search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயல்விளக்கம்"

    • பண்ணைப் பள்ளியில் வரிசை நடவு முறை, வரப்பு பயிராக காராமணி, உளுந்து, சாமந்திப் பூ ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யலாம்.
    • உயிர் உரத்தினை ஒரு ஏக்கருக்கு 400 கிராம் வீதம் தெளிக்கலாம் என்று விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பி.செட்டிஅள்ளி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பண்ணைப் பள்ளி இனத்தின் கீழ் நெற் பயிரில் சுற்றுச்சூழல் பகுப்பாய்வு தொழில்நுட்பம் மற்றும் நானோ யூரியா குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் வழங்கப்ப ட்டது.

    இதில் வேளாண்மை உதவி இயக்குநர் அருள்மணி கலந்து கொண்டு கூறியதாவது, பண்ணைப் பள்ளியில் வரிசை நடவு முறை, வரப்பு பயிராக காராமணி, உளுந்து, சாமந்திப் பூ ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யலாம்.

    மேலும் பூச்சிகளை கண்டறிதல் மற்றும் இயற்கை எதிரிகளை அடையாளம் காணுதல், நீர் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை ஆகிய தொழில்நுட்பங்களை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    நானோ யூரியாவானது இலை வழியே ஊடுருவி பயிருக்கு தேவையான தழை சத்தினை சுற்றுச் சூழலுக்கு எவ்வித பாதிப்புமின்றி பயிருக்கு அளிக்கின்றது.

    ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி வீதம் ஒரு ஏக்கருக்கு 500 மில்லி அளவு போதுமான நானோ யூரியாவானது தக்காளி தாவரம் நடவு செய்து 25 நாட்களில் முதல் தவணையாகவும் 15 நாட்களில் இரண்டாம் தவணையாகவும் தெளிக்க வேண்டும் என்றும் மற்றும் அதன் பயன்கள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

    சூடோமோனாஸ், அசோஸ்பைரில்லம் ஆகிய உயிர் உரங்கள் கொண்டு நெல் நாற்றை மாற்று நடவு செய்யும்பொழுது நாற்றை 1 ஏக்கர் நாற்றுக்கு 1 கிலோ வீதம் நீரில் கலந்து வேர் நனைத்து மாற்று நடவு செய்ய வேண்டும்.

    உயிர் உரத்தினை ஒரு ஏக்கருக்கு 400 கிராம் வீதம் தெளிக்கலாம் என்று விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். அட்மா திட்ட உதவி மேலாளர்கள் தமிழ்செல்வி உழவன் செயலி பயன்பாட்டை குறித்து விளக்கமளித்தார்.

    கிருஷ்ண மூர்த்தி உயிர் உரம் பயன்படுத்தல் பற்றி செயல்விளக்கம் செய்து காட்டினார்.வேளாண்மை உதவி அலுவலர் மாரிமுத்து, உதவி பேராசிரியர் தெய்வணி மற்றும் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • விஷ உணவுகள் தயாரித்து அவைகள் எலிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வைத்து எப்படி கட்டுப்படுத்துவது.
    • பறவை தாங்கிகளை வைத்தும் எவ்வாறு எலிகளை கட்டுப்படுத்தலாம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே, கோடங்குடி கிராமத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை அட்மா திட்டதின் கீழ் எலி கட்டுப்பாடு மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி நடைப்பெற்றது.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கோடங்குடி கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை அட்மா திட்டதின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 40 விவசாயிகளுக்கு எலி கட்டுப்பாடு மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பையன் தலைமையில் நடைப்பெற்றது.

    இப்பயிற்சியில் எலிகளை கட்டுப்படுத்த எலி பொறிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் விஷ உணவுகள் தயாரித்து அவைகள் எலிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வைத்து எப்படி கட்டுப்படுத்துவது, ஆந்தை கூண்டு அமைத்தல் மற்றும் பறவை தாங்கிகளை வைத்தும் எவ்வாறு எலிகளை கட்டுப்படுத்தாலம் என்பது பற்றி பயிற்ச்சி அளிக்கப்பட்டது.

    இப்பயிற்சியில் விஷ உணவு தயாரிப்பது குறித்து செயல்விளக்கத்தை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ச.திருமுருகன் செய்து காண்பித்தார்.

    இப்பயிற்சியில் முன்னோடி விவசாயி சுந்தர் மற்றும் 40க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.

    இப்பயிற்சியை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் விஜய், மதுமனா மற்றும் அட்மா திட்ட உழவர் நண்பர் முத்தமிழன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள். நிகழ்ச்சியின் முடிவாக உதவி வேளாண்மை அலுவலர் ராஜகோபால் நன்றி கூறினார்.

    • ராயக்கோட்டை அருகே தீயணைப்பு துறையினரின் முகாம் நடந்தது.
    • மக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வை வழங்கினர்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை தீயணைப்பு மீட்பு பணிநிலையத்தின் சார்பாக தென் மேற்கு பருவமழை முன்னிட்டு, ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களுக்கு மழை, வெள்ள காலங்களில் நீர்நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில், நீர் சூழந்துள்ள இடங்களிலிருந்து, தங்களை எவ்வாறு பாதுகாத்துகொள்வது குறித்து செயல்விளக்கம் செய்து காட்டினர்.

    ராயக்கோட்டை-சூளகிரி சாலை, ராமாபுரம் கிராமம் அருகே உள்ள தென்பென்ணை ஆற்றில், அவர்களுக்கு செயல்முறை விளக்கம், மற்றும் ஒத்திகை பயிற்சி செய்து காண்பித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

    இதில் தீயாணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) செல்வம் தலைமையில் வீரர்கள் ஒத்திகை செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ×