search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி.மு.க. இளைஞர் அணி"

    • இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் வெள்ளாளங் குளத்தில் நடைபெற்றது.
    • முகாமில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் முகேஷ் ஏற்பாட்டில் இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் வெள்ளாளங் குளத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் முகேஷ் தலைமை தாங்கினார். மேலநீலிதநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ராஜ், ராயல் கார்த்தி, மணிகண்டன், ராஜராஜன், அன்சாரி மற்றும் இளைஞர் அணி ஜலால், யாசர், அருண்குமார், சந்தோஷ், இளங்குமரன், ஆஷிக் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மாணவரணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு அளித்துள்ள இந்தி திணிப்பிற்கான பரிந்துரைகளையும், ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தையும் மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி ராமநாதபுரம் அரண்மனை அருகே மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் இன்பா ரகு ஏற்பாட்டில் தி.மு.க.இளைஞர் அணி மாணவர் அணி சார்பில் மாவட்ட திமுக செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், ராமநாதபுரம் நகர செயலாளர், நகர் மன்ற தலைவர் கார்மேகம், நகர் மன்ற துணைத் தலைவர் பிரவீன் தங்கம் முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி, சுந்தர்ராஜன், முன்னாள் எம்எல்ஏ முருகவேல், முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகரன், கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது, தி.மு.க.இளைஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான், துணை செயலாளர் ஜெய்னுதீன், நகர் மாணவர் அணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், கீழக்கரை கவுன்சிலர் சர்ப்ராஸ் நவாஸ், ராமேசுவரம் நகர் செயலாளர் நாசர்கான், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய அரசு கண்டித்து ஏராளமானோர் கோஷமிட்டனர். மாணவரணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

    ×