search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் பெட்டி"

    • வெளிநாடுகளில் உள்ள ரெயில் சேவைகளை போன்று அழகிய நவீன முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த சேர் கார் பிரிவு ரெயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
    • குறைந்த கட்டணத்தில் சாமானிய மக்களும் டபுள் டக்கர் ரெயிலில் பயணிக்கும் வசதி கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர்:

    சென்னை-பெங்களூரு இடையே டபுள் டக்கர் ஏசி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

    சென்னை சென்ட்ரல், அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, குப்பம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு கண்டோன்மென்ட் பெங்களூர் சிட்டி ஜங்ஷன் ஆகிய இடங்களில் நின்று செல்கிறது.

    வெளிநாடுகளில் உள்ள ரெயில் சேவைகளை போன்று அழகிய நவீன முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த சேர் கார் பிரிவு ரெயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    360 கிலோமீட்டர் தூரத்தை 6 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் டபுள் டக்கர் ரெயில் சென்றடைகிறது. பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என மாறிய டபுள் டக்கரில் பொது பிரிவு என்று அழைக்கப்படும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்க வேண்டும்.

    ஏசி இல்லாத சேர் கார் பெட்டிகளையும் இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி ரெயில்வே நிர்வாகம் டபுள் டக்கர் ரெயிலில் புதிய வசதிகளை ஏற்படுத்தி உள்ளது.

    அதன்படி டபுள் டக்கரில் ஏசி வசதி இல்லாத 5 சாதரண பெட்டிகள் மற்றும் முன்பதிவு இல்லாத ஒரு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இது தவிர சரக்குகளை கையாள ஒரு பெட்டி என மொத்தம் 15 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வசதியுடன் இன்று முதல் சென்னை பெங்களூர் டபுள் டக்கர் ரெயில் இயக்க படுகிறது.

    குறைந்த கட்டணத்தில் சாமானிய மக்களும் டபுள் டக்கர் ரெயிலில் பயணிக்கும் வசதி கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • தக்கல் டிக்கெட்டுகளை எடுப்பதற்காக ரெயில் நிலையங்களில் பல மணி நேரம் பலரும் காத்து இருந்து வருகிறார்கள்.
    • அனந்தபுரி எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மே மாதத்தில் பெரும்பாலான நாட்களுக்கான டிக்கெட் நிரம்பிவிட்டன.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் முக்கியமான ரெயில்களில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் ஒன்றாகும்.

    கன்னியாகுமரியிலிருந்து 740 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சென்னைக்கு இந்த ரெயில் 12.30 மணி நேரத்தில் சென்றடையும். தினமும் கன்னியாகுமரியில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலையில் 6.30 மணிக்கு சென்னை எக்மோர் ரெயில் நிலையத்தை சென்றடையும்.

    இதேபோல் சென்னை எக்மோர் ரெயில் நிலையத்திலிருந்து மாலை 5.20 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் மறுநாள் காலையில் 5.35 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையத்தை வந்து அடையும். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள், ஏசி பெட்டிகள், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் இந்த ரெயிலில் இணைக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து கன்னியாகுமரி வருபவர்களும் கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்பவர்களும் பெரும்பாலும் அதிகமானோர் இந்த ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள். எனவே முன்பதிவு தொடங்கிய உடனே இந்த ரெயிலில் டிக்கெட்டுகள் நிரம்பிவிடும். தக்கல் டிக்கெட்டை பொறுத்தமட்டில் ரெயில் பயணத்தின் முந்தைய நாள் முன்பதிவு செய்யப்படும். தக்கல் டிக்கெட்டுகளை எடுப்பதற்காக ரெயில் நிலையங்களில் பல மணி நேரம் பலரும் காத்து இருந்து வருகிறார்கள். இதில் பெரும்பாலானோருக்கு டிக்கெட் கிடைக்காத நிலை உள்ளது.

    ஆன்லைன் மூலமாகவும் தக்கல் டிக்கெட் எடுப்பதற்கு பலரும் முயற்சி மேற்கொண்டும் ஒரு சிலருக்கு மட்டுமே டிக்கெட் கிடைக்கிறது. டிக்கெட் கிடைக்காதவர்கள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்து வருகிறார்கள். தினமும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    பண்டிகை காலங்கள் கோடை விடுமுறை தினங்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கால் வைக்க முடியாத அளவிற்கு கூட்டம் நிரம்பி வழியும். கோடை விடுமுறையான மே மாதத்தில் முன்பதிவு செய்வதற்கு தற்பொழுது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பலரும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் முன்பதிவு செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.

    அனைத்து ரெயில்களிலும் மே மாதத்திற்கான முன்பதிவு தற்பொழுது நடைபெற்று வருகிறது. அனைத்து ரெயில்களிலும் டிக்கெட் எடுப்பதற்கு பொதுமக்கள் போட்டி போட்டு வருகிறார்கள். அனந்தபுரி எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மே மாதத்தில் பெரும்பாலான நாட்களுக்கான டிக்கெட் நிரம்பிவிட்டன.

    கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மே 2-ந்தேதி வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் நிலை உள்ளது. ஆனால் இன்றைய நிலவரப்படி மே 22-ந்தேதி வரை முன்பதிவு செய்ய ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு இருக்க வேண்டும்.

    மே 2-ந்தேதிக்கு பிறகு முன்பதிவு செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் ரெயில் பயணிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். ரெயில்வே நிர்வாகமும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மே 2-ந்தேதிக்கு பிறகு ஏன் முன்பதிவு செய்ய முடியவில்லை என்ற விவரத்தை முறையாக தெரிவிக்கவில்லை.

    கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை மாற்றப்பட இருப்பதால் முன்பதிவு வசதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது இருக்கும் ஸ்லீப்பர் பெட்டிகளை குறைத்து ஏசி பெட்டிகளை அதிகரிக்கவும் தென்னக ரெயில்வே முயற்சி மேற்கொண்டு வருவதாலும் முன்பதிவு செய்யப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

    பயணிகள் எந்த ஒரு குழப்பமும் இன்றி இருக்கும் வகையில் தென்னக ரெயில்வே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மே 2-ந்தேதிக்கு பிறகு ஏன் முன்பதிவு செய்யப்பட வில்லை என்ற முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் ரெயில் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரெயில் பெட்டி ஏற்றிச் சென்ற லாரி ஒன்று விபத்துக்குள்ளானது.
    • விபத்தால், யாருக்கும் காயம் இல்லை என தகவல்.

    பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள உல்டா புல் என்ற இடத்தில் ரெயில் பெட்டி ஏற்றிச் சென்ற லாரி ஒன்று விபத்துக்குள்ளானது.

    பீகார் மாநிலம் பாகல்பூரில் இன்று காலை சாலை வழியாக ரெயில் பெட்டியை ஏற்றிச் சென்ற லாரியில் திடீரென பிரேக் செயலிழந்ததால் விபத்துக்குள்ளானது.

    இதில் லாரி இரண்டாக உடைந்து, ரெயில் பெட்டிகள் சாலையில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தால், யாருக்கும் காயம் இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பீகாரில் சாலை வழியாக கொண்டு சென்ற விமானம் மேம்பாலம் அடியில் சிக்கிய சம்பவத்தை தொடர்ந்து, சாலையில் ரெயில் பெட்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பெங்களூருக்கு செல்வதாக அதிகாரிகள் தகவல்
    • உறுதியான பெயர் பலகை வைக்க வலியுறுத்தல்

    அரக்கோணம்:

    சென்னை - பெங்களூர் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டது. இந்த ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு காலை 8. 45-க்கு வந்தது.

    இந்த ரெயிலின் கடைசி பெட்டியில் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. அதில் கோவை எக்ஸ்பிரஸ் என்றும், மற்ற பெட்டிகளில் பெங்களூர்- சென்னை-கோவை பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் என்றும் இருந்ததால் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.

    அந்த ரெயில் கோவைக்கு செல்கின்றதா அல்லது பெங்களூருக்கு செல்கின்றதா என தெரியாமல் குழப்பத்துக்கு ஆளாகினர். பின்னர் அருகே இருந்த அதிகாரிகளியிடம் கேட்டபோது:-

    அந்த ரெயில் பெங்களூருக்கு செல்வது தெரிய வந்தது. இதனை அடுத்து பெங்களூர் செல்லும் பயணிகள் அந்த ரெயிலில் ஏறினர்.

    இதுபோன்று ரெயில் பெட்டிகளில் குழப்பத்தை ஏற்படுத்தும் பலகைகள் வைப்பதால் பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாவர்.

    எனவே சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பயணிகளின் குழப்பத்தை நீக்கும் வகையில் அவர்களுக்கு இந்த ரெயில் எங்கு செல்கின்றது என்ற உறுதியான பெயர் பலகையை வைத்து ரெயிலை இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரெயில் பெட்டிகள் எரிந்து கொண்டிருக்கும்போது பயணிகள் ரெயில் கடந்து சென்றது.
    • உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    மதுரை

    மதுரை ெரயில் நிலையம் அருகே நின்றிருந்த ரெயில் பெட்டிகளில் சிலிண்டர்கள் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சுற்றுலா வந்த வடமாநிலத்தவர்கள் 9 பேர் பரிதாபமாக உடல் கருகி பலியாகினர்.

    ரெயில் நிலையத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போடி லைன் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் இன்று அதிகாலை பயங்கர சத்தத்து டன் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.

    இதில் ரெயில் பெட்டி முழுவதும் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தீ விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரெயில் பெட்டிகள் முழுவதுமாக எரிந்தன.

    அப்போது அருகில் இருந்த தண்டவாளத்தில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சென்ற பயணிகள் ரெயில் கடந்து சென்றது. அப்போது அதிலிருந்த பயணிகள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

    தீ விபத்து நடந்த தண்ட வாளம் அருகே பயணிகள் ரெயில் கடந்து சென்றபோது தீ அந்த ரெயிலை தொட்டுவிடும் வகையில் கொழுந்துவிட்டு எரிந்தது.

    இதுபோன்ற பெரும் விபத்து நடக்கும்போது அந்த பகுதியில் பாதுகாப்பை கருதி ரெயில் போக்கு வரத்தை நிறுத்துவது வழக்கம். ஆனால் இன்று காலை தீ பற்றி எரிந்து கொண்டிருந்த ரெயில் பெட்டி அருகே உள்ள தண்டவாளத்தில் மற்றொரு ரெயில் செல்ல அனுமதி அளித்தது பயணிகளின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கி உள்ளது.

    இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் உரிய விசார ணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • தீயணைப்புத் துறையினர் 2 வாகனங்களில் வந்து பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
    • டீசல் டிரம்களில் தீப்பிடித்து இருந்தால் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கும்.

    திருப்பதி:

    ஆந்திராவில் ரெயில்வே என்ஜினியர்கள் பயன்படுத்தும் சிறப்பு ரெயில் ஒன்று பெட்டா ரெயில் நிலையத்துக்கு வந்தது.

    7-வது பிளாட்பாரத்தின் முடிவில் லூப் லைனில் நிறுத்தப்பட்டு இருந்தது. நேற்று இரவு 7.30 மணி அளவில் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் திடீரென புகை வந்தது.

    ரெயில் பெட்டியில் இருந்து புகை வருவதை கண்டு ரெயில்வே ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஏலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதற்குள் ரெயில் பெட்டி மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. தீயணைப்புத் துறையினர் 2 வாகனங்களில் வந்து பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

    தீ விபத்து ஏற்பட்ட பெட்டியில் டீசல் நிரப்பப்பட்ட 10 டிரம்கள், பேட்டரிகள், மின் ஒயர்கள், தண்டவாள பராமரிப்பு பணிக்கான பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன.

    தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் டீசல் டிரம்களில் தீப்பிடித்து எரியவில்லை. டீசல் டிரம்களில் தீப்பிடித்து இருந்தால் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கும்.

    அதிக வெப்பம் காரணமாக ரெயில் பெட்டியில் பொருத்தப்பட்டு இருந்த ஒயர்கள் கருகி ஒன்றுடன் ஒன்று உரசி மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்ததாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ரெயிலானது செங்கோட்டைக்கு மாலை 3 மணிக்கு வந்தது.
    • ரெயில் புனலூர்-செங்கோட்டை இடையே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை குகைகள் பாதை வழியாக கடந்து வரும்.

    நெல்லை:

    கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை, தென்காசி வழியாக சென்னை எழும்பூருக்கு தினசரி ரெயில் (வண்டி எண் 16102) இயக்கப்படுகிறது. வழக்கம் போல் இந்த ரெயில் கொல்லத்தில் இருந்து நேற்று மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டது. ரெயிலானது செங்கோட்டைக்கு மாலை 3 மணிக்கு வந்தது. ரெயில் நிலையத்துக்குள் நுழைவதற்கு முன்பாக தண்டவாளத்தின் இருபுறமும் ரெயில்வே ஊழியர்கள் அமர்ந்து வண்டியின் சக்கரங்கள் சரியாக ஓடுகிறதா? என்பதை கண்காணித்தனர்.

    அப்போது அந்த ரெயிலின் எஸ்-3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் சக்கரங்களுக்கு மேலே பொருத்தப்பட்டிருந்த அடிச்சட்டத்தில் (பெட்டியை தாங்கும் பகுதி) விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து அவர்கள் ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த ரெயில் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது. அதிகாரிகள் அங்கு வந்து அடிச்சட்டத்தில் விரிசல் இருப்பதை பார்வையிட்டனர்.

    பின்னர் அந்த ஒரு பெட்டி மட்டும் செங்கோட்டையில் கழற்றப்பட்டது. எஸ்-3 பெட்டியில் பயணம் செய்த பயணிகள் மற்ற பெட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு மதுரை ரெயில் நிலையத்தில் வைத்து மாற்றுப்பெட்டி இணைத்து அதில் பயணம் செய்ய ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து சுமார் 1½ மணி நேரம் தாமதமாக அந்த ரெயில் சென்னைக்கு புறப்பட்டது.

    இந்த ரெயில் புனலூர்-செங்கோட்டை இடையே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை குகைகள் பாதை வழியாக கடந்து வரும். அப்போது இந்த ரெயிலின் அடிச்சட்டத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம். எனினும் அதிர்ஷ்டவசமாக ரெயில்வே ஊழியர்கள் கண்காணித்து கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் ரெயில் கோர விபத்து அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தற்போது செங்கோட்டையில் நடந்த இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரெயில் பெட்டி ஓட்டலில் 40 பேர் ஒரே நேரத்தில் சாப்பிட வசதி செய்யப்படுகிறது.
    • ரெயில் பெட்டியின் உள்பகுதி பயணிகள் மகிழ்ச்சியாக உணவு அருந்தும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.

    சென்னை:

    பயணிகள் பயணத்தை தொடங்குவதற்கு முன்பு ரெயில் பெட்டியிலேயே உணவு சாப்பிடக்கூடிய வசதியை தெற்கு ரெயில்வே ஏற்படுத்துகிறது. ரெயில் பெட்டியை ஓட்டல் போல வடிவமைத்து அங்கு அமர்ந்து உணவு சாப்பிடக்கூடிய சூழலை உருவாக்குகிறது.

    சென்னை சென்ட்ரல், பெரம்பூர், பொத்தேரி, காட்டாங்கொளத்தூர் ஆகிய ரெயில் நிலையங்களில் முதல் கட்டமாக இந்த ரெயில் பெட்டி ஓட்டல் அமைகிறது. பயன்படுத்தப்படாத ரெயில் பெட்டிகளை மறுசீரமைத்து ரெயில் நிலையங்களை ஒட்டிய பகுதியில் நிறுவி ரெயிலில் சாப்பிடக்கூடிய உணர்வை ஏற்படுத்தும் வகையில் இது அமைகிறது.

    ரெயில் பெட்டி ஓட்டல் நடத்தும் உரிமம் தனியாருக்கு கொடுக்கப்படுகிறது. ரெயில் பெட்டி மற்றும் அதனை வைக்கக்கூடிய இடம் ஆகியவற்றை வழங்குகிறது. அதனை அவர்கள் ஓட்டல் போன்று மாற்றி அமைக்க வேண்டும்.

    பயணிகள் அமர்ந்து சாப்பிடக்கூடிய வகையில் மேஜை, இருக்கைகள், கைகழுவும் இடம், உணவு தயாரிக்கும் இடம் போன்றவை அந்த பெட்டியில் இருக்கும். ஓடும் ரெயிலில் சாப்பிடுகிற சூழலை தனியார் நிறுவனம் நிறுவுகிறது. இந்த ஓட்டல் 24 மணி நேரமும் செயல்படும். ரெயில் பெட்டி ஓட்டலில் 40 பேர் ஒரே நேரத்தில் சாப்பிட வசதி செய்யப்படுகிறது. ரெயில் பெட்டியின் உள்பகுதி பயணிகள் மகிழ்ச்சியாக உணவு அருந்தும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் தினமும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு சாப்பிடுவதற்கு போதுமான ஓட்டல்கள் இல்லை. அதனால் அங்கு ரெயில் பெட்டி ஓட்டல் அமையும் பட்சத்தில் உதவியாக இருக்கும் என்றும், அதேபோல காட்டாங்கொளத்தூரில் அமைகின்ற ஓட்டல் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு அதிக பயன் உள்ளதாக இருக்கும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கான ஆன்லைன் டெண்டர் விரைவில் விடுவதற்கு சென்னை ரெயில்வே கோட்டம் தயாராக உள்ளது.

    • வட மாநில ரெயில் நிலையங்களில் பயன்பாட்டில் இல்லாத ரெயில் பெட்டிகளை நவீனமயமாக ஓட்டல்களாக மாற்றி வருகின்றனர்.
    • குளிர்சாதன வசதியுடன் கூடிய இந்த உணவகம் சைவ, அசைவ உணவு பிரியர்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறது.

    திருப்பதி:

    வட மாநில ரெயில் நிலையங்களில் பயன்பாட்டில் இல்லாத ரெயில் பெட்டிகளை நவீனமயமாக ஓட்டல்களாக மாற்றி வருகின்றனர்.

    ஆந்திராவில் குண்டூர் ரெயில் நிலையத்தில் பயன்பாட்டில் இல்லாத பழைய ரெயில் பெட்டி ஒன்று உணவகமாக மாற்றப்பட்டுள்ளது.

    அதிநவீன அனைத்து வசதிகளுடன் கூடிய உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் இந்த ரெயில் பெட்டி உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவகிறது.

    குளிர்சாதன வசதியுடன் கூடிய இந்த உணவகம் சைவ, அசைவ உணவு பிரியர்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறது. பல உணவு வகைகளுடன் இந்த உணவகம் உள்ளூர் கட்டணத்தில் 24 மணி நேரமும் சுகாதாரமான உணவை வழங்குகிறது‌.

    இந்த ரெயில் பெட்டி உணவகத்தை கோட்ட ரெயில்வே மேலாளர் (தென் மத்திய ரெயில்வே, குண்டூர்) ஆர்.மோகன்ராஜா திறந்து வைத்தார்.

    "பழைய மற்றும் பயன்படுத்த முடியாத பெட்டிகளைப் பயன்படுத்தி பயணிகளுக்கு பிரீமியம் அனுபவத்தை வழங்குவதற்காக குண்டூர் ரெயில்வே கோட்டத்தால் இந்த ஓட்டல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கோச் உணவகமாக மாற்றப்பட்டு ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இதில் உள்ளூர் கட்டணத்தில் அனைத்து வகையான உணவுகளும் 24 மணி நேரமும் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வருங்காலங்களில் இந்த புதுவித முயற்சி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மதுரை கோட்டத்தில் 4 இடங்களில் ரெயில் பெட்டி பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • இரவு நேரங்களில் மின்சார விளக்கு வசதியுடன் இந்த சோதனை நடத்தப்படும்.

    மதுரை

    மதுரையின் பெரும்பாலான பகுதிகளில் கார்களின் அடிப்பகுதியை தண்ணீரால் கழுவுவதற்காக, வாஷிங் நிலையங்கள் உண்டு. அங்கு கால்வாய் போன்ற அமைப்பு இருக்கும். அதற்குள் இறங்கி காரின் அடிப்பகுதியை தண்ணீர் அடித்து கழுவுவார்கள்.

    இதே போல மதுரை ரெயில் நிலையத்தில் 24 பெட்டிகளையும் சுத்தம் செய்யும் வகையில் ரெயில் வாஷிங் நிலையம் உள்ளது. இங்கு நீளமான கால்வாய் (பிட் லைன்) உள்ளது. அதற்குள் ஊழியர்கள் இறங்கி ரெயில் சக்கரம் மற்றும் அடிப்பாகத்தில் உள்ள முக்கிய கருவிகளை சோதனை செய்வார்கள்.

    பிட் லைனின் இருபுறமும் 'கேட் வாக்' நடைமேடைகள் உண்டு. அங்கிருந்து ரெயிலின் வெளிப்புறப் பகுதி நீரால் கழுவி சுத்தம் செய்யப்படுகிறது. அதேபோல உட்புறமும் நீர்வேக அழுத்த கருவிகள் மூலம் கழுவப்படுகிறது.

    இயற்கை கழிப்பறைகள், ரெயில் கதவுகள், விளக்குகள், காற்றாடிகள், அலைபேசியை சக்தியூட்டும் இணைப்புகள், குளிர்சாதன கருவிகள் ஆகியவை சரியாக இயங்குகிறதா? என்பதையும் ஊழியர்கள் உறுதி செய்கின்றனர்.

    ரெயில் பெட்டிகளில் பயணிகள் பயன்பாட்டுக்கு தேவையான தண்ணீர் ஏற்றப்படுகிறது. ரெயில்கள் உள்ளே வரும்போதும் வெளியே செல்லும் போதும் ரெயில் ஓடும் நிலையில் குறைபாடு இருக்கிறதா? என்று பரிசோதித்து பார்க்கப்படுகிறது. இரவு நேரங்களில் மின்சார விளக்கு வசதியுடன் இந்த சோதனை நடத்தப்படும்.

    மற்ற ஊர்களில் இருந்து ரெயில், நடைமேடைக்கு வந்தவுடன் இணைப்பு பெட்டிகளின் வெப்பநிலை, இன்ப்ரா-ரெட் தெர்மாமீட்டர் மூலம் சோதனை செய்யப்படுகிறது. இந்தப் பணிகள் 24 மணி நேரமும் தொடர்ந்து செய்யப்படுகிறது. இது தவிர ரெயில் பெட்டிகளுக்கு உரிய காலமுறை சோதனைகளும் உரிய நேரங்களில் நடத்தப்படுகிறது.

    மதுரை கோட்டத்தில் மதுரை, நெல்லை, தூத்துக்குடி, ராமேசுவரம் ஆகிய நிலையங்களில் ரெயில் பெட்டி பராமரிப்பு மையம் உள்ளது. இங்கு 961 ரெயில் பெட்டிகள் பராமரிக்கும் வசதிகள் உள்ளன. தற்போது சராசரியாக 491 ரெயில் பெட்டிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    ×