search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் விடுதி"

    • ஆவணங்களுடன் மேற்கண்ட ஆன்லைன் போர்ட்டலில் வருகிற 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
    • அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) அபராதம்.

    சென்னையில் முறையாக பதிவு செய்யப்படாத தனியார் மகளிர் விடுதி நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஆகியவை தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்குமுறை சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015-ன் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாத விடுதிகள் பதிவு செய்வதற்கு https://tnswp.com என்ற இணையதள ஆன்லைன் போர்ட்டல் மூலமாக பதிவு செய்யலாம்.

    அதன்படி அறக்கட்டளை பதிவு பத்திரம், சொந்த கட்டிடம்/வாடகை ஒப்பந்த பத்திரம், கட்டிட வரைபடம், கட்டிட உறுதிச் சான்று, தீயணைப்பு துறையின் தடையில்லா சான்று மற்றும் சுகாதாரச்சான்று ஆகிய ஆவணங்களுடன் மேற்கண்ட ஆன்லைன் போர்ட்டலில் வருகிற 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    அவ்வாறு முறையாக பதிவு செய்யப்படாத தனியார் விடுதி மற்றும் இல்ல நிர்வாகிகள் மீது சட்டப்படி காவல்துறையின் மூலமாக வழக்குப்பதிவு செய்து அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம்) அபராதம் விதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நவீன் தந்திராயன்குப்பத்தில் உள்ள தனியார் விடுதியில் பணி செய்து வந்தார்.
    • சந்தே கமடைந்த ஊழியர்கள், விடுதி உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டத்தில் ஆரோவில், கோட்டக்குப்பம், பொம்மையார்பாளையம் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளிவில் வந்து செல்வார்கள். இவர்கள் தங்கி இப்பகுதியை சுற்றிப்பார்ப்பதற்காக இங்கு தனியார் தங்கும் விடுதிகள் அதிகளவில் உள்ளது. நேபாள நாட்டைச் சேர்ந்த நவீன் (வயது 20) என்பவர் தந்திராயன்குப்பத்தில் உள்ள தனியார் விடுதியில் பணி செய்து வந்தார். இவர் அங்குள்ள அறையிலேேய தங்கி பணியாற்றினார். இந்நிலையில் நேற்று முன்தினம் பணிகளை முடித்துவிட்டு அவரது அறைக்கு சென்றார். நேற்று காலை வெகுநேரமாகியும், அவர் வெளியில் வரவில்லை.

    இதனால் சந்தே கமடைந்த ஊழியர்கள், விடுதி உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். அவர் கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் சுந்த ர்ராஜன் தலைமையிலான போலீசார், விடுதி அறைக்குள் சென்றனர். அங்கு நவீன் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் தொங்கினார்.நேபாள இளைஞர் நவீனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுவை கனக செட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து நேபாளத்தில் வசிக்கும் நவீனின் பெற்றோருக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×