search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திறன் மேம்பாடு"

    • "நான் முதல்வன் "திட்டத்தின் கீழ் வங்கி நிதி சேவை காப்பீட்டு துறையில் உள்ள வேலை வாய்ப்புகள்.
    • வணிகவியல் துறை பேராசிரியர்களும் 500க்கும் மேற்பட்ட வணிகவியல் மற்றும் துறை சார்ந்த மாணவிகளும் கலந்து கொண்டனர்,

    உடுமலை :

    உடுமலை ஸ்ரீ ஜிவிஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறையின் சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

    கல்லூரியின் வணிகவியல் துறை, தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து "நான் முதல்வன் "திட்டத்தின் கீழ் வங்கி நிதி சேவை காப்பீட்டு துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் மற்றும் அதற்கு தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. கல்லூரி செயலர் ஸ்ரீமதி சுமதி கிருஷ்ண பிரசாத் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் லட்சுமி வரவேற்றார். தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் அஜய் மற்றும் கல்வி ஆலோசகர் ராமச்சந்திரன் ஆகியோர் மாணவிகளுக்கு திறன் மேம்பாடு சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் வணிகவியல் துறை பேராசிரியர்களும் 500க்கும் மேற்பட்ட வணிகவியல் மற்றும் துறை சார்ந்த மாணவிகளும் கலந்து கொண்டு பயனடைந்தனர். வணிகவியல் துறை இணைப்பேராசிரியர் கலாவதி நன்றி கூறினார்.

    • அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இளைஞர் திறன் மேம்பாட்டு முகாம் நடந்தது.
    • வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன், உதவி திட்ட அலுவலர்கள் மரியா, வெள்ளபாண்டி, காளிதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா நடந்தது. மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் காளிதாசன் தலைமை தாங்கினார்.

    ஊரகவளர்ச்சி துறையின் கூடுதல் இயக்குநர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன், உதவி திட்ட அலுவலர்கள் மரியா, வெள்ளபாண்டி, காளிதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்களான கல்வி அறக்கட்டளை, பெட்கிராட், ரூட்செட் உள்பட 12 நிறுவனங்கள் கலந்து கொண்டன.

    இதில் அலங்காநல்லூர் வட்டாரத்தை சேர்ந்த 270-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு திறன்பயிற்சி சேர்க்கைக்கான சான்றிதழும், பயிற்சிக்கான உபகரணங்களும் பெற்றுக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார மேலாளர் மகாலட்சுமி மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர். உதவிதிட்ட அலுவலர் சின்னத்துரை நன்றி கூறினார்.

    ×