search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தரச்சான்றிதழ்"

    • சிக்கல் நிறைந்த பிரசவங்கள் பாா்ப்பதில் முதலிடம் வகிக்கிறது.
    • இந்த ஆஸ்பத்திரிக்கு லக்சயா பிளாட்டினம் தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனை மகப்பேறு சேவையில் சிறந்து விளங்குகிறது. நாள்தோறும் 40 முதல் 55 பிரசவங்கள் நடைபெறுகின்றன. இதில் 20 முதல் 25 மகப்பேறு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

    சிக்கல் நிறைந்த பிரசவங்கள் பாா்க்கப்பட்டு, கா்ப்பி ணிகள் காப்பாற்றப்பட்டு வருகின்றனா். தமிழ்நாடு அளவில் இந்த மருத்துவமனை பிரசவம் மற்றும் சிக்கல் நிறைந்த பிரசவங்கள் பாா்ப்பதில் முதலிடம் வகிக்கிறது.

    இந்நிலையில், லக்சயா என்கிற திட்டத்தின் மூலம் இந்த மருத்துவமனைக்கு லக்சயா பிளாட்டினம் தரச்சான்றிதழ் வழங்க ப்பட்டிருப்பது பெருமை அளிக்கிறது .

    மேற்கண்ட தகவலை தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் பாலாஜிநாதன் தெரிவித்துள்ளார்.

    ×