search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர் திறக்க வேண்டும்"

    • மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு கடந்த 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது
    • வாய்க்காலின் பல இடங்களில் புதர் மண்டியுள்ள புல், பூண்டு, மரங்கள் என அனை த்தையும் அகற்றி தூர்வார வேண்டும்

    அம்மாபேட்டை

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு கடந்த 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதைத்தொ டர்ந்து மேட்டூர் வலது மற்றும் இடது கரை வாய்க்காலில் வரும் ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். மேலும் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் வரத்துக்கு ஏற்ப வாய்க்காலில் தண்ணீர் திறப்பது சிறிது கால தாமதமும் ஆகலாம்.

    கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யும் காலங்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் போது அந்தந்த காலகட்டங்களில் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு தண்ணீரை திறப்பதுண்டு. டெல்டா பாசனத்திற்கு அணையில் இருந்து 13 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் வெளியேறும் நிலையில் 120 அடி கொள்ளளவு உள்ள அணையின் நீர்மட்டம் 91 அடியாக உள்ளது.

    வாய்க்காலில் தண்ணீர் திறக்க இன்னும் ஒரு மாத காலம் இருக்கும் நிலையில் அதற்கு முன்பு வாய்க்காலின் பல இடங்களில் புதர் மண்டியுள்ள புல், பூண்டு, மரங்கள் என அனை த்தையும் அகற்றி தூர்வார வேண்டும்.

    அப்போது தான் பாசன த்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர் கடை மடை வரை தங்கு தடை யின்றி செல்லு ம். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதற்கா ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    • பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது.
    • நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கீழ்பவானி பாசனத்திற்கு ஆகஸ்ட் 1-ந் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஈரோடு:

    கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கத்தின் தலைவர் நல்லசாமி முதல்-அமைச்ச ருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:-

    பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது. அணையின் மொத்த கொள்ளளவான 32.8 டிஎம்சியில், தற்போது 19 டி.எம்.சி.க்கும் மேலாக தண்ணீர் உள்ளது.

    நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடந்த ஆண்டுகளை போல நடப்பாண்டிலும் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்க ப்படுகின்றது. வழக்கமாக அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்கு ஆகஸ்ட்டு 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.ஆனால் இந்தாண்டு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் முன்கூட்டியே அதாவது ஆகஸ்ட்டு 1-ந் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கி றோம்.

    நடப்பாண்டில் மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்க ப்பட்டது போல பவானி சாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்கும் முன்கூட்டியே தண்ணீர் திறக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை முன்கூட்டியே அரசு அறிவித்தால் நிலத்தை தயார் செய்வதற்கும், இடு பொருட்களை தேடுவதற்கும் ஏற்புடையதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×