search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்கும் விடுதி"

    • அறையை பயன்படுத்தி வந்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
    • அதிகாரிகள் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரிடம் ஆலோசனை.

    குஜராத் பல்கலைக்கழக தங்கும் விடுதியில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளை சேர்ந்த ஆறு மாணவர்கள் அறையை காலி செய்ய வலியுறுத்தப்பட்டு இருப்பதாக பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தங்குவதற்கான அவகாசம் முடிந்த பிறகும், அறையை பயன்படுத்தி வந்ததால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    முன்னதாக தங்கும் விடுதியில் நமாஸ் செய்த மாணவர்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மார்ச் 16 ஆம் தேதி நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆப்கன் மற்றும் காம்பியாவை சேர்ந்த அதிகாரிகள் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரிடம் ஆலோசனை நடத்தினர்.

    "தங்குவதற்கான கால அவகாசம் முடிந்த பிறகும், தங்கும் விடுதியை பயன்படுத்தி வந்த ஆறு ஆப்கன் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க மாணவர்கள் அறையை காலி செய்ய வலியுறுத்தப்பட்டனர். இவர்கள் படிப்பை நிறைவு செய்துவிட்டனர். எனினும், அலுவல் பணிகள் முழுமை பெறாததால் தங்கும் விடுதியை பயன்படுத்தி வந்தனர்," என்று துனை வேந்தர் நீரஜ் குப்தா தெரிவித்தார்.

    "அவர்களுக்கான அலுவல் பணிகள் முழுமை பெற்ற நிலையில், அவர்கள் பாதுகாப்பாக அவர்களது நாட்டிற்கு செல்ல முடியும். முன்னாள் மாணவர்கள் யாரையும் தங்கும் விடுதியில் தங்க வைக்க நாங்கள் விரும்பவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் மாணவர்களிடம் விடுதியை காலி செய்ய அறிவுறுத்தி உள்ளனர்," என்று அவர் மேலும் தெரிவித்தார். 

    • மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி தினந்தோறும் வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.
    • வேறு ஏதேனும் காரணமா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூரில் கருவூல கணக்குத் துறை ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலூர் புதுப்பாளை யத்தை சேர்ந்தவர் அந்தோணி சகாயராஜ் (47). இவர் கடலூர் மாவட்ட கருவூல கணக்கு துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால், தனது குடும்பத்தை பிரிந்து கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி தினந்தோறும் வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.

    இந்நிலையில் இன்று காலை அறையில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்தோணி சகாயராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தோணி சகாய ராஜ் தூக்கு ேபாட்டு தற்ெகாலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு ஊழியர் தற்கொ லை செய்து கொண்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஊட்டி-200-வது விழா மற்றும் கோடை விழா 2023 நடைபெற்று வருகிறது.
    • சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் தங்குகின்றனர்.

    ஊட்டி,

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோவை மாவட்ட கலெக்டராக இருந்த ஜான் சல்லிவன் 1819-ம் ஆண்டு ஊட்டியை கண்டறிந்தார். இதையடுத்து தனது அயராத முயற்சியால் 1822-ம் ஆண்டு ஊட்டியை உருவாக்கி வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ஊட்டி நகரம் மற்றும் ஏரி உருவாக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டராக ஜான் சல்லிவன் இருந்தார்.

    கோத்தகிரி கன்னேரி முக்கு பகுதியில் அவர் கட்டிய பங்களா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு நினைவகமாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் ஊட்டி நகரம் உருவாகி 200-வது ஆண்டு தொடக்க விழாவை கடந்த ஆண்டு மே மாதம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையொட்டி சுற்றுலாவை மேம்படுத்த வும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியது. கோடை சீசனையொட்டி இன்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பா டுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் ஏற்கனவே தொடங்கிய ரோஜா கண்காட்சியை ஒட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் நீலகிரி மாவட்டம் முழுவதும் அலைமோதியது. இதன் காரணமாக வார இறுதி நாட்களில் தங்கும் விடுதிகளில் அறைகள் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். ஒரு சிலர் சாலையோரம் மற்றும் பஸ் நிலையத்தில் தங்கினர்.

    இந்த நிலையில் ஊட்டி-200-வது விழா மற்றும் கோடை விழா 2023 முன்னிட்டு மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக ஊட்டி வெண்லாக் சாலையில் சிறப்பு சுற்றுலா மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இது குறித்து சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த சிறப்பு தகவல் மையம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வருகிற 31-ந் தேதி வரை செயல்படும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளின் காலியறைகள் குறித்த விவரம், புதிதாக அமைக்கப்பட்ட வாகன நிறுத்தும் இடங்கள் விவரம், வாகனங்கள் திருப்பி விடப்படும் வழித்தட விபர ங்கள் உள்பட பல்வேறு விவரங்களை நேரிலும் 0423-2443977 மற்றும் 8122643533 என்ற எண்ணி லும் தொடர்பு கொண்டு பெறலாம் என்றனர்.

    • எஸ்.எஸ்.எஸ். பார்க் தங்கும் விடுதி திறப்பு விழா நடந்தது.
    • கோவிலூர் எஸ்.எஸ்.சுப்பிரணியன்,பொறியாளர் முருகானந்தம் குடும்பத்தினர் திறப்பு விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா கோவிலூரில் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய எஸ்.எஸ்.எஸ். பார்க் தங்கும் விடுதி திறப்பு விழா குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அருளாசியுடன் நடந்தது.

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கற்பகம் இளங்கோ, காரைக்குடி அ.தி.மு.க நகர செயலாளர் மெய்யப்பன்,தொழிலதிபர் சத்குரு தேவன் முன்னிலை வகித்தனர். கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரி சுப்பிரமணியன் வரவேற்றார். தொழிபதிபர் படிக்காசு திறந்து வைத்தார்.

    சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்நாதன், மாங்குடி, ஆடிட்டர் ராஜகோபால், மாநில நல்லாசிரியர் வீரபாண்டியன், சென்னை ஏ.வி.எம். ஸ்டுடியோ மேலாளர் விஸ்வநாதன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். லிப்ட் வசதியை முன்னாள் அமைச்சர் பாஸ்கரனும், ஜெனரேட்டரை ஐ.ஓ.பி. வங்கி மேலாளர் மனோஜ்குமாரும் தொடங்கி வைத்தனர்.

    ஆவின் சேர்மன் அசோகன், அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி,ஒன்றிய செயலாளர்கள் ஜெயகுணசேகரன், சேவியர்தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் ஒன்றிய செயலாளர் கோவிலூர் எஸ்.எஸ்.சுப்பிரணியன்,பொறியாளர் முருகானந்தம் குடும்பத்தினர் திறப்பு விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • வனவிலங்குகள்-பறவைகளை கண்டு ரசிக்கலாம்
    • சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு வசதியாக இருக்கும் என வனத்துறையினர் முடிவு செய்தனர்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் வால்பாறையும் ஒன்று.

    இங்கு முக்கியமான சுற்றுலா அம்சங்களாக சின்னக்காலர் அருவி, சோலையார் அணை, புல் குன்று, நல்ல முடி எஸ்டெட் ஆகியவை அறியப்படுகின்றன.மேலும் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.வால்பாறையில் எப்போதும் சீதோஷண நிலை இருந்து வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை ஆண்டு முழுவதும் இருக்கும்.

    வால்பாறையில் யானைகள் கூட்டம், காட்டெருமை, கடமான், இருவாச்சி பறவை மற்றும், பல்வேறு அறியவகை பறவைகளை கண்டு ரசிக்கலாம். வால்பாறைக்கு சுற்றுலா வரும் மக்கள் தனியார் தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் தங்க வேண்டி உள்ளது. இந்த நிலையில் சிறுகுன்றா பகுதியில் வனத்துறையினருக்கு சொந்தமான விடுதி இருந்தது. இதனை புதுப்பித்தால் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு வசதியாக இருக்கும் என வனத்துறையினர் முடிவு செய்தனர்.

    இதையடுத்து வனத்துறையினர் சிறுகுன்றா அரசு விடுதியை புதுபிக்க முடிவு செய்தனர். ரூ.16 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை புத்தாண்டின் முதல் வாரத்தில் செல்பாட்டுக்கு கொண்டு வர உள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணிகள் தங்குவதற்கு ரூ.16 லட்சம் செலவில் சிறுகுன்றா பகுதியில் இருந்த விடுதி புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது வால்பாறை டவுனில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் மலையில் அமைந்து உள்ளது.

    4 அறைகளை கொண்ட இந்த விடுதியின் வாடகை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.4,500 வரை நிர்ணைக்கப்பட்டுள்ளது. இங்கு தங்கும் சுற்றுலா பயணிகள் சின்ன கல்லாறு, நீர் வீழ்ச்சி, செக்கல்முடி, சோலையார் அணை, பு நல்ல முதி பூங்சோலை ஆகிய இடங்களுக்கு விரைவாக செல்ல முடியும்.மேலும் இந்த பகுதியில் இருந்து அறியவகை பறவைகள், மயில், இருவாச்சி பறவை, யானைகள், காட்டெறுமை, காடமான் ஆகியவற்றை விடுதியில் இருந்து கண்டு ரசிக்க முடியும். விடுதிக்கான முன்பதிவு ஆன்லை மூலம் செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

    • தங்கும் விடுதி கட்டுமான தொடக்க விழா இன்று நடந்தது.
    • முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம்,கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

    மதுரை

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு சொந்தமான எல்லீஸ் நகர் பகுதியில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    தங்கும் விடுதி கட்டுமான தொடக்க விழா இன்று நடந்தது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம்,கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

    மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரஞ்சித்சிங் காலோன், மேயர் இந்திராணி, வெங்கடேசன் எம்.பி., கோ.தளபதி எம்.எல்.ஏ.,கோவில் செயல் அலுவலர் செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அழகர் கோவில் கள்ளழகர் கோவிலில் ரூ.12.90 லட்சம் மதிப்பீட்டில் காதுகுத்து மண்டபம், விருந்து மண்டபம், முடிகாணிக்கை மண்டபம் ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

    அந்த பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதில் அ.வல்லா ளப்பட்டி பேரூராட்சி தலைவர் திருகுமரன், மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டியன், வலையப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தீபா தங்கம், ஒன்றிய கவுன்சிலர் மலைசாமி, கிளை செயலாளர் முத்து, மதுரை மண்டல உதவி கோட்ட பொறியாளர் தனிக்கொடி, துணை ஆணையர் திருப்பூர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
    • போலீசார், ஆயுதப்படை மைதானத்தில் கடந்த சில நாட்களாக ஒத்திகையில் ஈடுபட்டு உள்ளனர்

    ஊட்டி,

    நாடு முழுவதும் சுதந்திர தின விழா நாளை (திங்கட்கி ழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா, ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

    விழாவில் கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்து கிறார். தொடர்ந்து கொரோனா பரவலை தடுக்க சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள், கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் உள்பட பல் வேறு பிரிவில் சிறந்து விளங்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார்.

    விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் காத்தி பிரியதர்ஷினி, போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் இருந்ததால், சமூக இடைவெளி விட்டு குறைந்த தபர்களுடன் விழா கொண்டாடப்பட்டது.

    இந்த ஆண்டு கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் வழக்க ம்போல்கொண்டாட மாவட்ட நிர் வாக ம் நடவடிக்கை எடுத்து வருகிறது.அதன்படி பழங்குடியினர் கலை நிகழ்ச்சி, பள்ளி கல்லூரி, மாணவர்களின் நடனங்கள் இடம்பெறும் மேலும் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெறுகிறது. இதையொட்டி போலீசார், ஆயுதப்படை மைதானத்தில் கடந்த சில நாட்களாக ஒத்திகையில் ஈடுபட்டு உள்ளனர்.

    நீலகிரி மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதேபோல் மாவட்ட எல்லைகளில் உள்ள 13 சோதனைச்சாவடிகளில் போலீசார் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.மேலும் தங்கும் விடுதிகளில் சந்தேகத்துக்கிடமான நபர் கள் யாராவது தங்கி உள்ளார்களா என்று திடீர் சோதனை யும் நடத்தப்பட்டு வருகிறது.  

    • விழுப்புரம் மாவட்டத்தில் தங்கும் விடுதிகளை முறைப்படி பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • 3 ஆண்டு காலம் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தங்கும் விடுதிகளை நடத்தி வருகின்றனர். இது தவிர குழந்தைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன இவற்றில் சிலர் பதிவு செய்யாமலும், பதிவுகளை புதுப்பிக்காமலும் இயங்கி வருவதாக அவ்வப்போது புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இவ்விடுதிகளை முறைப்ப டுத்தி கண்கா ணித்திட தமிழக அரசால் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் சட்டம் 2014 கொண்டுவரப்பட்டு நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தின்படி விடுதி நிர்வாகிகள் இணையதளம் மூலமாக உரிய சான்றுகளுடன் தாங்கள் நடத்திவரும் விடுதிகளை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் போன்றவற்றை 31.08.2022-க்குள் மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும், இதனை கண்காணித்திட மாவட்ட அளவில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு விடுதிகளின் செயல்பாடுகள் குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    அவ்வாறு ஆய்வின்போது குறைபாடுகளை கண்டறியும் பட்சத்தில் சட்டப்பிரிவு 20-ன் கீழ் விடுதிகள் மற்றும் இல்லங்களை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு சம்மந்தப்பட்ட நிர்வாகிகள் மீது காவல் துறையின் மூலம் வழக்கு தொடர்ந்து அதிகபட்சமாக 3 ஆண்டு காலம் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும். எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் விடுதிகள் மற்றும் இல்லங்கள் நடத்திவரும் அனைத்து விடுதி நிர்வாகிகளும் மேற்கண்ட இணையதளத்தில் தவறாமல் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் பணியினை 31.08.2022க்குள் முடித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். மேலும், விடுதியில் போதிய பாதுகாப்பு வழங்குதல் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் இயங்கி வரும் மாவட்ட சமூகநல அலுவலகத்தை (தொலைபேசி எண்: 04146222288) அணுகவும் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ேமாகன் தெரிவித்து உள்ளார். 

    ×