search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர் விபத்து"

    • விபத்துக்குள்ளான தனியாா் பேருந்துக்கு பின்னால் வந்த காா் பேருந்து மீது மோதியது.
    • காரில் பயணித்தவா்கள் அதிா்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினா்.

    காங்கயம்:

    கோவை மாவட்டம், சூலூா் பகுதியைச் சோ்ந்த வீரக்குமாா் உள்ளிட்ட 6 போ் திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் இருந்து அவிநாசிபாளையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனா். தாராபுரத்தில் இருந்து குண்டடம் வழியாக பல்லடம் செல்லும் சாலையில் தற்போது சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், காரில் வந்தவா்கள் அவிநாசிபாளையம் நோக்கி சென்றுள்ளனா்.

    இந்நிலையில் திருப்பூரில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பழனி நோக்கி பயணிகளுடன் தனியாா் பேருந்து வந்தது. கொடுவாய்-சக்திவிநாயகபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவிநாசிபாளையம் நோக்கி சென்ற காா் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை தாண்டி எதிரே வந்த தனியாா் பேருந்து மீது மோதியது.

    இதில் காரின் முன்பகுதி முற்றிலும் உருக்குலைந்தது. மேலும் பேருந்தின் முன்சக்கரம் தனியாக கழன்றது. இதில் காரில் பயணித்த வீரக்குமாா் (31), முருகேசன் (32), சஜீத் (33), வெற்றிச்செல்வன் (38) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், படுகாயமடைந்த மகேஷ்குமாா் (34), கிஷோா்குமாா் (35) ஆகியோரை அருகில் இருந்தவா்கள் மீட்டு திருப்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

    இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 5 போ் லேசான காயத்துடன் உயிர் தப்பினா். அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலும், விபத்துக்குள்ளான தனியாா் பேருந்துக்கு பின்னால் வந்த காா் பேருந்து மீது மோதியது. இதில் காரில் பயணித்தவா்கள் அதிா்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினா்.

    விபத்து குறித்து தகவலறிந்த காங்கயம் டி.எஸ்.பி., பாா்த்திபன், காங்கயம் இன்ஸ்பெக்டர் காமராஜ் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். இந்த விபத்து குறித்து ஊதியூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மகேஷ்குமார் இன்று காலை உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. கிஷோர்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • நகை திருட்டப்பட்ட சம்பவம் குறித்து விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
    • மனிதாபமின்றி விபத்தில் பலியான பெண்ணிடம் இருந்து நகைகளை மர்மநபர்கள் திருடிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் ஆத்துப்பாளையம் ஜே.சி.கே. கார்டன் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். கார் டயர்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவரது மனைவி சண்முகபிரியா (வயது 34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று மாலை சண்முக பிரியா வீட்டிற்கு தேவையான காய்கறிகள் வாங்குவதற்காக திரு முருகன்பூண்டிக்கு சென்றார்.அங்கு காய்கறிகள் வாங்கி விட்டு மொபட்டில் ஆத்துப்பாளையத்திற்கு புறப்பட்டார். செல்லும் வழியில் பின்னால் வந்த லாரி மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சண்முகபிரியா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் திரு முருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் சண்முகபிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மனைவி மரணமடைந்த தகவலை அறிந்து அதிர்ச்சியடைந்த தியாகராஜன் உடனடியாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றார். அங்கு அவரிடம் போலீசார் சண்முகபிரியா அணிந்திருந்த தங்க கம்மல் மற்றும் அவர் வைத்திருந்த பொருட்களை ஒப்படைத்தனர். அப்போது சண்முகபிரியா அணிந்திருந்த 3½ பவுன் மதிப்புள்ள தங்க தாலி செயின் மற்றும் மோதிரம் ஆகியவற்றை காணவில்லை. அவற்றின் மதிப்பு ரூ.1.50 லட்சம் இருக்கும்.

    இது பற்றி தியாகராஜன் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் நகைகளை திருடிய மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து சண்முகபிரியாவின் நகைகளை மர்மநபர்கள் திருடினார்களா? அல்லது தனியார் ஆம்புலன்சில் உடலை கொண்டு செல்லும் போது திருடப்பட்டதா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மனிதாபமின்றி விபத்தில் பலியான பெண்ணிடம் இருந்து நகைகளை மர்மநபர்கள் திருடிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. 

    • கிடா விருந்துக்கு உறவினர்களை அழைத்து விட்டு வந்தபோது வேன் மோதி தம்பதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • விபத்து தொடர்பாக குடிமங்கலம் போலீசார் வேனை ஓட்டி வந்த கருணாகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடிமங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் பெதப்பம்பட்டி அருகே உள்ள லிங்கமநாயக்கன்புதூரை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60). விவசாயம் செய்து வந்தார். இவரது மனைவி பொன்னுத்தாய் (55). இவர்களது தோட்டத்தில் வருகிற 12-ந் தேதி கிடா விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதற்காக உறவினர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தனர். இந்தநிலையில் ஆத்துக்கிணத்துப்பட்டியில் உள்ள உறவினரை அழைக்க தம்பதி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் உறவினரை சந்தித்து அழைப்பு விடுத்து விட்டு லிங்கமநாயக்கன்புதூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    சுங்காரமடக்கு பகுதியில் வந்து கொண்டிருந்த போது தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் பின்புறம் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் தம்பதி இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். பொதுமக்கள் தம்பதியை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தம்பதியை பரிசோதனை செய்த டாக்டர்கள் 2 பேரும் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக குடிமங்கலம் போலீசார் வேனை ஓட்டி வந்த கருணாகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கிடா விருந்துக்கு உறவினர்களை அழைத்து விட்டு வந்தபோது வேன் மோதி தம்பதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×