search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை கலெக்டர்"

    • சென்னை கலெக்டர் அருணா நீலகிரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • சென்னை மாவட்டத்தின் புதிய கலெக்டராக ராஷ்மி சித்தார்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    சென்னை மாவட்ட கலெக்டர் அருணா நீலகிரி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், கூட்டுறவுத் துறை கூடுதல் செயலாளர் ராஷ்மி சித்தார்த் சென்னை மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் நில நிர்வாக இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    • குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    • உடற்தகுதியாக குறைந்தபட்ச உயரம் 152.50 சென்டிமீட்டர் ஆண்களும், 152 சென்டி மீட்டர் பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    இந்திய விமானப் படையில் அக்னி வீர்வாயு பதவிகளுக்கு சேர்வதற்கான வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.

    வயது வரம்பு 27.6.2003 முதல் 27.12.2006 வரையிலான காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும். கல்வித் தகுதியாக கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்துடன் இடைநிலை, 10-ம் வகுப்பு, பிளஸ்-2வுக்கு சமமான தேர்வில் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது பொறியியல் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ்) 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

    உடற்தகுதியாக குறைந்தபட்ச உயரம் 152.50 சென்டிமீட்டர் ஆண்களும், 152 சென்டி மீட்டர் பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

    இப்பதவிகளுக்கு சம்பளமாக மாதம் ரூ.30 ஆயிரம் மற்றும் பிற சலுகைகளும் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு ஊதிய உயர்வும் வழங்கப்படும். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் http://agnipathvayu.cdac.in என்ற இணைய தளத்திலும் உடனடியாக விண்ணப்பிக்கவும்.

    மேலும் விவரங்களுக்கு 044-24615160 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • பிழைக்க ஏதுமின்றி குழந்தைகளுடன் தவிக்கிறோம் என்று முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்தார்.
    • 2 பேருக்கு தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை கலெக்டர் அருணா பெற்றுக்கொடுத்தார்.

    சென்னை:

    மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் சம்பவம் நடந்தது. இதற்கிடையே, மணிப்பூரில் பல ஆண்டுகளாக வசித்து வந்த தமிழகத்தை சேர்ந்த ஜோசப் என்பவர் அங்கிருந்து தப்பி வந்தார். அவர் சென்னை தலைமை செயலகத்திற்கு வந்து வாழ்வாதார உதவி கோரினார்.

    பிழைக்க ஏதுமின்றி குழந்தைகளுடன் தவிக்கிறோம் என்று முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்தார். அதில், மணிப்பூர் கலவரத்தில் தங்களது வீட்டை தீ வைத்து எரித்து, அடித்து விரட்டி விட்டதாக உருக்கமாக தெரிவித்திருந்தார். பிழைக்க வழியின்றி தவிக்கும் தங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

    தாய் மண் தங்களை அரவணைக்கும் என்ற நம்பிக்கையில் தமிழகம் வந்த ஜோசப், 9 பேர் கொண்ட குடும்ப உறுப்பினர்களை நடுத்தெருவில் கொண்டு வந்து விட்டோமே என்று நெஞ்சுருகி நின்றிருந்தார். அவரின் குடும்ப நிலைமை தினத்தந்தியில் படத்துடன் செய்தியாக வெளியானது. இந்த செய்தியை பார்த்ததும், சென்னை மாவட்ட கலெக்டர் அருணா உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார். தாயுள்ளத்துடன் அவர்களை அணுகினார்.

    அவர்களின் குறைகளை, கனிவுடன் கேட்டறிந்தார். உடனடியாக அவர்களுக்கு என்ன செய்ய முடியுமோ, அதற்கான நடவடிக்கையில் இறங்கினார். குடும்பத்துடன் வந்திருந்த அவர்களுக்கு தங்கும் இடத்திற்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கினார். அதற்கு அவர்கள் செங்குன்றத்தில் சிலரின் உதவியால் தங்கியுள்ளோம், எங்களுக்கு வாழ்வதாரத்திற்கான ஏற்பாடுகளை செய்து தந்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து 2 பேருக்கு தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பை கலெக்டர் அருணா பெற்றுக்கொடுத்தார். உணவு, உடைகளை வழங்கினார். மேலும் அவர்கள் ஒரு மாத காலத்திற்கு உணவு தேவைக்காக ரேஷனில் இருந்து பொருட்கள் பெற்று தரப்படும் என்ற உறுதியை அளித்தார்.

    அடுத்தடுத்து உதவிகளை வழங்கிய கலெக்டர் அருணாவுக்கு அவர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். பிழைக்க சென்ற மாநிலத்தில் இருந்து தப்பி வந்த தங்களுக்கு அன்னை தமிழ்நாடு வாரி அணைத்து வரவேற்றதை கண்டு அவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.

    இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் அருணா கூறும்போது, 'அவர்களின் நிலையை பார்க்கும்போதும், கேட்கும்போது கஷ்டமாக இருந்தது. உதவி வேண்டி நின்றார்கள், தமிழக அரசு அவர்களுக்கு உடனடி தேவையை பூர்த்தி செய்து இருக்கிறது. 2 பேருக்கு வேலை வாங்கி கொடுத்திருக்கிறோம். அவர்கள் திங்கட்கிழமையில் இருந்து பணிக்கு செல்வார்கள்.

    மேலும் ஒருவருக்கும் வேலை வாங்கி கொடுக்க இருக்கிறோம். உடைகள், தங்குமிடத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம். அவர்களின் குழந்தைகள் படிப்பதற்கு ஏற்பாடு செய்து தருகிறோம் என்று கூறியிருக்கிறோம். ஒரு மாதத்திற்கான உணவு பொருட்கள் ரேஷனில் இருந்து வழங்க இருக்கிறோம். என்ன தேவையோ, அதை கேளுங்கள் தருகிறோம் என்று உறுதியை கொடுத்து அவர்களின் வாழ்வாதார பயத்தை போக்கி இருக்கிறோம்' என்று கூறினார்.

    • பயிற்சியில் சேரும் அனைவருக்கும் விலையில்லா சீருடை, பாடப்புத்தகம், மிதிவண்டி, காலணி உள்ளிட்டவையும் இலவசமாக வழங்கப்படும்.
    • தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புபவர்கள் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்படும் சேர்க்கை உதவி மையத்தை அணுகி சேர்க்கை மேற்கொள்ளலாம்.

    சென்னை:

    சென்னை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிண்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 31-ந்தேதி (திங்கட்கிழமை) வரை பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத 8 தொழிற்பிரிவுகளில் நடைபெறுகிறது.

    இந்த பிரிவுகளில் 8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து வயதினரும் சேர்க்கை பெறலாம். பயிற்சிக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. பயிற்சி காலத்தில் உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ. 750, பயிற்சியில் சேரும் அனைவருக்கும் விலையில்லா சீருடை, பாடப்புத்தகம், மிதிவண்டி, காலணி உள்ளிட்டவையும் இலவசமாக வழங்கப்படும்.

    பயிற்சியின்போது தொழிற்சாலைகள் மூலம் இன்டன்ஷிப் பயிற்சி மற்றும் இன்பிளான்ட் பயிற்சி அளிக்கப்படுவதுடன் பயிற்சி முடிந்தவுடன் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புபவர்கள் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்படும் சேர்க்கை உதவி மையத்தை அணுகி சேர்க்கை மேற்கொள்ளலாம். கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள தொலைபேசி: 044-22510001, கைப்பேசி: 94990 மற்றும் 8248738413 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×