search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்காளியை ருசி பார்த்த"

    • மளிகை கடையின் கதவை ஒற்றை யானை உடைத்து தக்காளியை தின்று ருசித்து உள்ளது.
    • யானை தக்காளியை மட்டுமே ருசித்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறி ப்பாக யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    சமீபகாலமாக யானைகள் உணவு, தண்ணீ ரை தேடி ஊருக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது. ஊருக்குள் புகும் யானைகள் விளைநிலங்களை சேத ப்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் சத்திய மங்கலம் அடுத்த ஆசனூர் வனப்பகுதியில் ஒங்கல் வாடி, அரேபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒற்றை யானை ஒன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து மக்களை பீதி அடைய செய்து வருகிறது.

    ஊருக்குள் புகுந்து கட்டிடங்களை சேதப்படுத்தி யும், விளை நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தியும் வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் ஒரு வித அச்சத்து டனேயே இருந்து வந்தனர்.

    இந்நிலையில் ஆசனூர் போலீஸ் நிலையம் அருகே உள்ள தணிகாசலம் என்பவரின் மளிகை கடையின் கதவை ஒற்றை யானை உடைத்து உள்ளே வைத்திருந்த விலை மதிப்பில்லாத தக்காளியை தின்று ருசித்து உள்ளது.

    கடையில் பல பொருட்கள் இருந்தும் யானை தக்காளியை மட்டுமே ருசித்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. தற்போது தக்காளியின் விலை விண்ணை தொடும் அளவில் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    வனத்துறையினர் மீண்டும் ஒற்றை யானை ஊருக்குள் வராதவாறு தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×