search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைனீஷ் ரெசிப்பி"

    • சாஸ் அல்லது சட்னியை தொட்டு சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.
    • குழந்தைகள், பெரியவர்கள் அனைவரையுமே இது கவரும்.

    சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் ஒரு வித்தியாசமான உணவு. இதில், வேகவைத்த நூடுல்சுடன் சிக்கன் ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது. பொதுவாக நூடுல்ஸ் குழந்தைகளால் விரும்பி உண்ணப்படுகிறது. நூடுல்சை பொரிப்பதால் கிடைக்கும் மொறுமொறுப்பான சுவை அவர்களை மேலும் கவரும். சைவ உணவு பிரியர்கள், கட்லெட் வடிவத்தில் வேகவைத்த உருளைக்கிழங்குடன் நூடுல்ஸ் கட்லெட் சாப்பிடலாம்.

    சுவையான சிற்றுண்டியாக அமையக்கூடிய சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்...

    தேவையான பொருட்கள்:

    வேகவைத்த நூடுல்ஸ் (உப்பு சேர்த்து) - 2 கப்

    வேகவைத்த சிக்கன்- ஒரு கப் (துண்டு போட்டு உப்பு சேர்க்கப்பட்டது)

    ரொட்டித்தூள் - அரை கப்

    சீஸ்- ஒரு கப்

    சின்ன வெங்காயம்- ஒரு கப்

    நறுக்கிய இஞ்சி- ஒரு ஸ்பூன்

    பச்சை மிளகாய் - ஒரு ஸ்பூன்

    பூண்டு- ஒரு ஸ்பூன்

    கொத்தமல்லி, புதினா இலைகள்- தேவையான அளவு

    கரம் மசாலா தூள்- ஒரு ஸ்பூன்

    கருப்பு மிளகுத்தூள்- ஒரு ஸ்பூன்

    சாட் மசாலா- ஒரு ஸ்பூன்

    மிளகாய்த்தூள்- ஒரு ஸ்பூன்

    சோயா சாஸ்- ஒரு ஸ்பூன்

    முட்டை-1

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய்-தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் ஒரு பெரிய கிண்ணத்தில் 2 கப் வேகவைத்த நூடுல்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில், துருவிய மற்றும் வேகவைத்த சிக்கன், ரொட்டித் துண்டுகள், சீஸ், நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு (விரும்பினால் இஞ்சி பூண்டு விழுதையும் பயன்படுத்தலாம்).

    வெங்காயம், சிறிது பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி இலைகள், கரம் மசாலா தூள், கருப்பு மிளகுத்தூள், சாட் மசாலா, நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், சோயா சாஸ் மற்றும் உப்பு ஆகிய அனைத்தையும் ஒன்றாக நன்கு கலக்க வேண்டும்.

    இப்போது இந்த கலவையில் இருந்து கட்லெட்டுகளை உருவாக்கலாம். உள்ளங்கையில் எண்ணெய் தடவிக்கொண்டு, நீங்கள் விரும்பும் அளவுக்கு கட்லெட்டுகளை உருவாக்கலாம்.

    பின்னர், உடைத்து ஊற்றிய முட்டையில் கட்லெட்டுகளை நனைத்து அவற்றின் மீது ரொட்டித்தூளை தூவ வேண்டும். அதன் பின் கட்லெட்டை மிதமான தீயில், இருபுறமும் பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.

     இப்போது சுவையான சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் ரெடி. சாஸ் அல்லது சட்னியை தொட்டு சாப்பிடுவதற்கு இது சுவையாக இருக்கும். பார்ட்டிகளில் பரிமாறுவதற்கு சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் மிகவும் ஏற்றது. குழந்தைகள், பெரியவர்கள் அனைவரையுமே இது கவரும். குழந்தைகளின் டிபன் பாக்சில் கொடுத்து அனுப்புவதற்கு நல்ல உணவாக இருக்கும்.

    • அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஹெல்த்தியான கொரின் டிஷ்.
    • 5 நிமிடத்தில் ஈஸியா செய்து சாப்பிடலாம்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய ஹெல்த்தியான கொரின் ஸ்பெஷல் பனானா ஃபிரை 5 நிமிடத்தில் ஈஸியா செய்து சாப்பிடலாம். பொதுவாக மாலை நேரங்களில் ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று அனைவருக்கும் தோன்றும். வாழைப்பழத்தில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் பி 6, வைட்டமின் சி, கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது. எனவே ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வித்தியாசமான பனானா ஃபிரை செய்து சுவைத்து பாருங்கள்.

    தேவையான பொருட்கள்:

    கார்ன்பிளார்- 3 ஸ்பூன்

    சோடா உப்பு- கால் டீஸ்பூன்

    முட்டை- 2

    பால்- 50 மில்லி

    பிரெட் தூள்- தேவையான அளவு

    எண்ணெய்- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் வாழைப்பழங்களை இரண்டாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வாழைப்பழ துண்டுகளில் ஐஸ் கிரீம் குச்சிகளை சொருகி லாலிபாப் போன்று வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு பவுலில் கார்ன்பிளார் மாவு, சோடா உப்பு மற்றும் முட்டையை அதில் உடைத்து ஊற்றி நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும். இதில் பால் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்துகொள்ள வேண்டும்.

    இப்போது வாழைப்பழங்களை இந்த கார்ன்பிளார் மாவுக் கலவையில் தோய்த்து, பின்னர் பிரெட் தூள்களில் புரட்டி எடுத்து ஒரு பிளேட்டில் வரிசையாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வாழைப்பழ துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான கொரியன் ஸ்பெஷல் பனானா ஃபிரை தயார். இதனை தேனுடன் தொட்டுக்கொள்ள சுவை இன்னும் அற்புதமாக இருக்கும். நீங்களும் உங்களது வீடுகளில் செய்து சுவைத்துப் பாருங்கள்.

    • ஒரு மாலை நேர ஸ்நாக்ஸ்.
    • மோமோசில் பல வகை இருக்கிறது.

    மோமோஸ் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர ஸ்நாக்ஸ். உணவு பிரியர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இதற்கென ஒரு தனி மவுசு உண்டு. மோமோஸ் செய்யப்படும் ரெஸ்டாரன்ட் மற்றும் சாட் கடைகளில் மாலை நேரங்களில் கூட்டம் நிரம்பி வழிவதை நம்மால் காண முடியும். மோமோசில் பல வகை இருக்கிறது. அதில் சிக்கன் மோமோஸ், பீஃப் மோமோஸ், வெஜிடபிள் மோமோஸ், சீஸ் மோமோஸ், மற்றும் பால் உருண்டை மற்றும் சர்க்கரையை கொண்டு செய்யப்படும் கோவா மோமோஸ் பிரபலமானவை.

    தேவையான பொருட்கள்

    மைதா மாவு- ஒரு கப்

    வெங்காயம்- 1 (நறுக்கியது)

    குடை மிளகாய்- 1

    கேரட்- 1

    பீன்ஸ்- 5-6

    முட்டைகோஸ்- (சின்னது)

    பூண்டு- 2 பல்

    இஞ்சி- ஒரு துண்டு

    மிளகு தூள்- ஒரு ஸ்பூன்

    வினிகர்- ஒரு ஸ்பூன்

    சோயா சாஸ்- ஒரு ஸ்பூன்

    கொத்தமல்லி- சிறிதளவு

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய்- தேவையான அளவு

    செய்முறை

    முதலில் வெங்காயம், குடை மிளகாய், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், பூண்டு, இஞ்சி, மற்றும் கொத்தமல்லியை பொடியா நறுக்கி தயார் செய்து வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு பவுலில் மைதா மாவு, கால் மேஜைக்கரண்டி அளவு உப்பு, 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய், மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் வைத்து இறுக்கமாக மூடி போட்டு அதை சுமார் 40-ல் இருந்து ஒரு மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.

    அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை அதை வதக்கவும்.

    இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாய், கேரட், முட்டைகோஸ், மற்றும் பீன்சை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம் வரை அதை வதக்கவும். அதில் மிளகாய் தூள், வினிகர், சோயா சாஸ், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு வேக விடவும். பின்னர் அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பில் இருந்து இறக்கி அதை சிறிது நேரம் ஆற விடவும்.

    அடுத்து நாம் ஊற வைத்திருக்கும் மாவை எடுத்து அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

    இப்பொழுது சப்பாத்தி கல்லில் ஒவ்வொரு உருண்டைகளாக வைத்து சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நாம் செய்து வைத்திருக்கும் ஸ்டஃப்பிங்கை வைக்கவும். ஸ்டஃப்பிங்கை வைத்த பின் அவரவருக்கு பிடித்தமான வடிவில் மோமோசை மடித்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    பின்னர் இட்லி தட்டை எடுத்து அதில் எண்ணெய்யை தடவி இந்த மோமோசை அதில் வைக்கவும். அடுத்து இட்லி அவிக்கும் பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு சுமார் 8-ல் இருந்து 10 நிமிடம் வரை அதை வேக விடவும்.10 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு மூடியை திறந்து மோமோசை எடுத்து சுட சுட பரிமாறவும்.

    ×