என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » செட்டிக்குளம்
நீங்கள் தேடியது "செட்டிக்குளம்"
ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் அரசு மேல் நிலைப்பள்ளியின் தேசிய பசுமைப்படை மாணவர்களின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் அரசு மேல் நிலைப்பள்ளியின் தேசிய பசுமைப்படை மாணவர்களின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் நாகமணி தொடக்கி வைத்தார். மாணவ மாணவிகள் மரம் வளர்ப்போம், மழை பெறுவோம், பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் சுற்றுச் சூழலைக் காப்போம், பாலிதின் பயன்பாட்டைக் குறைப்போம் போன்ற வாசகங்கள் அடங்கிய பாதகைகளை ஏந்தியும் கோசகங்கள் எழுப்பியும் செட்டிகுளம் முக்கிய வீதிகள் வழியாத வந்த பேரணி பள்ளி வளாகத்தில் முடிந்தது.
பின்னர் பள்ளி மாணவ மாணவி களிடையேசுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி ஆகிய போட்டி கள்நடத்தப்பட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு இந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்ரேசன் நிறுவனத்தின் திருச்சி மண்டலத்தின் விற்பனை மேலாளர்கள் தினேஷ், சாரங்கி பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் மணி,ஜுனியர் ரெட் கிராஸ் மாவட்ட கன்வீனர் ராதா கிருஷ்ணன், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கினைப்பாளர் ராமன், சாரண சாரணிய அமைப்பின் மாவட்ட உதவி செயலர் தனபால், பசுமைப் படை ஒருங்கினைப்பாளர் பாஸ்கர் அகியோர் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு குறித்து சிறப்புரை ஆற்றினர்.
செட்டிக்குளம் பொதுப் பணித்துறை அலுவலக சாலையில் உள்ள 8 கடைகளின் பூட்டுகளை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் செட்டிக்குளம் பொதுப் பணித்துறை அலுவலக சாலையில் ஒர்க்ஷாப், வக்கீல் அலுவலகம், பில்டிங் டிசைன் அலுவலகம் உள்பட வரிசையாக கடைகள் உள்ளது. நேற்று வேலை முடிந்து கடை மற்றும் அலுவலகத்தை பூட்டி விட்டுச் சென்ற உரிமையாளர்கள் இன்று காலை வழக்கம்போல கடைகளை திறக்க வந்தனர். அப்போது செல்வநாயகம் என்பவரின் டிங்கரிங் ஒர்க்ஷாப், வக்கீல் சுதர்சன் என்பவரின் அலுவலகம், வீரமணிகண்டன் என்பவரின் ரேடியேட்டர் கடை உள்பட 8 கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன.
உள்ளே சென்று பார்த்த போது ஒவ்வொரு கடையிலும் கல்லா பெட்டியில் உள்ள ரூ.200 முதல் ரூ.2 ஆயிரம் வரையிலான ரொக்கப்பணம் கொள்ளை போய் இருந்தது. நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் அடுத்தடுத்து 8 கடைகளிலும் கைவரிசை காட்டிச் சென்றது தெரியவந்தது.
இதுபற்றி கடைகளின் உரிமையாளர்களின் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
செட்டிக்குளம் சந்திப்பில் இருந்து பொதுப்பணித்துறை அலுவலகம் செல்லும் சாலை எப்போதும் ஆழ்நடமாட்டம் உள்ளபகுதியாகும். இரவிலும் இங்கு தொழிலாளர்கள் நடமாட்டம் இருக்கும். இந்த பகுதியில் ஒரே நேரத்தில் 8 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த துணிகர செயலில் ஈடுபட்ட கொள்ளையர்களை கண்டுபிடிக்க அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்பதை கண்டறிய போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X