என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பி.செட்டிஅள்ளி கிராமத்தில்நானோ யூரியா குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
- பண்ணைப் பள்ளியில் வரிசை நடவு முறை, வரப்பு பயிராக காராமணி, உளுந்து, சாமந்திப் பூ ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யலாம்.
- உயிர் உரத்தினை ஒரு ஏக்கருக்கு 400 கிராம் வீதம் தெளிக்கலாம் என்று விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பி.செட்டிஅள்ளி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் பண்ணைப் பள்ளி இனத்தின் கீழ் நெற் பயிரில் சுற்றுச்சூழல் பகுப்பாய்வு தொழில்நுட்பம் மற்றும் நானோ யூரியா குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் வழங்கப்ப ட்டது.
இதில் வேளாண்மை உதவி இயக்குநர் அருள்மணி கலந்து கொண்டு கூறியதாவது, பண்ணைப் பள்ளியில் வரிசை நடவு முறை, வரப்பு பயிராக காராமணி, உளுந்து, சாமந்திப் பூ ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யலாம்.
மேலும் பூச்சிகளை கண்டறிதல் மற்றும் இயற்கை எதிரிகளை அடையாளம் காணுதல், நீர் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை ஆகிய தொழில்நுட்பங்களை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
நானோ யூரியாவானது இலை வழியே ஊடுருவி பயிருக்கு தேவையான தழை சத்தினை சுற்றுச் சூழலுக்கு எவ்வித பாதிப்புமின்றி பயிருக்கு அளிக்கின்றது.
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி வீதம் ஒரு ஏக்கருக்கு 500 மில்லி அளவு போதுமான நானோ யூரியாவானது தக்காளி தாவரம் நடவு செய்து 25 நாட்களில் முதல் தவணையாகவும் 15 நாட்களில் இரண்டாம் தவணையாகவும் தெளிக்க வேண்டும் என்றும் மற்றும் அதன் பயன்கள் குறித்தும் எடுத்துரைத்தனர்.
சூடோமோனாஸ், அசோஸ்பைரில்லம் ஆகிய உயிர் உரங்கள் கொண்டு நெல் நாற்றை மாற்று நடவு செய்யும்பொழுது நாற்றை 1 ஏக்கர் நாற்றுக்கு 1 கிலோ வீதம் நீரில் கலந்து வேர் நனைத்து மாற்று நடவு செய்ய வேண்டும்.
உயிர் உரத்தினை ஒரு ஏக்கருக்கு 400 கிராம் வீதம் தெளிக்கலாம் என்று விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். அட்மா திட்ட உதவி மேலாளர்கள் தமிழ்செல்வி உழவன் செயலி பயன்பாட்டை குறித்து விளக்கமளித்தார்.
கிருஷ்ண மூர்த்தி உயிர் உரம் பயன்படுத்தல் பற்றி செயல்விளக்கம் செய்து காட்டினார்.வேளாண்மை உதவி அலுவலர் மாரிமுத்து, உதவி பேராசிரியர் தெய்வணி மற்றும் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்