search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டம் - நாளை நடக்கிறது
    X

    கோப்புபடம்

    திருப்பூரில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டம் - நாளை நடக்கிறது

    • கண்காட்சி காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை அனைவரும் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு பேரணியானது திருப்பூர் காந்தி வித்யாலயம் பள்ளியில் தொடங்குகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜூலை-18 ம் நாளினை தமிழ்நாடு நாளாக கொண்டாட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு நாள் விழாவினை மாநில முழுவதும் உள்ள பொதுமக்கள், மாணவர்கள் அறியும் வண்ணமும், மேலும் அவர்களிடம் தமிழ்நாடு நாள் உருவான வரலாறு தொடர்பான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணமும் பள்ளி மாணவ-மாணவிகளை கொண்டு விழிப்புணர்வு பேரணி மற்றும் புகைப்படக்கண்காட்சி நடத்தப்படுகிறது.

    தமிழ்நாடு நாள் விழிப்புணர்வு பேரணியானது காலை 9.30 மணியளவில் திருப்பூர் காந்தி வித்யாலயம் பள்ளியில் தொடங்குகிறது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகைப்படக்கண்காட்சியை மாணவ-மாணவிகள் பார்வையிடும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இப்புகைப்படக்கண்காட்சி காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் இந்த தமிழ்நாடு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்க்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×