search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செம்மண் கடத்திய"

    • அனுமதியின்றி செம்மண் வெட்டி கடத்தியது தெரியவந்தது.
    • போலீசார் தினேஷை கைது செய்து அவரிடமிருந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திருமல்வாடி பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு சின்னசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்து மர்மநபர் ஒருவர் செம்மண் வெட்டி டிராக்டரில் ஏற்றி கொண்டிருந்தார். உடனே போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அதே பகுதியைச் சேர்ந்த டிராக்டர் உரிமையாளரான தினேஷ் (வயது45) என்பவர் அனுமதியின்றி செம்மண் வெட்டி கடத்தியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து மாரண்டஅள்ளி போலீசார் தினேஷை கைது செய்து அவரிடமிருந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

    • டிப்பர் லாரியில் அனுமதியின்றி செம்மண் பாரம் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
    • போலீசார் டிரைவர் முனுசாமியை கைது செய்தனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே லாரிகளில் கனிமவளம் கடத்தப்படுவதாக பவானி தாசில்தார் ரவிச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன்பேரில் குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் பொன்னு சாமி, உதவியாளர் ரவிக்குமார், அம்மாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் பவானி - மேட்டூர் ரோட்டில் மாணிக்கம்பாளையம் பிரிவு அருகே வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது அவ்வழியே வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்ட போது அனுமதியின்றி செம்மண் பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது.

    விசாரணையில் லாரி டிரைவர் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை அடுத்த பல்லக்கா பாளையத்தை சேர்ந்த ஒசுவங்காட்டை சேர்ந்த முனுசாமி என்பதும், லாரி யின் உரிமையாளர் சங்க கிரியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

    நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த சிவசங்கர் மற்றும் ஜெகன் ஆகியோர் லாரியை வாடகைக்கு எடுத்து செம்மண்ணை கடத்தி சேலம், நாமக்கல் மாவட்ட பகுதிகளில் விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் முனுசாமியை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சிவசங்கர் மற்றும் ஜெகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×