search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில் அருகே தி.மு.க. இளைஞரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
    X

    சங்கரன்கோவில் அருகே தி.மு.க. இளைஞரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

    • இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் வெள்ளாளங் குளத்தில் நடைபெற்றது.
    • முகாமில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் முகேஷ் ஏற்பாட்டில் இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் வெள்ளாளங் குளத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் முகேஷ் தலைமை தாங்கினார். மேலநீலிதநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ராஜ், ராயல் கார்த்தி, மணிகண்டன், ராஜராஜன், அன்சாரி மற்றும் இளைஞர் அணி ஜலால், யாசர், அருண்குமார், சந்தோஷ், இளங்குமரன், ஆஷிக் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×