search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadi Visakha"

    • பாலபிஷேக பெருவிழா நாளை விசாக நட்சத்திரத்தில் நடக்கிறது.
    • பக்தர்கள் அனைவருக்கும் மலை மீது அன்னதானம் வழங்கப்படுகிறது.

    சென்னிமலை:

    சென்னிமலையில் எழுந்தருளி உள்ள புகழ்பெற்ற முருகன் ேகாவில் சுப்பிரமணிய சாமிக்கு வருடந்தோறும் ஆடி மாதம் விசாக நட்சத்திரத்தில் சென்னிமலை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பாக பாலாபிஷேக விழா நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு 56-வது ஆண்டு பாலபிஷேக பெருவிழா நாளை (வியாழ க்கிழமை) விசாக நட்சத்திரத்தில் நடக்கிறது.

    இதையொட்டி நாளை காலை 7.40 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜ வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து ஆயிரக்கணக்கான பால் குடங்கள் புறப்பட்டு மேள, தாளம் முழங்க காவடி ஆட்டத்துடன் சென்னிமலை நகரில் 4 ரத வீதிகளிலும் திருவீதி வலம் வந்து மலைமீதுள்ள முருகன் கோவிலை படி வழியாக கொண்டு செல்லப்படுகிறது.

    தொடர்ந்து காலை 10 மணிக்கு மலை மேல் சுப்பிரமணி சாமிக்கு பால் அபிஷேகம் நடக்கிறது. பால் அபிேஷகத்தினை தொடர்ந்து சிறப்பு அலங்கா ரம், மகா தீபாராதனையும் இதையடுத்து மதியம் 1.30 மணிக்கு உற்சவ மூர்த்தி பிரகார உலாக்காட்சி நடக்கிறது. பக்தர்கள் அனைவருக்கும் மலை மீது அன்ன தானம் வழங்கப்படுகிறது.

    பாலாபிஷேக பெரு விழா ஏற்பாடுகளை கைத்தறி மற்றும் சாய சாலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் செய்து வரு கின்றனர்.

    ×