search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னிமலை முருகன் கோவிலில் வெயிலின் தாக்கத்தை குறைக்க காயர் மேட்
    X

    சென்னிமலை முருகன் கோவிலில் வெயிலின் தாக்கத்தை குறைக்க காயர் மேட்

    • வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் காயர் மேட் போட்டுள்ளனர்.
    • இது வெயிலுக்கு இதமாக இருப்பதாகவும் அதிக சூடு தாக்குவது இல்லை எனவும் பக்தர்கள் தெரிவித்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடக்கிறது, மேலும் தொடர்ந்து திருவிழா நடந்து வருகிறது.

    உள்ளூர், வெளியூர் பக்தர்கள் பள்ளி விடுமுறை தினம் என்பதால் குழந்தை களுடன் வந்து பூஜைகளில் பங்கேற்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

    இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள், வாகனங்களை நிறுத்தி விட்டு வெகு தூரம் நடக்க வேண்டும்.

    இந்த இடத்தில் தார் ரோடு வெட்ட வெளியாக உள்ளதால், தற்போது வெயில் தாக்கத்தில், சூடாகி நடக்க பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

    மேலும் கோவில் பரிகாரத்திலும் நடைபாதை கற்கள் சூடாகி, பக்தர்களின் பாதங்களை பதம் பார்த்தது.

    இதனால் குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டனர்.

    இதையறிந்த கோவில் நிர்வாகம், வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் காயர் மேட் போட்டுள்ளனர்.

    இது வெயிலுக்கு இதமாக இருப்பதாகவும் அதிக சூடு தாக்குவது இல்லை எனவும் பக்தர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×