search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஞாயிற்றுக்கிழமை"

    • ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு வரை விசைப்படகு, இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும்.
    • தடை காலம் முடிந்த பின்னர் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் மீன்வளத்தைப் பெருக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு வரை ஆழ்கடலில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப் படும். அதன்படி இந்த ஆண்டுக்கான 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கி கடந்த 14-ம் தேதி நள்ளிரவுடன் முடிவடைந்தது. இந்த தடை காலத்தில் குறிப்பிட்ட இனவகை மீன்கள் கிடைக்காமல் இருந்தது.

    மீன்களின் விலையும் உச்சத்தில் காணப்பட்டது. இந்த நிலையில் தடைக்காலம் முடிந்து ஏற்கனவே மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதனால் தமிழகத்தில் வழக்கமாக கிடைக்கும் மீன் வகைகள் தற்போது மார்க்கெட்டில் கிடைத்து வருகிறது.தடை காலம் முடிந்த பின்னர் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    அதன்படி தஞ்சை மீன் மார்க்கெட்டுக்கு இன்று ஏராளமான லாரிகளில் பல வகையான மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. பொதுமக்கள் காலையிலிருந்து மார்க்கெட்டுக்கு குவிய தொடங்கினர். தங்களுக்கு பிடித்தமான மீன்களை வாங்கி சென்றனர். இதனால் தஞ்சை மீன் மார்க்கெட்டில் இன்று கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. இதை போல் இறைச்சி கடைகளிலும் வழக்கம்போல் கூட்டம் காணப்பட்டது.

    • சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர்.
    • சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    கன்னியாகுமரி :

    பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் மக்கள் குடும் பத்துடன் கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாக உள்ளனர்.கன்னியாகுமரியில் முக்க டலும் சங்கமிக்கும் திரி வேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் போட்டனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    கடல் நடுவில் அமைந் துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிடவும் சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்த னர்.

    மேலும் கன்னியாகுமரி யில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூ ராட்சி பொழுது போக்கு பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டி உள்ளது. இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடு பட்டு வந்தனர்.

    • சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.
    • படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    கன்னியாகுமரி:

    உலகப் புகழ் பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    மேலும் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட நீண்ட வரிசையில் காத்திருந்தனர்
    • போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கோடை விடுமுறை சீசன் முடிந்த பிறகும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் ஏராள மானோர் படை எடுத்த வண்ணமாக உள்ளனர்.

    அந்த அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலை யில் சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தனர்.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்தைபார்வையிட இன்று காலை 6மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.காலை 7.45 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கி யதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அதில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.

    இன்று காலை 11 மணி வரை 3 ஆயிரம் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை படகில்சென்று பார்வையிட்டு இருந்தனர். திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள்படகில் பயணம் செய்யும் போது செல்போன் மூலம் திருவள்ளுவர் சிலையை படம் எடுத்து சென்றனர்.

    கன்னியா குமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சி யகம், மீன் காட்சி சாலை, வட்டக்கோட்டை பீச், கோவளம் பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கட லோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்கா ணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • காலை 7 முதல் மாலை 7 மணி வரையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும்
    • 20 ஆயிரம் நபா்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூரில் :

    33 ஆவது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதுகுறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையாளா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பூா் மாநகராட்சியில் 12 முதல் 14 வயது வரை 31,728 சிறாா்கள், 15 முதல் 18 வயது வரை 42,300 இளம் சிறாா்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவா்கள் 8,67,420 என மொத்தம் 9,41,448 போ் உள்ளனா். இதில், 8.13 லட்சம் நபா்களுக்கு முதல் தவணையும், 6.22 லட்சம் நபா்களுக்கு இரண்டாவது தவணையும், 43,764 நபா்களுக்கு பூஸ்டா் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 6.22 லட்சம் நபா்களுக்கு முதல் தவணையும், 1.91 லட்சம் நபா்களுக்கு இரண்டாவது தவணையும் செலுத்த வேண்டியுள்ளது.

    இந்த நிலையில், திருப்பூா் மாநகரில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் மாலை 7 மணி வரையில் நடைபெறும் 33 ஆவது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மூலமாக 20 ஆயிரம் நபா்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், அரசு மருத்துவமனைகள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என மொத்தம் 190 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த முகாமில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் அல்லது 26 வாரங்கள் நிறைவடைந்த சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டா் தடுப்பூசியும் செலுத்தப்படவுள்ளது.

    இந்தப் பணியில் சுகாதாரத் துறை மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த பணியாளா்கள், தன்னாா்வலா்கள் என மொத்தம் 1,140 போ் பணியில் ஈடுபடுத்தப்பட்டவுள்ளனா். ஆகவே, திருப்பூா் மாநகரில் தடுப்பூசி செலுத்தாத நபா்கள் இந்த முகாமினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல கூட்டம் அலைமோதியது
    • போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.

    கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன் பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமானோர் குவிந்திருந்தனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை மட்டும் பார்வையிட்டு வந்தனர். திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்று வருவதால் அங்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்யும் போதும் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் கடற்கரையில் இருந்த படியும் செல்போன் மூலம் திருவள்ளுவர் சிலையை படம் எடுத்து சென்றனர்.

    மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, வட்டக் கோட்டை பீச், கோவளம் பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.

    ×