search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "misconduct"

    • அப்பணிக்கு தேவையான தகுதி சான்றிதழ்களை பெற்றவர், மேத்யூ
    • லகுனா பீச் பகுதி தம்பதியினர் முதல் முதலாக புகார் அளித்தனர்

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ளது கோஸ்டா மேஸா (Costa Mesa). இப்பகுதியை சேர்ந்தவர் மேத்யூ ஜாக்ர்ஜெவ்ஸ்கி (Matthew Zakrzewski).

    மேத்யூ, தெற்கு கலிபோர்னியாவில் உள்ள பல இல்லங்களில் பல்வேறு சமயங்கள் குழந்தைகளை பார்த்து கொள்ளும் பொறுப்பில் இருந்து வந்தார். இவ்வேலைக்காக பெற்றோர்கள் தேடும் நபர்களில் முக்கியமானவராக இருந்து வந்தவர் மேத்யூ. அவரது அதிகாரபூர்வ வலைதளத்தில் தன்னை "அசல் குழந்தை பராமரிப்பாளர்" (original babysitter) என விளம்பர படுத்தி கொண்ட மேத்யூ, தன்னை குழந்தைகளுக்கு ஆலோசகராகவும், மூத்த சகோதரனாகவும், விடுமுறை காலங்களில் குழந்தைகளை பார்த்து கொள்பவராகவும் முன்னிலை படுத்தி கொண்டார்.

    அந்த பணிக்கு அந்நாட்டில் தேவைப்படும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

    2019 மே மாதம் அம்மாநில லகுனா பீச் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினர், தங்களது குழந்தையை பார்த்து கொள்ளும் பொறுப்பில் இருந்த மேத்யூ, அக்குழந்தையுடன் தகாத உறவில் ஈடுபட முயற்சித்ததாக குற்றம் சாட்டி புகாரளித்தனர்.

    உடனடியாக விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், மேத்யூ முன்னர் பணி செய்த இடங்களில் உள்ள குழந்தைகளையும் அவர்களின் பெற்றொர்களிடமும் விசாரணையை தீவிரமாக்கிய போது அவர் லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் மற்றொரு 7 வயது சிறுவனிடமும் தெற்கு கலிபோர்னியாவில் பல வீடுகளில் 10க்கும் மேற்பட்ட சிறுவர்களிடமும் இக்குற்றத்தை புரிந்திருப்பதையும் கண்டு பிடித்தனர்.

    மேலும், 2014 ஜனவரி 1லிருந்து 2019 மே 17 வரை மேத்யூ 16க்கும் மேற்பட்ட சிறுவர்களிடம் தகாத உறவில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறுவர்கள் அளித்த சாட்சியங்களின் பேரில் ஆரஞ்ச் கவுன்டி அரசு வழக்கறிஞர் அலுவலகம் பதிவு செய்த வழக்கில் அந்நாட்டு ஜூரி அமைப்பு அவர் குற்றத்தை உறுதி செய்துள்ளது.

    குறைந்தபட்சமாக அவருக்கு 690 வருடங்களுக்கும் மேல் சிறை தண்டனை கிடைக்க இருக்கிறது.

    இவ்வழக்கில் உண்மையை வெளிக்கொண்டு வர உதவிய காவல்துறையையும், சாட்சியம் அளித்த குழந்தைகளையும், தயக்கமின்றி புகாரளித்த பெற்றோர்களையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    • காரைக்கால் பஸ் நிலையத்தில் வாலிபர் ஒருவர் தகாத செயல்களில் ஈடுபட்டு வருவகாகவும், அவரை கண்காணித்து கைது செய்யும்படியும் சிலர் ரோந்துபோலீசாரிடம் கேட்டுக்கொண்டனர்.
    • போலீசார் விசாரித்தபோது ,அந்த குறிப்பிட்ட வாலிபர் பக்கிரிசாமி(வயது40) என்பதும் கீழகாசாகுடி பகுதியைச்சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

    புதுச்சேரி:

    காரைக்கால் நகர போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார், காரைக்கால் பஸ் நிலையத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிலர், வாலிபர் ஒருவர் தகாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவரை கண்காணித்து கைது செய்யும்படி ரோந்து  போலீசாரிடம் கேட்டுக்கொண்டனர். அதன்படி, போலீசார், குறிப்பிட்ட வாலிபரை கண்காணித்தபோது, அவர், பஸ் ஏற மற்றும் இறங்க வரும் பெண்களை பார்த்து கண்ணடிப்பதும், தொடர்ந்து சென்று இடிப்பதுமாக இருந்தார். பலமுறை இந்த தகாத செயலை உறுதி செய்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அவரது பெயர் பக்கிரிசாமி(வயது40) என்பதும் கீழகாசாகுடி பகுதியைச்சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. பின்னர், அவரை போலீசார் அங்குள்ள சில சாட்சிகள் முன்னிலையில் கைது செய்தனர்.

    ×