search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜிஎஸ்டி அலுவலகம்"

    • கடை ஆரம்பித்த நாளில் இருந்து ஜி.எஸ்.டி. வரி கட்டவில்லை என கூறப்படுகிறது.
    • கடந்த 3 நாட்களாக விசாரணைக்கு சென்றவர்களின் கதி என்ன ஆனது? என்பது மர்மமாக உள்ளது.

    மதுரை:

    மதுரை கீழமாசி வீதியில் பெரிய மற்றும் சிறிய அளவில் ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக மொத்த பலசரக்கு கடைகள் அதிகம் உள்ளன. இந்தப்பகுதியில் கதிரவன், குணாளன், சக்கரவர்த்தி ஆகிய 3 பேர் மொத்த பலசரக்கு கடைகளை நடத்தி வருகின்றனர்.

    இவர்கள் கடை ஆரம்பித்த நாளில் இருந்து ஜி.எஸ்.டி. வரி கட்டவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக மதுரை ஜி.எஸ்.டி. இயக்குநரக அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஜி.எஸ்.டி. வரி கட்டாமல் ரூ.66 கோடி வரை 3 பேரும் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு பலசரக்கு கடைகளுக்கு வந்த ஜி.எஸ்.டி. அதிகாரிகள் அங்குள்ள ரசீதுகள் மற்றும் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து கதிரவன், குணாளன், சக்கரவர்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டுமென கூறி அழைத்துச் சென்றனர்.

    இதுகுறித்த தகவல் அவர்களது குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் பதட்டமடைந்த அவர்கள், மகாத்மா காந்தி நகர் வள்ளுவர் காலனியில் உள்ள ஜி.எஸ்.டி. இயக்குநரக அலுவலகத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது அதிகாரிகள் எந்த தகவலையும் கூற மறுத்ததோடு, 3 பேரையும் சந்திக்க முடியாது என கண்டிப்புடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    ஜி.எஸ்.டி. அதிகாரிகளின் இந்த நடவடிக்கை வியாபாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 3 நாட்களாக விசாரணைக்கு சென்றவர்களின் கதி என்ன ஆனது? என்பது மர்மமாக உள்ளது. அதிகாரிகளும் சரியாக பதிலளிக்கவில்லை.

    இதை கண்டித்தும், விசாரணைக்கு அழைத்துச் சென்ற 3 பேரை விடுவிக்க வலியுறுத்தியும் நுகர்பொருள் மொத்த வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இன்று வள்ளுவர் காலனியில் உள்ள ஜி.எஸ்.டி. இயக்குநரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் துணை மேயர் நாகராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. திடீர் போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கீழமாசியில் கடை வைத்து வியாபாரம் செய்ய மொத்த முதலீடு ரூ.50 லட்சம் தான். ஆனால் ஜி.எஸ்.டி. செலுத்தாமல் ரூ.66 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக அதிகாரிகள் கூறுவது அதிர்ச்சியாக உள்ளது. ஜி.எஸ்டி. தொடர்பாக ஆய்வு நடத்த வரும் அதிகாரிகள் எஸ்டி மேட் பில் என கூறப்படும் ரத்தான பில்களையும் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்ற 3 பேரையும் விடுவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×