search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு நாள்"

    • திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.
    • அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தலைமையில், மேயர் தினேஷ்குமார் , மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலையில், திருப்பூர் மாநகராட்சி காந்தி வித்யாலயா பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு நாள் உருவான வரலாறு தொடர்பான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.

    மேலும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது. பேரணியை தொடங்கி வைத்ததுடன், கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டனர்.

    அப்போது கலெக்டர் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ம் நாளையே தமிழ்நாடு நாளாக இனி கொண்டாடப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்தார். அதனடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழாவினை பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரும் அறியும் வண்ணமும், மேலும்அவர்களிடம் தமிழ்நாடு நாள் உருவான வரலாறு தொடர்பான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணமும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பேரணி மற்றும் புகைப்படக்கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக பள்ளிமாணவ- மாணவிகள் பங்குபெற்ற தமிழ்நாடு நாள் விழா குறித்த விழிப்புணர்வு நடைபேரணியை காந்தி வித்யாலயா பள்ளியில் இருந்து கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.

    இப்பேரணி மீண்டும் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் நிறைவு பெற்றது. இப்பேரணியில் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் காந்தி வித்யாலயா பள்ளிகளை சேர்ந்த சுமார்250 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, தமிழ்நாடு நாள் விழா விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி, தமிழ் மொழியின் பெருமையும், தமிழ்நாட்டின் வரலாற்று முக்கியத்துவ நிகழ்வுகளையும் உரக்கச் சொல்லி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக அமைக்கபட்டுள்ள தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுவதன் அவசியம் குறித்த வரலாற்றுப் பதிவுகள், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையிலான புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிடப்பட்டது.

    மேலும் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக தமிழ்நாடு நாள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும வகையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டது.குறிப்பாக செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக அமைக்கப்ப ட்டுள்ள இப்புகைப்பட கண்காட்சி யானது இன்று முதல் 23-ந்தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாள்தோறும் காலை 9:30 மணி முதல் மாலை5.30 மணி வரை பொதுமக்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் பார்வையிட ஏ ற்பாடுகள் செய்ய ப்பட்டுள்ளது என்றார்.

    விழாவில் துணை மேயர் பாலசுப்பிர மணியன், மாநகராட்சி 4-ம்மண்டலத்தலைவர் இல.பத்ம நாபன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்பாலமுரளி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சதீஸ்குமார், மாவட்ட கல்வி அலுவலர் (திருப்பூர்) பக்தவச்சலம், பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது.
    • பேரணியில் சிலம்பாட்டம்,நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் தமிழ்நாடு நாளை முன்னிட்டு சிறப்பு புகைப்பட கண்காட்சியை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ராஜா,பழனிநாடார் ஆகியோர் திறந்து வைத்தனர். பின்னர் மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    கலெக்டர், பொதுமக்கள் மாணவ- மாணவிகள் சிறப்பு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர். பேரணியானது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி மேம்பாலம் வழியாக மஞ்சம்மாள் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது.

    பேரணியில் மஞ்சம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் இலஞ்சி ராமசாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    பேரணியில் சிலம்பாட்டம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சிறப்பு புகைப்பட கண்காட்சியை மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தமிழ்செல்வி, துணை தலைவர் உதய கிருஷ்ணன், தென்காசி ஒன்றிய குழு தலைவர் சேக் அப்துல்லா, தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், முதன்மைக் கல்வி அலுவலர் முத்தையா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
    • மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழாவை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் அறியும் வண்ணமும், தமிழ்நாடு நாள் உருவான வரலாறு தொடர்பான விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    ஊர்வலத்திற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    காரை கூட்ரோடு பகுதியிலிருந்து கலெக்டர் அலுவலகம் வரை நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், பல்வேறு பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ஊர்வலத்தை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நாள் உருவான வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சி யையும், அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்து பார்வையிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு நாள் குறித்து நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு, கவிதை போட்டி களில் வெற்றிப் பெற்ற பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள் 8 பேருக்கு முதல் பரிசாக தலா ரூ.10 ஆயிரம், 8 பேருக்கு 2-வது பரிசாக தலா ரூ.7 ஆயிரம் ,8 பேருக்கு 3-ம் பரிசாக தலா ரூ.5 ஆயிரம் என மொத்தம் 24 மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகைக்கான காசோ லைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

    புகைப்பட கண்காட்சி

    தொடர்ந்து, பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமை க்கப்பட்டுள்ள தமிழ்நாடு நாள் உருவான வரலாறு தொடர்பான புகைப்பட கண்காட்சியை பார்வை யிட்டு சென்றனர்.

    இந்த கண்காட்சி வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கி ழமை) வரை தொடர்ந்து 6 நாட்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாள்தோறும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பார்வையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளது.

    இந்நிகழ்ச்சியில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக், நகரமன்ற தலைவர்கள் திருமதி.சுஜாதா வினோத், முகமது அமீன், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, தமிழ் வளர்ச்சித் துறை கண்காணிப்பாளர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் பார்வையிடும் வகையில் சிறப்பு புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
    • மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.

    கடலூர்:

    தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1. 11.1956 -ம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் நாள் தமிழ்நாடு நாள் என்ற பெயரில் சிறப்பாக கொண்டாடப்பட்டுவந்தது. இந்த நிலையில் ஜூலை 18- ம் நாள் தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள் தான் தமிழ்நாடு நாள் என கொண்டாடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டன. இதனை கொண்டாடும் வகையில் கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழாவினை இன்று( 18 ந்தேதி) முதல் வருகிற 23- ந்தேதி வரை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பார்வையிடும் வகையில் சிறப்பு புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    இதனை கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி திறந்து வைத்தார். மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, கூடுதல்கலெக்டர் மதுபாலன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் தமிழ்நாடு நாள் குறித்து விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். இப் பேரணியில் அரசு மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 200 பேர் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கொண்டு கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனி, தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் அன்பரசி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (பொறுப்பு) பாலமுருகன், மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்குபெறும் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது.
    • அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

    தருமபுரி,

    "தமிழ்நாடு நாள்" விழாவை முன்னிட்டு இன்று பேரணி மற்றும் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது.

    இது குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-

    தமிழ்நாடு நாள் ஜூலை 18 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொண்டார். விழாவில் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது.

    நடப்பு ஆண்டில் ஜுலை 18-ம் தேதி இன்று தருமபுரி மாவட்டத்தில் "தமிழ்நாடு நாள்" குறித்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்குபெறும் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது. இப்பேரணியில் மாணவ, மாணவியர்கள் தமிழ்நாடு குறித்த சிறப்பை எடுத்துரைக்கும் விதமாக பதாகைகளை ஏந்திச் செல்வார்கள்.

    அதேபோன்று "தமிழ்நாடு நாள்" முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினரும் அறியும் வகையிலும், தமிழ்நாடு நாள் உருவான வரலாறு குறித்த சிறப்புகளை பொதுமக்கள் அறியும் வகையிலும், அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

    எனவே, மாணவ மாணவியர்கள். பொதுமக்கள் அனைவரும் "தமிழ்நாடு நாள்" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

    • கண்காட்சி காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை அனைவரும் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு பேரணியானது திருப்பூர் காந்தி வித்யாலயம் பள்ளியில் தொடங்குகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜூலை-18 ம் நாளினை தமிழ்நாடு நாளாக கொண்டாட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு நாள் விழாவினை மாநில முழுவதும் உள்ள பொதுமக்கள், மாணவர்கள் அறியும் வண்ணமும், மேலும் அவர்களிடம் தமிழ்நாடு நாள் உருவான வரலாறு தொடர்பான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணமும் பள்ளி மாணவ-மாணவிகளை கொண்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் புகைப்படக்கண்காட்சி நடத்தப்படுகிறது.

    தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு பேரணியானது காலை 9.30 மணியளவில் திருப்பூர் காந்தி வித்யாலயம் பள்ளியில் தொடங்குகிறது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகைப்படக்கண்காட்சியை மாணவ-மாணவிகள் பார்வையிடும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இப்புகைப்படக்கண்காட்சி காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் இந்த தமிழ்நாடு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்க்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு நாள் விழா இன்று காலை 9.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
    • மெரினா கடற்கரையில் ஒடிசா மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கின் தமிழ்நாடு நாள் சிறப்பு மணற்சிற்பம் உருவாக்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18 (1967)-ம் நாளையே தமிழ்நாடு திருநாளாக இனி கொண்டாடப்படும் என முதலமைச்சர் அறிவிப்பிற்கிணங்க, சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு நாள் விழா 18.07.2022 (இன்று) காலை 9.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

    இவ்விழாவில் மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

    இந்தக் கருத்தரங்கில், தமிழ்நாடு உருவான வரலாறு என்ற தலைப்பில் சமூக நீதி கண்காணிப்பு (ம) பாதுகாப்புக் குழுத் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடந்த போராட்டமும் என்ற தலைப்பில் ஆழி செந்தில்நாதனும், தமிழகத்துக்காக உயிர் கொடுத்த தியாகிகள் என்ற தலைப்பில் வாலாசா வல்லவனும், தாய்நாட்டுக்குப் பெயர் சூட்டிய தனயன் என்ற தலைப்பில் முனைவர் ம. இராசேந்திரனும், முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு என்ற தலைப்பில் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலனும் கருத்துரையாற்றுகிறார்கள்.


     



    மின்னொளியில் ஜொலிக்கும் தியாகி சங்கரலிங்கனாரின் மணிமண்டபம்

    கலைவாணர் அரங்கத்தில் தொல்லியல் துறை சார்பாக அமைக்கப்படும் தொல்பொருட்கள் கண்காட்சியில் கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, மயிலாடும்பாறை, கொடுமணல் ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள அரிய வகை தொல்பொருட்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன. மேலும், தமிழ்நாடு நில அளவைத்துறை சார்பில் சென்னை மாகாணத்தின் பழைய மற்றும் தற்போது வரையிலான ஆவணங்கள் மற்றும் வரைபடங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.

    இவ்விழாவினையொட்டி, சென்னை காமராஜர் சாலை மெரினா கடற்கரையில் ஒடிசாவைச் சேர்ந்த புகழ்மிக்க மணற்சிற்பக் கலைஞர் பத்மஸ்ரீ சுதர்சன் பட்நாயக்கின் தமிழ்நாடு நாள் சிறப்பு மணற்சிற்பமும் உருவாக்கப்படுகிறது.

    கலை பண்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு மணற்சிற்பம் உருவாக்கப்படும் மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, செம்மொழிப் பூங்கா மற்றும் சென்டரல் சதுக்கம் ஆகிய 4 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடத்தப்படுகிறது.

    சென்னை காமராஜர் சாலை விவேகானந்தர் இல்லம் எதிரில் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நாள் சிறப்பு மணற்சிற்பம் மற்றும் கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் கண்காட்சி ஆகியவை 18.07.2022 முதல் 20.07.2022 வரை 3 நாள் காட்சிப்படுத்தப்படுகிறது. இக்கண்காட்சிகளை பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் கண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளது.

    ×