search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவஸ்தான அதிகாரி"

    திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள யானை கேட்டில் இருந்து கோவில் மகா துவாரம் வரை பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க, தரிசன வரிசையில் மாற்றம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. #TirupatiTemple
    திருமலை:

    திருப்பதியில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தான அலுவலக பவனில் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தலைமை தாங்கி பேசினார்.

    திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள யானை கேட்டில் இருந்து கோவில் மகா துவாரம் வரை பக்தர்கள் வரிசையில் செல்லும்போது நெரிசல் ஏற்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க, தரிசன வரிசையில் மாற்றம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. திருமலையில் புதிதாக பூந்தி தயாரிக்கும் கூடம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    லட்டு கவுண்ட்டர்களில் ஸ்கிரீன் போர்டுகள் வைக்கப்பட உள்ளன. தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை (டைம் ஸ்லாட்) வழங்கும் இடத்தில் ஸ்கிரீன் போர்டுகள் வைக்கப்பட உள்ளன. கல்யாண கட்டாக்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சரியாக வேலை செய்கிறார்களா? எனக் கண்காணிக்கப்பட உள்ளனர்.

    கன்னியாகுமரியில் வெங்கடேஸ்வரா கோவில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு, சிமெண்டு சாலை அமைக்கும் பணி, குடிநீர் வசதி, கழிவறைகள் கட்டும் பணி ஆகியவற்றை அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும். திருப்பதியைச் சுற்றி உள்ள தேவஸ்தான கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கையை கணக்கிட, ‘ஹெட் கவுண்ட்’ கருவி பொருத்தப்பட உள்ளது.

    தேவஸ்தான காலண்டர்கள், டைரிகள் தேவைப்படும் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து வருகின்றனர். அதற்கான சாப்ட்வேரில் எந்தவித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கால் சென்டர்கள் மூலம் பக்தர்கள் குறைகள், புகார்களை தெரிவித்து வருகின்றனர். அதனை அறிக்கையாக தயாரித்து அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தேவஸ்தான இணை அதிகாரிகள் கே.எஸ்.சீனிவாசராஜு, போலா.பாஸ்கர், முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி கோபிநாத்ஜாட்டி, நிதித்துறை அதிகாரி பாலாஜி, என்ஜினீயர் சந்திரசேகர்ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர். #TirupatiTemple
    திருப்பதி ஏழுமலையானின் ஆபரணங்கள் அனைத்தும் பத்திரமாக உள்ளன. ஆபரணங்கள் எதுவும் மாயமாக வில்லை என தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையானின் ஆபரணங்கள் அனைத்தும் பத்திரமாக உள்ளன. ஆபரணங்கள் எதுவும் மாயமாக வில்லை என தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் திருமலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஆந்திர மாநில அரசு அர்ச்சகர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றி வரும் அர்ச்சகர்களில் 65 வயது பூர்த்தியானவர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படுகிறது. அதன்படியே ஏழுமலையான் கோவிலின் பிரதான அர்ச்சகர் ரமணதீட்சிதலுவுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் மீது பல்வேறு புகார்களை தெரிவித்து வருகிறார். அவர் கூறுவது சரியல்ல. கோவிலில் பெரிய ஜீயர்கள் சுவாமிகள், சின்ன ஜீயர்சுவாமிகள் ஆகியோரின் மேற்பார்வையில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் முறைப்படி நடக்கின்றன.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் இந்துக்களின் புனித தலமாகும். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த தங்க, வைர நகைகளை கணக்கெடுக்க நீதிபதிகள் வாத்வா, ஜெகநாதராவ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் தீவிர ஆய்வு நடத்தி ஆபரணங்களை கணக்கெடுத்தனர். அவர்கள் கணக்கெடுத்த விவரங்களை ஆவணமாக தயாரித்து தேவஸ்தானத்தில் வைக்கப்பட்டுள்ளது. தங்க, வைர ஆபரணங்களின் விவரங்களை இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

    1952-ம் ஆண்டு முதல் தற்போது வரை திருப்பதி ஏழு மலையானுக்கு பல்வேறு பக்தர்கள் ஆபரணங்களை காணிக்கையாக கொடுத்துள்ளனர். அந்த ஆபரணங்களின் பெயர் விவரம் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மைசூரு மகாராஜா காணிக்கையாக கொடுத்த ஆபரணங்களை ஏழுமலையானுக்கு அணிவித்து வருகிறோம். திருப்பதி ஏழுமலையானின் ஆபரணங்கள் அனைத்தும் பத்திரமாக உள்ளன. எந்த ஒரு ஆபரணங்களும் மாயமாகவில்லை. ஆகம பண்டிதர்கள் குழு அனுமதி அளித்தால், பலத்த பாதுகாப்போடு பக்தர்கள் பார்வையிட ஏற்பாடு செய்யப்படும்.

    2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏழுமலையான் கோவிலில் நடந்த பிரம்மோற்சவ விழா கருடசேவையின்போது உற்சவர் மலையப்பசாமிக்கு மைசூரு மகாராஜா காணிக்கையாக கொடுத்த ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது. அந்த ஆபரணத்தில் பதிக்கப்பட்டு இருந்த கல் ஒன்று பக்தர்கள் வீசிய நாணயங்களால் உடைந்து கீழே விழுந்து விட்டதாகவும், அதனை கண்டுபிடித்து எடுக்க தேவஸ்தானம் தவறிவிட்டதாகவும் ரமணதீட்சிதலு குற்றம்சாட்டி வருகிறார். பக்தர்கள் வீசிய நாணயங்களால் கல் உடைந்தது சரிதான். ஆனால், உடைந்த கல்லை எடுத்து பாதுகாப்பாக வைத்துள்ளனர். அந்த கல் உடைந்து கீழே விழுந்த விவரத்தை நீதிபதி ஜெகநாதராவ் தயாரித்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. உடைந்த கல் சிதறல்களையும் சேகரித்து வைத்துள்ளனர்.

    திருமலையில் 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை லட்டுக்கு பூந்தி தயாரிக்கும் கூடம் கட்டப்பட்டு வந்துள்ளது. அந்த பணிகள் அனைத்தும் பிரதான அர்ச்சகர் ரமணதீட்சிதலு, ஆகம பண்டிதர் சுந்தரவரதன், பெரிய ஜீயர்சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள் ஆகியோரின் ஆலோசனைப்படி கட்டப்பட்டு உள்ளது. செங்கற்களால் கட்டினால் கற்கள் சூடேறி சிதைந்து விடும். ஆகையால் கற்கள் சூடேறாமல் பூந்தி தயாரிக்கும் கூடம் கட்டப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு உடன் இருந்தார். 
    ×