search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எலி கட்டுப்பாடு மேலாண்மை பயிற்சி
    X

    எலி கட்டுப்பாடு மேலாண்மை பயிற்சி

    • விஷ உணவுகள் தயாரித்து அவைகள் எலிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வைத்து எப்படி கட்டுப்படுத்துவது.
    • பறவை தாங்கிகளை வைத்தும் எவ்வாறு எலிகளை கட்டுப்படுத்தலாம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே, கோடங்குடி கிராமத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை அட்மா திட்டதின் கீழ் எலி கட்டுப்பாடு மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி நடைப்பெற்றது.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கோடங்குடி கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை அட்மா திட்டதின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 40 விவசாயிகளுக்கு எலி கட்டுப்பாடு மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பையன் தலைமையில் நடைப்பெற்றது.

    இப்பயிற்சியில் எலிகளை கட்டுப்படுத்த எலி பொறிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் விஷ உணவுகள் தயாரித்து அவைகள் எலிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வைத்து எப்படி கட்டுப்படுத்துவது, ஆந்தை கூண்டு அமைத்தல் மற்றும் பறவை தாங்கிகளை வைத்தும் எவ்வாறு எலிகளை கட்டுப்படுத்தாலம் என்பது பற்றி பயிற்ச்சி அளிக்கப்பட்டது.

    இப்பயிற்சியில் விஷ உணவு தயாரிப்பது குறித்து செயல்விளக்கத்தை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ச.திருமுருகன் செய்து காண்பித்தார்.

    இப்பயிற்சியில் முன்னோடி விவசாயி சுந்தர் மற்றும் 40க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.

    இப்பயிற்சியை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் விஜய், மதுமனா மற்றும் அட்மா திட்ட உழவர் நண்பர் முத்தமிழன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள். நிகழ்ச்சியின் முடிவாக உதவி வேளாண்மை அலுவலர் ராஜகோபால் நன்றி கூறினார்.

    Next Story
    ×