search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைபர் கிரைம் போலீஸ்"

    • பேஸ்புக் மூலம் லண்டன் நாட்டை சேர்ந்த ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.
    • பார்சலில் உள்ள பொருளின் மதிப்பு ரூ.80 லட்சம் என்று கூறியுள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரம் சாமுண்டிபுரத்தை சேர்ந்தவர் கிஷோர் (40) திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். தொழிலதிபரான கிஷோருக்கு பேஸ்புக் மூலம் லண்டன் நாட்டை சேர்ந்த ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அவர் சில நாட்களாக கிஷோருடன் பேஸ்புக்கில் எஸ்எம்எஸ் மூலம் பேச்சு கொடுத்து வந்தார். இதன்மூலம் கிஷோரும், அந்த லண்டனை சேர்ந்த நபரும் நல்ல நண்பர்களாகியுள்ளனர்.

    இந்நிலையில், லண்டனை சேர்ந்த நபர் கிஷோருக்கு, லண்டன் நாட்டின் டாலர் மற்றும் நகைகளை பரிசாக அளிக்கிறேன் என்றும், அதனை பார்சல் மூலம் அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய கிஷோர், லண்டனில் இருந்து பரிசு வரும் என நம்பி காத்திருந்தார். தொடர்ந்து 2 நாட்களுக்கு பின் கிஷோரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் டெல்லி விமான நிலையத்திலிருந்து சுங்கத்துறை அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். தொடர்ந்து அந்த நபர், கிஷோரிடம் தங்களுக்கு வந்துள்ள பார்சல் சட்ட விரோதமானது எனவும், இந்த பார்சலில் உள்ள பொருளின் மதிப்பு ரூ.80 லட்சம் இருக்கும் எனவும் கூறியுள்ளார். மேலும், இதனை பாதுகாப்பாக பெற பல லட்சம் பணத்தை செலவழிக்க வேண்டும் என கூறிகிஷோரிடம் கடந்த 2 மாதமாக கொஞ்சம் கொஞ்சமாக சுமார் ரூ.16 லட்சம் பணம் பெற்றுள்ளார். ஆனால், இதுவரை கிஷோருக்கு பார்சல் வந்து சேரவில்லை. இதனால் ஒருகட்டத்தில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கிஷோர், இது குறித்து கிஷோர் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    மேலும், உண்மையில் அந்த நபர்கள் லண்டன், டெல்லியில் உள்ளனரா? அல்லது உள்ளூரில் இருந்து கொண்டு போலியாக சமூக வலைதளத்தில் கணக்கை உருவாக்கி மோசடி செய்தனரா? என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    • தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பல குற்றங்கள் நடந்து வருகிறது.
    • இதனை தடுக்க போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு படித்தபோது இவரது வகுப்பில் படித்த மாணவர் ஒருவருடன் மாணவிக்கு பழக்கம் இருந்தது. அந்த மாணவர் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் அத்துடன் பள்ளிப்படிப்பை முடித்து விட்டார்.

    அதன்பிறகும் மாணவியிடம் செல்போனில் பேசுவதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார். மாணவியை அவர் காதலிப்பதாக தெரிவித்து ஆசைவார்த்தைகள் கூறினார். அதனை நம்பி மாணவியும் அந்த சிறுவனுடன் பேசி வந்தார்.

    போனில் மட்டுமே பேசி வந்த அவர்கள் நாளடைவில் வீடியோ கால் மூலமும் பேசி காதலை வளர்த்தனர். வீடியோ காலில் பேசும்போது மாணவியை நிர்வாணமாக பார்க்க விரும்புவதாக சிறுவன் தெரிவித்தார். ஆனால் மாணவி மறுப்பு தெரிவித்து நாட்களை கடத்தினார்.

    ஒருகட்டத்தில் சிறுவனின் தொல்லை தாங்காமல் மாணவி நிர்வாணமாக வந்து வீடியோ காலில் பேசி உள்ளார். அந்த காட்சிகளை சிறுவன் செல்போனில் பதிவு செய்து கொண்டான்.

    இதையறியாத மாணவி தொடர்ந்து சிறுவனிடம் பழகினார். அதன்பிறகு மீண்டும் ஒருநாள் நிர்வாணமாக வீடியோ காலில் பேசுமாறு சிறுவன் கூறி இருக்கிறான். ஆனால் மாணவியோ இனிமேல் நான் அப்படி வீடியோ காலில் வர மாட்டேன் என பிடிவாதமாக கூறி இருக்கிறார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன், நீ ஏற்கனவே ஒருமுறை நிர்வாணமாக நின்றதை நான் வீடியோவாக பதிவு செய்துள்ளேன். நீ இப்போது அப்படி வரவில்லை என்றால் இந்த காட்சிகளை உனது பெற்றோருக்கு அனுப்பி வைத்து விடுவேன் என்று மிரட்டினார்.

    சிறுவன் பொய் சொல்வதாக நினைத்த சிறுமி, என்னிடம் இதுபோல் பொய் சொல்லி ஏமாற்ற நினைக்காதே என்று யதார்த்தமாக பேசினார்.

    அடுத்த நிமிடம் மாணவியின் செல்போனுக்கு அவர் நிர்வாணமாக பேசிய வீடியோ காட்சிகளை அந்த சிறுவன் அனுப்பி வைத்தான். அதனை கண்டு மாணவி அதிர்ச்சி அடைந்தார். நிலைமை விபரீதமானதை உணர்ந்த மாணவி, பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த பிரச்சினையை கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

    இதைத்தொடர்ந்து பெற்றோர் அவரை கண்டித்ததுடன் கோவை சைபர் கிரைம் போலீஸ்நிலையத்திலும் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    அந்த மாணவி, தன்னுடன் பழகிய சிறுவன் எந்த ஊர் என்று கூட அறியாமல் அவருடன் நெருங்கி பழகி உள்ளார். அதனால் அவர் எந்த ஊர் என்பதை கண்டறிந்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர். அந்த சிறுவன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    பள்ளி, கல்லூரி மாணவிகளை எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீஸ்

    தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பல குற்றங்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுரைகளை கூறி வருகின்றனர்.

    பள்ளி-கல்லூரி மாணவிகள் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழக வேண்டாம். ஆன்லைன் விளையாட்டு, வாட்ஸ்-அப், முகநூல் மூலம் அறிமுகமாகும் நபர்களிடம் தங்களது செல்போன் எண் மற்றும் இதர விவரங்களை தர கூடாது.

    மாணவிகளுக்கு பாலியல் தொடர்பான தொந்தரவுகள் இருந்தால் தயக்கம் இன்றி பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். அவர்கள் குழப்பத்தில் இருந்தால் விசாரித்து அவர்களை தைரியப்படுத்த வேண்டும். பாலியல் தொந்தரவு தருபவர்களை காப்பாற்ற முயற்சி செய்ய கூடாது. போலீசில் புகார் அளிக்க வேண்டும். புகார் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும் என கூறி வருகிறார்கள்.

    போலீசாரின் எச்சரிக்கையை மீறி கோவை மாணவியை போல் ஏமாற்றும் நபர்களிடம் சிக்கி வாழ்க்கையை தொலைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எனவே இனிமேலாவது மற்ற மாணவிகள் உஷாராக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    • மாவட்ட மருத்துவ அலுவலர் புகார்
    • சைபர் கிரைம் போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அரசு மருத்துவமனை பற்றிய தவறான பொய்ப் பிரச்சாரங்களை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதன்மை மருத்துவ அலுவலர் குமரவேல் சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார்அதில் கூறியிருப்பதாவது:-

    திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த ஓராண்டில் 87ஆயிரம், பறநோயாளிகள் 8700, உள்நோயாளிகளுக்கு மிக சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது 7871, கர்ப்பிணி பெண்களுக்கு தமிழகத்திலேயே அதிக அளவில் பிரசவம் பார்க்கப்பட்டு உள்ளது.

    மிக சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையை சிலர் வேண்டுமென்றே அரசு மருத்துவமனை பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் இங்கு ரத்தம் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். அரசு மருத்துவமனையில் ரத்தம் பெற்ற விவரம் முழுவதும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட குழு சரிபார்க்கப்பட்டு உள்ளது.

    இங்கு பொதுமக்கள் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படும் ரத்தம் சேமிக்கப்பட்டு கர்ப்பிணிகளுக்கும், அறுவை சிகிச்சைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவசர தேவைக்கு வெளி மருத்துவமனையில் தேவைப்படுவோருக்கு பணம் செலுத்தி ரசீது வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் வேண்டுமென்றே பொய் பிரச்சாரம் செய்த அரசு மருத்துவமனைக்கு களங்கம் விளைவித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் மனுவை பெற்றுக்கொண்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெகடர் பிரேமா நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • கடனுக்கான தொகையை உடனடியாக செலுத்த வேண்டும், செலுத்த தவறினால் உங்களின் படம் ஆபாசமாக வெளியிடப்படும் என செல்போனில் பேசியவர் தெரிவித்தார்.
    • மிரட்டலுக்கு அஞ்சாத நிலையில் அந்த கும்பல் என் படத்தை மார்பிங், கிராபிக் செய்து எனக்கும், உறவினர்கள், நண்பர்கள் வாட்ஸ்அப், பேஸ்புக்கில் அனுப்பி மிரட்டுகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்த முத்து மகன் விஷ்ணுபிரியன் (வயது 25). மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    எலக்ட்ரீசியனாக பணியாற்றி வரும் எனது செல்போன் வாட்ஸ்அப்புக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு புது எண்ணில் இருந்து ஒரு மெசேஜ் வந்தது. மற்றொரு எண்ணில் இருந்து பேசிய நபர் தாங்கள் வாங்கிய கடனுக்கு தவணை கட்ட வேண்டும், இது தொடர்பான செயலியில் சென்று பார்த்தால் விவரங்கள் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இது குறித்து மெசேஜ் வந்த செல்போன் எண்ணில் நான் தொடர்பு கொண்ட போது கடனுக்கான தொகையை உடனடியாக செலுத்த வேண்டும், செலுத்த தவறினால் உங்களின் படம் ஆபாசமாக வெளியிடப்படும் என அதில் பேசியவர் தெரிவித்தார்.

    மிரட்டலுக்கு அஞ்சாத நிலையில் அந்த கும்பல் என் படத்தை மார்பிங், கிராபிக் செய்து எனக்கும், உறவினர்கள், நண்பர்கள் வாட்ஸ்அப், பேஸ்புக்கில் அனுப்பி மிரட்டுகின்றனர். எனவே பணம் கேட்டு மிரட்டல் விடுக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் அந்த செல்போன் எண்கள் யாருடையது , எங்கிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது குறித்து விசாரணையில் இறங்கி உள்ளனர். விசாரணை முடிவில் இதில் தொடர்புடைய பெரிய கும்பல் சிக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    ×