search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டபுள் டக்கர் ரெயில்"

    • வெளிநாடுகளில் உள்ள ரெயில் சேவைகளை போன்று அழகிய நவீன முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த சேர் கார் பிரிவு ரெயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
    • குறைந்த கட்டணத்தில் சாமானிய மக்களும் டபுள் டக்கர் ரெயிலில் பயணிக்கும் வசதி கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர்:

    சென்னை-பெங்களூரு இடையே டபுள் டக்கர் ஏசி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

    சென்னை சென்ட்ரல், அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, குப்பம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு கண்டோன்மென்ட் பெங்களூர் சிட்டி ஜங்ஷன் ஆகிய இடங்களில் நின்று செல்கிறது.

    வெளிநாடுகளில் உள்ள ரெயில் சேவைகளை போன்று அழகிய நவீன முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த சேர் கார் பிரிவு ரெயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    360 கிலோமீட்டர் தூரத்தை 6 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் டபுள் டக்கர் ரெயில் சென்றடைகிறது. பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என மாறிய டபுள் டக்கரில் பொது பிரிவு என்று அழைக்கப்படும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்க வேண்டும்.

    ஏசி இல்லாத சேர் கார் பெட்டிகளையும் இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி ரெயில்வே நிர்வாகம் டபுள் டக்கர் ரெயிலில் புதிய வசதிகளை ஏற்படுத்தி உள்ளது.

    அதன்படி டபுள் டக்கரில் ஏசி வசதி இல்லாத 5 சாதரண பெட்டிகள் மற்றும் முன்பதிவு இல்லாத ஒரு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இது தவிர சரக்குகளை கையாள ஒரு பெட்டி என மொத்தம் 15 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வசதியுடன் இன்று முதல் சென்னை பெங்களூர் டபுள் டக்கர் ரெயில் இயக்க படுகிறது.

    குறைந்த கட்டணத்தில் சாமானிய மக்களும் டபுள் டக்கர் ரெயிலில் பயணிக்கும் வசதி கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ரெயிலை என்ஜின் டிரைவர் இயக்க முற்பட்டபோது சிக்னல் கோளாறு ஏற்பட்டது.
    • பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    ஜோலார்பேட்டை:

    சென்னையிலிருந்து-பெங்களூரு சென்று கொண்டிருந்த டபுள் டக்கர் ரெயில் வாணியம்பாடி ரெயில் நிலையத்திற்கு 10. 32 க்கு வந்தது.

    பின்னர் ரெயிலை என்ஜின் டிரைவர் இயக்க முற்பட்டபோது சிக்னல் கோளாறு ஏற்பட்டது. சிக்னல் கிடைக்காததால் ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.

    பின்னர் இதை சரி செய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    இதையடுத்து 20 நிமிடங்கள் தாமதமாக 10.52-க்கு பெங்களூருக்கு டபுள் டக்கர் ரெயில் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    • இரண்டு சக்கரங்கள் கீழே இறங்கியதால் பயங்கர சத்தம் கேட்டது. இதனை தொடர்ந்து உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது.
    • பெங்களூரு ரெயில் தடம்புரண்டுள்ள நிலையில், அந்த வழியாகச் செல்லும் ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    ஜோலார்பேட்டை:

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 7.25 மணிக்கு பெங்களூருக்கு டபுள் டக்கர் ரெயில் புறப்பட்டு சென்றது.

    ஆந்திர மாநிலம் குப்பம் ரெயில் நிலையத்தை கடந்து சென்றது. காலை 11.21 மணிக்கு பங்காருபேட்டை அருகே உள்ள சி.சி. நத்தம் என்ற இடத்தில் சென்ற போது ரெயிலின் கடைசி பெட்டியான சி1 பெட்டி தண்டவாளத்தில் இருந்து புரண்டது. இரண்டு சக்கரங்கள் கீழே இறங்கியதால் பயங்கர சத்தம் கேட்டது. இதனை தொடர்ந்து உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது.

    இதுகுறித்து குப்பம் மற்றும் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதனால் ரெயிலில் இருந்த பயணிகள் அவதியடைந்தனர்.

    பெங்களூரு ரெயில் தடம்புரண்டுள்ள நிலையில், அந்த வழியாகச் செல்லும் ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    ×