search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய விளையாட்டுப் போட்டி"

    • தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 446 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
    • பிரதமர் நரேந்திர மோடி இந்த போட்டியை தொடங்கி வைக்கிறார்.

    சென்னை:

    37-வது தேசிய விளையாட்டுப் போட்டி வருகிற 25-ந் தேதி முதல் நவம்பர் 9-ந் தேதி வரை கோவாவில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த போட்டியை தொடங்கி வைக்கிறார். மொத்தம் 49 விளையாட்டுகள் நடைபெறும் இந்த போட்டியில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 446 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள். 116 அதிகாரிகளுடன் இந்த குழு பங்கேற்கிறது.

    அதிகபட்சமாக தடகளத்தில் இருந்து 80 பேரும், கால்பந்து, கூடைபந்து போட்டியில் தலா 40 பேரும் கலந்து கொள்கிறார்கள்.

    தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி அவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவர் ஐசரி கணேஷ் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா உள்ளிட்டோர் பங்கேற்று தமிழக வீராங்கனைகளை வாழ்த்தி வழியனுப்பினர்.

    • ஆமதாபாத்தில் 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் முன்னோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது.
    • தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம்.

    புதுடெல்லி:

    குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள இகேஏ அரீனா டிரான்ஸ் ஸ்டேடியாவில் 36வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் முன்னோட்ட நிகழ்வு ஞாயிறு மாலை நடைபெற உள்ளது. விளையாட்டின் மூலம் ஒற்றுமையைக் கொண்டாடுவோம் என்ற மையப்பொருளில், ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பின் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 12 வரை, 36-வது தேசிய விளையாட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. கடைசியாக இந்த விளையாட்டுப் போட்டிகள் 2015-ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்றன.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் மற்றும் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை மந்திரி அனுராக் தாக்கூர் ஆகியோருடன் இந்த மாபெரும் நிகழ்வில் கலந்துகொள்கிறார்.

    இந்த முன்னோட்ட நிகழ்வில், விளையாட்டுக்கள் கீதம் மற்றும் சின்னம் வெளியிடுதல், இணையதளம் மற்றும் செல்பேசி செயலி வெளியிடுதல் ஆகியவையும் இருக்கும். 9,000-க்கும் அதிகமான சிறப்பு விருந்தினர்கள் இந்த வண்ணமிகு விழாவில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    "தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம், இதை எப்போதும் இல்லாத வகையில் சிறந்த விளையாட்டுகளாக மாற்ற எந்தவொரு முயற்சியையும் விட்டுவைக்கவில்லை" என்று பூபேந்திர படேல் கூறினார்.

    பாரம்பரிய ஒலிம்பிக் விளையாட்டுகள் உட்பட 36 போட்டிகளில் 28 மாநிலங்கள் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களிலிருந்து 7,000 தடகள வீரர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மல்லகம்பம், யோகாசனம் போன்ற உள்நாட்டு விளையாட்டுகளும் முதல்முறையாக தேசிய விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெறும்.

    ×