search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிராக்டரில் செம்மண் கடத்தியவர் கைது
    X

    டிராக்டரில் செம்மண் கடத்தியவர் கைது

    • அனுமதியின்றி செம்மண் வெட்டி கடத்தியது தெரியவந்தது.
    • போலீசார் தினேஷை கைது செய்து அவரிடமிருந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திருமல்வாடி பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு சின்னசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்து மர்மநபர் ஒருவர் செம்மண் வெட்டி டிராக்டரில் ஏற்றி கொண்டிருந்தார். உடனே போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அதே பகுதியைச் சேர்ந்த டிராக்டர் உரிமையாளரான தினேஷ் (வயது45) என்பவர் அனுமதியின்றி செம்மண் வெட்டி கடத்தியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து மாரண்டஅள்ளி போலீசார் தினேஷை கைது செய்து அவரிடமிருந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×