search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாடு நாள் தின விழிப்புணர்வு ஊர்வலம்
    X

    தமிழ்நாடு நாள் தின விழிப்புணர்வு ஊர்வலம்

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
    • மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழாவை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் அறியும் வண்ணமும், தமிழ்நாடு நாள் உருவான வரலாறு தொடர்பான விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    ஊர்வலத்திற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    காரை கூட்ரோடு பகுதியிலிருந்து கலெக்டர் அலுவலகம் வரை நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், பல்வேறு பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ஊர்வலத்தை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நாள் உருவான வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சி யையும், அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்து பார்வையிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு நாள் குறித்து நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு, கவிதை போட்டி களில் வெற்றிப் பெற்ற பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள் 8 பேருக்கு முதல் பரிசாக தலா ரூ.10 ஆயிரம், 8 பேருக்கு 2-வது பரிசாக தலா ரூ.7 ஆயிரம் ,8 பேருக்கு 3-ம் பரிசாக தலா ரூ.5 ஆயிரம் என மொத்தம் 24 மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகைக்கான காசோ லைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

    புகைப்பட கண்காட்சி

    தொடர்ந்து, பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமை க்கப்பட்டுள்ள தமிழ்நாடு நாள் உருவான வரலாறு தொடர்பான புகைப்பட கண்காட்சியை பார்வை யிட்டு சென்றனர்.

    இந்த கண்காட்சி வருகிற 23-ந் தேதி (ஞாயிற்றுக்கி ழமை) வரை தொடர்ந்து 6 நாட்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாள்தோறும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பார்வையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு ள்ளது.

    இந்நிகழ்ச்சியில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அசோக், நகரமன்ற தலைவர்கள் திருமதி.சுஜாதா வினோத், முகமது அமீன், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, தமிழ் வளர்ச்சித் துறை கண்காணிப்பாளர் சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×