search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தகாதசெயல்"

    • காரைக்கால் பஸ் நிலையத்தில் வாலிபர் ஒருவர் தகாத செயல்களில் ஈடுபட்டு வருவகாகவும், அவரை கண்காணித்து கைது செய்யும்படியும் சிலர் ரோந்துபோலீசாரிடம் கேட்டுக்கொண்டனர்.
    • போலீசார் விசாரித்தபோது ,அந்த குறிப்பிட்ட வாலிபர் பக்கிரிசாமி(வயது40) என்பதும் கீழகாசாகுடி பகுதியைச்சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகர போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார், காரைக்கால் பஸ் நிலையத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிலர், வாலிபர் ஒருவர் தகாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவரை கண்காணித்து கைது செய்யும்படி ரோந்து  போலீசாரிடம் கேட்டுக்கொண்டனர். அதன்படி, போலீசார், குறிப்பிட்ட வாலிபரை கண்காணித்தபோது, அவர், பஸ் ஏற மற்றும் இறங்க வரும் பெண்களை பார்த்து கண்ணடிப்பதும், தொடர்ந்து சென்று இடிப்பதுமாக இருந்தார். பலமுறை இந்த தகாத செயலை உறுதி செய்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அவரது பெயர் பக்கிரிசாமி(வயது40) என்பதும் கீழகாசாகுடி பகுதியைச்சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பின்னர், அவரை போலீசார் அங்குள்ள சில சாட்சிகள் முன்னிலையில் கைது செய்தனர்.

    ×