரு ந்தால், அவைகளில் அதிக மாக தண்ணீர் ஊற்றி, தண்ணீர் தேங்கும் அளவுக்கு வைக்கக் கூடாது. படிக்கட்டுகளின் கீழ், மொட்டை மாடிகள் மற்றும் வீட்டின் அருகில் தேவையில்லாத பெயிண்ட் டப்பா, சிரட்டை, பிளாஸ்டிக் பாட்டில்கள், சாப்பாடு பார்சல் வாங்கி வந்த பிளாஸ்டிக் அட்டை பெட்டிகள், பழைய ஷூக்கள், உடைந்த ஹெல்மெட்டுகள் போன்ற உபயோகமற்ற அனைத்து பொருட்களையும் உடனடியாக அப்புறப்ப டுத்த வேண்டும்.

    வீடுகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டிக ளின் பின்புறம் உள்ள டப்பாவில் தண்ணீர் சேர விடக்கூடாது. வீட்டின் பின்புறம் உள்ள பகுதி களில் ஆட்டு உர ல்களை போட்டு வைக்கக் கூடாது. மழை நீர் தேங்கும் வண்ணம் எந்த பொரு ளையும் போட்டு வைக்கக் கூடாது. குறிப்பாக வீட்டில் தூங்கும்போது கொசுக்கள் கடிக்காத வண்ணம் கொசு வலைகளை பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு முழுக் கை சட்டை, முழுக் கால் பேண்ட் போட வேண்டும். மேலும், யாருக்கேனும் 2, 3 நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் வந்தால், கண்டிப்பாக அரசு பொது மருத்து வமனைக்கு சென்று, டாக்டர் ஆலோச னைப்படி மருந்துகள் எடுத்து க்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • மரச்சாமான்கள், இரும்பு பொருட்கள் வகுப்பறைகளில் காணப்படுகின்றன.
    • அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

    திருப்பூர் :

    தமிழகத்தில் பள்ளி கல்வி துறை சார்ந்த அலுவலகங்கள் மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன.கல்வித்துறை சார்ந்த அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் பழுதடைந்த மற்றும் உபயோகமற்ற மரச்சாமான்கள், இரும்பு பொருட்கள் காலங்கடந்து அலுவலகத்தில் உள்ள அறைகளிலும், வெளிப்புறங்களிலும் மற்றும் பள்ளிகளிலுள்ள வகுப்பறைகளிலும் காணப்படுகின்றன.

    இதனால் அலுவலகங்களிலும், பள்ளிகளிலும், இடம்பற்றாக்குறை ஏற்படுகிறது. அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.சுற்றுச்சூழல் மட்டுமின்றி மாணவ, மாணவிகள் நலன்கள் பாதிப்பு ஏற்படுகிறது.பழுதடைந்த மரச்சாமான்கள் மற்றும் உபயோகமற்ற பொருட்கள் அகற்ற வேண்டியது மிகவும் அவசியமாகிறது.எனவே அப்பொருட்களை அகற்றுவதற்கு முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி அதனை அகற்ற ஏலம் விளம்பரம் மூலம் நடவடிக்கை மேற்கொண்டும், அதற்கான தொகையை உரிய அரசு கணக்கில் செலுத்தவும் திருப்பூர் உள்பட அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×