search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chinese recipe"

    • சாதத்துடன் சேர்த்து சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
    • ரெசிபியின் செய்முறை மிகவும் எளிமையானது.

    என்ன பேரை கேட்டாலே ஒன்னும் புரியவில்லையா? சிக்கன் ஜல்ப்ரேசி ஒரு பாகிஸ்தான் ரெசிபி. இந்த ரெசிபி சாதத்துடன் சேர்த்து சாப்பிடக்கூடியவாறு இருக்கும். எனவே எப்போதும் ஒரே மாதிரியான சிக்கன் குழம்பை செய்யாமல், அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபிகளை விடுமுறை நாட்களிலோ அல்லது பண்டிகையின் போதோ செய்து சாப்பிடலாம். இந்த சிக்கன் ஜல்ப்ரேசியை செய்தால், சற்று ஸ்பெஷலான உணவாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியின் செய்முறை மிகவும் எளிமையானது. இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா...

    தேவையான பொருட்கள்:

    சிக்கன் - 1/2 கிலோ

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2

    டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    வெங்காயம் - 2 (நறுக்கியது)

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

    குடைமிளகாய் - 1 (நறுக்கியது)

    தக்காளி - 2 (நறுக்கியது)

    பச்சை மிளகாய் - 4 (நீளமாக கீறியது)

    கரம் மசாலா - 1 டீஸ்பூன்

    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

    செய்முறை:

    முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, தீயை குறைத்து வைத்து 2 நிமிடம் வதக்க வேண்டும். பின்னர் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, 5-7 நிமிடம் வதக்க வேண்டும்.

    அதன்பிறகு பச்சை மிளகாய் மற்றும் குடைமிளகாய் சேர்த்து சிறிது நேரம் கிளறி, தக்காளி மற்றும் உப்பு போட்டு, தக்காளி நன்கு வேகும் வரை வதக்க வேண்டும்.

    அடுத்து கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் கிளறி, பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான சிக்கன் ஜல்ப்ரேசி ரெடி. இதன்மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து சிறிது நேரம் மூடி வைத்து, பின் சாதத்துடன் பரிமாறினால் நன்றாக இருக்கும்.

    • சாஸ் அல்லது சட்னியை தொட்டு சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.
    • குழந்தைகள், பெரியவர்கள் அனைவரையுமே இது கவரும்.

    சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் ஒரு வித்தியாசமான உணவு. இதில், வேகவைத்த நூடுல்சுடன் சிக்கன் ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது. பொதுவாக நூடுல்ஸ் குழந்தைகளால் விரும்பி உண்ணப்படுகிறது. நூடுல்சை பொரிப்பதால் கிடைக்கும் மொறுமொறுப்பான சுவை அவர்களை மேலும் கவரும். சைவ உணவு பிரியர்கள், கட்லெட் வடிவத்தில் வேகவைத்த உருளைக்கிழங்குடன் நூடுல்ஸ் கட்லெட் சாப்பிடலாம்.

    சுவையான சிற்றுண்டியாக அமையக்கூடிய சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்...

    தேவையான பொருட்கள்:

    வேகவைத்த நூடுல்ஸ் (உப்பு சேர்த்து) - 2 கப்

    வேகவைத்த சிக்கன்- ஒரு கப் (துண்டு போட்டு உப்பு சேர்க்கப்பட்டது)

    ரொட்டித்தூள் - அரை கப்

    சீஸ்- ஒரு கப்

    சின்ன வெங்காயம்- ஒரு கப்

    நறுக்கிய இஞ்சி- ஒரு ஸ்பூன்

    பச்சை மிளகாய் - ஒரு ஸ்பூன்

    பூண்டு- ஒரு ஸ்பூன்

    கொத்தமல்லி, புதினா இலைகள்- தேவையான அளவு

    கரம் மசாலா தூள்- ஒரு ஸ்பூன்

    கருப்பு மிளகுத்தூள்- ஒரு ஸ்பூன்

    சாட் மசாலா- ஒரு ஸ்பூன்

    மிளகாய்த்தூள்- ஒரு ஸ்பூன்

    சோயா சாஸ்- ஒரு ஸ்பூன்

    முட்டை-1

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய்-தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் ஒரு பெரிய கிண்ணத்தில் 2 கப் வேகவைத்த நூடுல்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில், துருவிய மற்றும் வேகவைத்த சிக்கன், ரொட்டித் துண்டுகள், சீஸ், நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு (விரும்பினால் இஞ்சி பூண்டு விழுதையும் பயன்படுத்தலாம்).

    வெங்காயம், சிறிது பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி இலைகள், கரம் மசாலா தூள், கருப்பு மிளகுத்தூள், சாட் மசாலா, நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், சோயா சாஸ் மற்றும் உப்பு ஆகிய அனைத்தையும் ஒன்றாக நன்கு கலக்க வேண்டும்.

    இப்போது இந்த கலவையில் இருந்து கட்லெட்டுகளை உருவாக்கலாம். உள்ளங்கையில் எண்ணெய் தடவிக்கொண்டு, நீங்கள் விரும்பும் அளவுக்கு கட்லெட்டுகளை உருவாக்கலாம்.

    பின்னர், உடைத்து ஊற்றிய முட்டையில் கட்லெட்டுகளை நனைத்து அவற்றின் மீது ரொட்டித்தூளை தூவ வேண்டும். அதன் பின் கட்லெட்டை மிதமான தீயில், இருபுறமும் பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.

     இப்போது சுவையான சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் ரெடி. சாஸ் அல்லது சட்னியை தொட்டு சாப்பிடுவதற்கு இது சுவையாக இருக்கும். பார்ட்டிகளில் பரிமாறுவதற்கு சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் மிகவும் ஏற்றது. குழந்தைகள், பெரியவர்கள் அனைவரையுமே இது கவரும். குழந்தைகளின் டிபன் பாக்சில் கொடுத்து அனுப்புவதற்கு நல்ல உணவாக இருக்கும்.

    • மாலை நேரங்களில் டீ காபியுடன் சுட சுட ஸ்னாக்சாக சாப்பிடலாம்.
    • குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

    மாலை நேரங்களில் டீ காபியுடன் சுட சுட ஸ்னாக்ஸ் ஆக சாப்பிடுவதற்கு அல்லது மதிய உணவு உடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் இந்த முட்டை 65 இருக்கும். இதுபோன்று மாலை நேரங்களில் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டையை வைத்து பொடிமாஸ், ஆம்லெட், கிரேவி, குழம்பு என பல வகைகளிலும் ருசித்து சாப்பிட்டு இருப்போம், இன்று முட்டையை வைத்து 65 வித்தியாசமாக செய்வது எப்படி என பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    முட்டை- 5

    மிளகுத்தூள்- கால் ஸ்பூன்

    மிளகாய் தூள்- 1ஸ்பூன்

    காஷ்மீர் மிளகாய்த்தூள்- 1ஸ்பூன்

    மஞ்சள்தூள்- கால் ஸ்பூன்

    சோளமாவு- 1ஸ்பூன்

    கரம் மசாலா- 1ஸ்பூன்

    இஞ்சிபூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்

    எலுமிச்சை- பாதியளவு

    அரிசிமாவு-1ஸ்பூன்

    எண்ணெய்- தேவையான அளவு

    உப்பு சிறிதளவு

    செய்முறை:

    ஒரு சிறிய பாத்திரத்தில் எண்ணெய் லேசாக தடவி முட்டைகளை உடைத்து ஊற்றிக் கால் ஸ்பூன் மிளகுத்தூள், கால் ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக அடித்து கலக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் சிறிதளவு ஊற்றி முட்டை கலவையை அந்த பாத்திரத்தை மேல் வைத்து ஒரு மூடி போட்டு அதை மிதமான சூட்டில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

    அதன்பிறகு ஆவியில் வேகவைத்த முட்டையை எடுத்து சிறு சிறு பீசாக வெட்டிக்கொள்ள வேண்டும். ஒரு தட்டில் மிளகாய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் காஷ்மீர் மிளகாய்த்தூள், சோள மாவு, அரிசி மாவு, தேவையான அளவு உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து மீன் பொரிப்பதற்கு மசாலா ரெடி செய்வது போல் செய்து அதில் வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை பிரட்டி எடுக்க வேண்டும்.

    பின்னர் மற்றொரு பாத்திரத்தில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை சேர்த்து பொரித்தெடுக்கவும். மசாலா பிரியாமல் வரும். இப்போது மொறு மொறுவென முட்டை 65 ரெடி. நம் குழந்தைகளுக்கு இந்த மாதிரி புதுமையான முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

    • காரசாரமான பிரெட் சில்லி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    • திரும்பத் திரும்ப கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.

    சிக்கன் சில்லி சாப்பிட்டு பார்த்திருப்பீங்க. ஆனால் சுவையான இந்த சைவ சில்லி பிரட் போன்றவற்றை சாப்பிட்டதுண்டா? ஒரு முறை இந்த மாதிரி பிரட் வைத்து சில்லி பிரட் காரசாரமா ருசியா செஞ்சி பாருங்க, எல்லோருமே திரும்பத் திரும்ப கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. காரசாரமான பிரெட் சில்லி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    சாண்ட்விச் பிரட் – 5

    எண்ணெய் – தேவையான அளவு

    பூண்டு – ஒரு டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

    இஞ்சி – ஒரு டேபிள் ஸ்பூன்

    வெங்காயம் – ஒன்று

    குடைமிளகாய் – ஒன்று

    பச்சை மிளகாய் – இரண்டு

    உப்பு – தேவையான அளவு

    மிளகுத்தூள் – முக்கால் ஸ்பூன்

    சில்லி பேஸ்ட் – ஒரு டேபிள் ஸ்பூன்

    வெங்காயத்தாள், வெங்காயம் – ஒரு டேபிள் ஸ்பூன்

    கான்பிளவர் மாவு – ஒன்றரை ஸ்பூன்

    தக்காளி சாஸ் – 2 டேபிள்ஸ்பூன்

    கொத்தமல்லித்தழை – சிறிதளவு

    செய்முறை

    20 மிளகாய்களை மூழ்கும் அளவு தண்ணீரில் 15 நிமிடம் வேக வைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் வற்றியதும் மிளகாயை ஆறவைத்து ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் பிரட் துண்டுகளை எடுத்து அதன் ஓரத்தில் இருக்கும் பகுதிகளை வெட்டி எடுத்து விட வேண்டும். பிரெட்டை சதுர சதுரமாக சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் வைத்துக் கொள்ள வேண்டும்.

    அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் விட்டு பிரட் துண்டுகளை சேர்த்து எல்லா புறமும் பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    மீண்டும் கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் பொடிதாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும்.

    கலவை வதங்கியதும் வினிகர், சோயா சாஸ், சில்லி பேஸ்ட் சேர்த்துக்கொள்ள வேண்டும். வினிகர் இல்லை என்றால் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளலாம். இவைகளை வதக்கி விட்டு தக்காளி சாஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயத்தாளுடன் கூடிய வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து வதக்க வேண்டும்.

    ஒரு ஸ்பூன் சோள மாவுடன் தண்ணீர் சேர்த்து கரைத்து இதில் சேர்க்க வேண்டும். கிரேவி பதத்திற்கு கெட்டியாக வந்ததும், வறுத்து வைத்துள்ள பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு கலந்துவிட வேண்டும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து மசாலா பிரெட்டில் ஊரும் அளவிற்கு நன்கு கலந்து விட வேண்டும். இதில் கொத்தமல்லித்தழையை தூவி இறக்கினால் சுவையான சில்லி பிரெட் தயார்.

    • அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஹெல்த்தியான கொரின் டிஷ்.
    • 5 நிமிடத்தில் ஈஸியா செய்து சாப்பிடலாம்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய ஹெல்த்தியான கொரின் ஸ்பெஷல் பனானா ஃபிரை 5 நிமிடத்தில் ஈஸியா செய்து சாப்பிடலாம். பொதுவாக மாலை நேரங்களில் ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று அனைவருக்கும் தோன்றும். வாழைப்பழத்தில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் பி 6, வைட்டமின் சி, கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது. எனவே ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வித்தியாசமான பனானா ஃபிரை செய்து சுவைத்து பாருங்கள்.

    தேவையான பொருட்கள்:

    கார்ன்பிளார்- 3 ஸ்பூன்

    சோடா உப்பு- கால் டீஸ்பூன்

    முட்டை- 2

    பால்- 50 மில்லி

    பிரெட் தூள்- தேவையான அளவு

    எண்ணெய்- தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் வாழைப்பழங்களை இரண்டாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வாழைப்பழ துண்டுகளில் ஐஸ் கிரீம் குச்சிகளை சொருகி லாலிபாப் போன்று வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு பவுலில் கார்ன்பிளார் மாவு, சோடா உப்பு மற்றும் முட்டையை அதில் உடைத்து ஊற்றி நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும். இதில் பால் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்துகொள்ள வேண்டும்.

    இப்போது வாழைப்பழங்களை இந்த கார்ன்பிளார் மாவுக் கலவையில் தோய்த்து, பின்னர் பிரெட் தூள்களில் புரட்டி எடுத்து ஒரு பிளேட்டில் வரிசையாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வாழைப்பழ துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான கொரியன் ஸ்பெஷல் பனானா ஃபிரை தயார். இதனை தேனுடன் தொட்டுக்கொள்ள சுவை இன்னும் அற்புதமாக இருக்கும். நீங்களும் உங்களது வீடுகளில் செய்து சுவைத்துப் பாருங்கள்.

    • உருளைக்கிழங்கு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.
    • உருளைக்கிழங்கு ஃபிரை என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.

    உருளைக்கிழங்கு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. உருளைக்கிழங்கு ஃபிரை என்றாலே அனைத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். உருளைக் கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளது. உருளைகிழங்கு சாப்பிடுவதால் நார்ச்சத்து உடம்பில் சேருகிறது. இதனை வறுத்து உண்பதைவிட வேகவைத்து உண்பதே நல்லது. உருளைகிழங்கை வைத்து வீட்டிலேயே இந்திய-சீன உணவான ஹனி சில்லி பொட்டேடோ ஃபிரை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு – 6

    சோள மாவு – 1 ஸ்பூன்

    வெங்காயம் – 1/2 (நறுக்கியது)

    பச்சை குடைமிளகாய் – கால் கப் (நறுக்கியது)

    பூண்டு – 2 ஸ்பூன் பொடியாக (நறுக்கியது)

    இஞ்சி – 2 ஸ்பூன் பொடியாக (நறுக்கியது)

    பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)

    மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

    மிளகு தூள் – 1/2 ஸ்பூன்

    சோயா சாஸ் – 1 ஸ்பூன்

    சில்லி சாஸ் – 2 ஸ்பூன்

    தக்காளி கெட்சப் – 2 ஸ்பூன்

    உப்பு – தேவையான அளவு

    தேன் – கால் கப்

    வெங்காயத்தாள் கீரை – ஒரு கைப்பிடி

    வெள்ளை எள் – 1 ஸ்பூன்

    எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

    செய்முறை:

    முதலில் உருளைக்கிழங்கை சுத்தம் செய்து தோலை நீக்கி நீளவாக்கில் நறுக்கிக் வைத்து கொள்ளவேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்க வேண்டும்.

    சரியான பதத்திற்கு வரும்வரை உருளைக்கிழங்கை வேகவைத்து தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து நன்றாக ஆறவிடவேண்டும். உருளைக்கிழங்கு ஆறியவுடன் சோள மாவை சலித்து உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.

    மேலும் ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன் உருளைக்கிழங்கை அதில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அடுத்து அடுப்பில் மற்றொரு பெரிய வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க விடவும். அதன்பின் நறுக்கிய பச்சை குடைமிளகாய், தேவையான அளவு உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்துவிடவும். அவை அனைத்தும் சிறிது வதங்கியவுடன் அதனுடன் தேவையான அளவு சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி கெட்சப் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

    அனைத்தும் நன்கு வதங்கியவுடன் அடுப்பை அனைத்து விட்டு சிறிது தேன் சேர்த்து கலந்து அதனுடன் பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கையும் சேர்த்து மெதுவாக கலந்து விடவும். இறுதியாக நறுக்கிய வெங்காயத்தாள், வெள்ளை எள்ளு சேர்த்து கலந்துவிட்டால் சுவையான ஹனி சில்லி பொட்டேடோ ஃபிரை ரெடி.

    • ஒரு மாலை நேர ஸ்நாக்ஸ்.
    • மோமோசில் பல வகை இருக்கிறது.

    மோமோஸ் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர ஸ்நாக்ஸ். உணவு பிரியர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இதற்கென ஒரு தனி மவுசு உண்டு. மோமோஸ் செய்யப்படும் ரெஸ்டாரன்ட் மற்றும் சாட் கடைகளில் மாலை நேரங்களில் கூட்டம் நிரம்பி வழிவதை நம்மால் காண முடியும். மோமோசில் பல வகை இருக்கிறது. அதில் சிக்கன் மோமோஸ், பீஃப் மோமோஸ், வெஜிடபிள் மோமோஸ், சீஸ் மோமோஸ், மற்றும் பால் உருண்டை மற்றும் சர்க்கரையை கொண்டு செய்யப்படும் கோவா மோமோஸ் பிரபலமானவை.

    தேவையான பொருட்கள்

    மைதா மாவு- ஒரு கப்

    வெங்காயம்- 1 (நறுக்கியது)

    குடை மிளகாய்- 1

    கேரட்- 1

    பீன்ஸ்- 5-6

    முட்டைகோஸ்- (சின்னது)

    பூண்டு- 2 பல்

    இஞ்சி- ஒரு துண்டு

    மிளகு தூள்- ஒரு ஸ்பூன்

    வினிகர்- ஒரு ஸ்பூன்

    சோயா சாஸ்- ஒரு ஸ்பூன்

    கொத்தமல்லி- சிறிதளவு

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய்- தேவையான அளவு

    செய்முறை

    முதலில் வெங்காயம், குடை மிளகாய், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், பூண்டு, இஞ்சி, மற்றும் கொத்தமல்லியை பொடியா நறுக்கி தயார் செய்து வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு பவுலில் மைதா மாவு, கால் மேஜைக்கரண்டி அளவு உப்பு, 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய், மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் வைத்து இறுக்கமாக மூடி போட்டு அதை சுமார் 40-ல் இருந்து ஒரு மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.

    அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை அதை வதக்கவும்.

    இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாய், கேரட், முட்டைகோஸ், மற்றும் பீன்சை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம் வரை அதை வதக்கவும். அதில் மிளகாய் தூள், வினிகர், சோயா சாஸ், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு வேக விடவும். பின்னர் அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பில் இருந்து இறக்கி அதை சிறிது நேரம் ஆற விடவும்.

    அடுத்து நாம் ஊற வைத்திருக்கும் மாவை எடுத்து அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

    இப்பொழுது சப்பாத்தி கல்லில் ஒவ்வொரு உருண்டைகளாக வைத்து சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நாம் செய்து வைத்திருக்கும் ஸ்டஃப்பிங்கை வைக்கவும். ஸ்டஃப்பிங்கை வைத்த பின் அவரவருக்கு பிடித்தமான வடிவில் மோமோசை மடித்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    பின்னர் இட்லி தட்டை எடுத்து அதில் எண்ணெய்யை தடவி இந்த மோமோசை அதில் வைக்கவும். அடுத்து இட்லி அவிக்கும் பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு சுமார் 8-ல் இருந்து 10 நிமிடம் வரை அதை வேக விடவும்.10 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு மூடியை திறந்து மோமோசை எடுத்து சுட சுட பரிமாறவும்.

    ×