search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுப்பு"

    • ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் போதைப் பொருள்தடுப்பு மற்றும் போதைப் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • மாணவ, மாணவிகளுக்கு உடல் நலம் மற்றும் மன நலம் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    ஈரோடு, ஆக. 13-

    ஈரோடு மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு வாரத்தை யொட்டி போதைப் பொருள் தடுப்பு, போதைப் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதையொட்டி ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் போதைப் பொருள்தடுப்பு மற்றும் போதைப் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் அமைச்சர் சு.முத்து சாமி கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மாணவர்க ளின் மனநலம் மற்றும் கற்றல் குறைபாடுகள் குறித்த கருத்தரங்கம் நடை பெற்றது.

    இப்பயிற்சியில் 240 ஆசிரியர்கள் நேரடியாக வும், 380-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் காணொலி காட்சி வழியாகவும் பங்கேற்றனர்.

    மேலும் மாவட்ட கலெக்டரின் அறிவுரையின்படி, ஈரோடு மற்றும் திகிணாரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் போதை பொருள் விழிப்புணர்வு பற்றிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    பனக ஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்பு ணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    தொடர்ந்து தாளவாடி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி யில் போதைப்பு பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியும், கோபி செட்டி பாளையம் அடுத்த கரட்டடி பாளையம் அரசு மேல்நிலை ப்பள்ளியில் மாணவர்களுக்கான உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.

    மேலும் போதை பொருள் தடுப்பு குறித்து டாக்டர்கள், செவிலியர்கள் பேசினர்.

    அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகளுக்கு உடல் நலம் மற்றும் மன நலம் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    • 3 நாட்களில் 6 பேர் பாதிப்பு
    • பரவல் அதிகரித்ததையடுத்து சோதனையை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அதிகா ரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வரு கிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்திருந்தது. இதனால் தினசரி பாதிப்பு பூஜ்ஜியத்தில் இருந்து வந்தது. இருப்பினும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று மேலும் 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    செருப்பாலுரை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவரும் தேவிகோட்டை சேர்ந்த 36 வயது வாலிபர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் நேற்று 338 பேருக்கு சோதனை நடத்தப்பட்ட நிலையில் இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பரவல் அதிகரித்ததையடுத்து சோதனையை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வரு

    கிறார்கள்.

    இதையடுத்து காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் கொரோனாசோதனை நடத்தப்பட்டு வருக்கிறது. வெளியூர் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வருப வர்களையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கேரளாவில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கும் சோ தனை நடத்தப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை 19419 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மாவட்டம் முழுவதும் இதுவரை 79 ஆயிரத்து 936 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உள்ளனர்.

    ×