search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருசநாடு-வாலிப்பாறை இடையே சேதம் அடைந்த சாலையால் விபத்து அபாயம்
    X

    பராமரிப்பு இல்லாததால் போக்குவரத்து தகுதியற்ற நிலையில் உள்ள சாலை.

    வருசநாடு-வாலிப்பாறை இடையே சேதம் அடைந்த சாலையால் விபத்து அபாயம்

    • கடந்த சில வாரங்களாக வருசநாடு பகுதியில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக வருசநாடு-வாலிப்பாறை சாலை அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகிறது.
    • குறிப்பாக வருசநாடு-முருக்கோடை- உருட்டிமேடு இடையிலான தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்றதாக மாறிவிட்டது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு முதல் வாலிப்பாறை வரையிலான தார் சாலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    அதன் காரணமாக தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகிறது. கடந்த சில வாரங்களாக வருசநாடு பகுதியில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக வருசநாடு-வாலிப்பாறை சாலை அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகிறது.

    குறிப்பாக வருசநாடு-முருக்கோடை- உருட்டிமேடு இடையிலான தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்றதாக மாறிவிட்டது.

    இதனால் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகன விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெரிய அளவிலான விபத்துக்கள் நடைபெறும் முன்பு வருசநாடு-வாலிப்பாறை இடையே தார் சாலை அமைக்க மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×