search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேதம் அடைந்த சாலை"

    • கூடலூரில் இருந்து 4 கி.மீ. தூரம் உள்ள ஏக லூத்துவரை யிலான சாலைகள் மழைக்கால ங்களில் அடிக்கடி காட்டா ற்று வெள்ளங்களினால் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளித்து வருகிறது.
    • இருசக்கர வாகனங்களில் விளை நிலங்களுக்குச் சென்று வரும் விவசாயிகள் கூர்மையான ஜல்லிக் கற்க ளால் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி இடையிலேயே நின்று விடுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் மேற்குத் தொடர்ச்சி மலையடி வாரப் பகுதிகளான கல் உடை ச்சான் பாறை, ஏகலூத்து , குறுக்கு வழி சாலை, புதுக்குளம் ஆகிய பகுதிக ளில் உள்ள மானாவாரி காடுகளில் விவசாயிகள் நிலக்கடலை, எள், தட்டைப் பயறு, மொச்சை, அவரை உள்ளிட்ட பயிர்களையும், தோட்ட விவசாயிகள் வாழை,தென்னை, திராட்சை, முட்டைக்கோஸ், வெங்காயம் உள்ளிட்ட பணப் பயிர்களையும் சாகுபடி செய்து வருகின்ற னர் . மேலும் மா, புளி, இலவம் மர தோப்பு களும் அதிக அளவில் உள்ளன.

    கூடலூரில் இருந்து 4 கி.மீ. தூரம் உள்ள ஏக லூத்துவரை யிலான சாலைகள் மழைக்கால ங்களில் அடிக்கடி காட்டா ற்று வெள்ளங்களினால் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளித்து வருகிறது.

    இதனால் விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தி ருந்தனர்.

    இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த சாலையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

    ஆனால் கடந்த 3 மாதங்களாக இந்தச் சாலையில் மேற்கொண்ட பணிகள் எதுவும் செய்ய ப்படாமல் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் விளை நிலங்களுக்குச் சென்று வரும் விவசாயிகள் கூர்மையான ஜல்லிக் கற்க ளால் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி இடையிலேயே நின்று விடுகிறது.

    இதனால் விளைப் பொருட்களை கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தார் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த சில வாரங்களாக வருசநாடு பகுதியில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக வருசநாடு-வாலிப்பாறை சாலை அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகிறது.
    • குறிப்பாக வருசநாடு-முருக்கோடை- உருட்டிமேடு இடையிலான தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்றதாக மாறிவிட்டது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு முதல் வாலிப்பாறை வரையிலான தார் சாலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    அதன் காரணமாக தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகிறது. கடந்த சில வாரங்களாக வருசநாடு பகுதியில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக வருசநாடு-வாலிப்பாறை சாலை அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகிறது.

    குறிப்பாக வருசநாடு-முருக்கோடை- உருட்டிமேடு இடையிலான தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்றதாக மாறிவிட்டது.

    இதனால் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகன விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெரிய அளவிலான விபத்துக்கள் நடைபெறும் முன்பு வருசநாடு-வாலிப்பாறை இடையே தார் சாலை அமைக்க மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×