search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னிமலை முருகன் கோவிலில்"

    • பாலபிஷேக பெருவிழா நாளை விசாக நட்சத்திரத்தில் நடக்கிறது.
    • பக்தர்கள் அனைவருக்கும் மலை மீது அன்னதானம் வழங்கப்படுகிறது.

    சென்னிமலை:

    சென்னிமலையில் எழுந்தருளி உள்ள புகழ்பெற்ற முருகன் ேகாவில் சுப்பிரமணிய சாமிக்கு வருடந்தோறும் ஆடி மாதம் விசாக நட்சத்திரத்தில் சென்னிமலை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பாக பாலாபிஷேக விழா நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு 56-வது ஆண்டு பாலபிஷேக பெருவிழா நாளை (வியாழ க்கிழமை) விசாக நட்சத்திரத்தில் நடக்கிறது.

    இதையொட்டி நாளை காலை 7.40 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான பால் குடங்கள் புறப்பட்டு மேள, தாளம் முழங்க காவடி ஆட்டத்துடன் சென்னிமலை நகரில் 4 ரத வீதிகளிலும் திருவீதி வலம் வந்து மலைமீதுள்ள முருகன் கோவிலை படி வழியாக கொண்டு செல்லப்படுகிறது.

    தொடர்ந்து காலை 10 மணிக்கு மலை மேல் சுப்பிரமணி சாமிக்கு பால் அபிஷேகம் நடக்கிறது. பால் அபிேஷகத்தினை தொடர்ந்து சிறப்பு அலங்கா ரம், மகா தீபாராதனையும் இதையடுத்து மதியம் 1.30 மணிக்கு உற்சவ மூர்த்தி பிரகார உலாக்காட்சி நடக்கிறது. பக்தர்கள் அனைவருக்கும் மலை மீது அன்ன தானம் வழங்கப்படுகிறது.

    பாலாபிஷேக பெரு விழா ஏற்பாடுகளை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் செய்து வரு கின்றனர்.

    • வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் காயர் மேட் போட்டுள்ளனர்.
    • இது வெயிலுக்கு இதமாக இருப்பதாகவும் அதிக சூடு தாக்குவது இல்லை எனவும் பக்தர்கள் தெரிவித்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடக்கிறது, மேலும் தொடர்ந்து திருவிழா நடந்து வருகிறது.

    உள்ளூர், வெளியூர் பக்தர்கள் பள்ளி விடுமுறை தினம் என்பதால் குழந்தை களுடன் வந்து பூஜைகளில் பங்கேற்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

    இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள், வாகனங்களை நிறுத்தி விட்டு வெகு தூரம் நடக்க வேண்டும்.

    இந்த இடத்தில் தார் ரோடு வெட்ட வெளியாக உள்ளதால், தற்போது வெயில் தாக்கத்தில், சூடாகி நடக்க பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

    மேலும் கோவில் பரிகாரத்திலும் நடைபாதை கற்கள் சூடாகி, பக்தர்களின் பாதங்களை பதம் பார்த்தது.

    இதனால் குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டனர்.

    இதையறிந்த கோவில் நிர்வாகம், வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் காயர் மேட் போட்டுள்ளனர்.

    இது வெயிலுக்கு இதமாக இருப்பதாகவும் அதிக சூடு தாக்குவது இல்லை எனவும் பக்தர்கள் தெரிவித்தனர்.

    ×