search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குண்டூர் ரெயில் நிலையத்தில் பயன்படாத ரெயில் பெட்டியில் ஏ.சி.வசதியுடன் நவீன உணவகம்
    X

    ரெயில் பெட்டியில் அமைக்கப்பட்டுள்ள நவீன உணவகம்


    குண்டூர் ரெயில் நிலையத்தில் பயன்படாத ரெயில் பெட்டியில் ஏ.சி.வசதியுடன் நவீன உணவகம்

    • வட மாநில ரெயில் நிலையங்களில் பயன்பாட்டில் இல்லாத ரெயில் பெட்டிகளை நவீனமயமாக ஓட்டல்களாக மாற்றி வருகின்றனர்.
    • குளிர்சாதன வசதியுடன் கூடிய இந்த உணவகம் சைவ, அசைவ உணவு பிரியர்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறது.

    திருப்பதி:

    வட மாநில ரெயில் நிலையங்களில் பயன்பாட்டில் இல்லாத ரெயில் பெட்டிகளை நவீனமயமாக ஓட்டல்களாக மாற்றி வருகின்றனர்.

    ஆந்திராவில் குண்டூர் ரெயில் நிலையத்தில் பயன்பாட்டில் இல்லாத பழைய ரெயில் பெட்டி ஒன்று உணவகமாக மாற்றப்பட்டுள்ளது.

    அதிநவீன அனைத்து வசதிகளுடன் கூடிய உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் இந்த ரெயில் பெட்டி உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவகிறது.

    குளிர்சாதன வசதியுடன் கூடிய இந்த உணவகம் சைவ, அசைவ உணவு பிரியர்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறது. பல உணவு வகைகளுடன் இந்த உணவகம் உள்ளூர் கட்டணத்தில் 24 மணி நேரமும் சுகாதாரமான உணவை வழங்குகிறது‌.

    இந்த ரெயில் பெட்டி உணவகத்தை கோட்ட ரெயில்வே மேலாளர் (தென் மத்திய ரெயில்வே, குண்டூர்) ஆர்.மோகன்ராஜா திறந்து வைத்தார்.

    "பழைய மற்றும் பயன்படுத்த முடியாத பெட்டிகளைப் பயன்படுத்தி பயணிகளுக்கு பிரீமியம் அனுபவத்தை வழங்குவதற்காக குண்டூர் ரெயில்வே கோட்டத்தால் இந்த ஓட்டல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கோச் உணவகமாக மாற்றப்பட்டு ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இதில் உள்ளூர் கட்டணத்தில் அனைத்து வகையான உணவுகளும் 24 மணி நேரமும் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வருங்காலங்களில் இந்த புதுவித முயற்சி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×